சனி, நவம்பர் 27, 2010

கஞ்சி போடும் கலை


ஆடைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம்;; அதிலும் புடவை தனி ரகம்; அதில் பல variety உள்ளது ;சிந்தடிக் , பட்டு, காட்டன் -இந்த மூன்று பிரிவுகளில் எல்ல விதங்களும் அடங்கி விடும்.. இதில் சிந்தடிக் பொதுவாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகிறது. விலை குறைவு. முக்கியமாக maintanence ஈஸி. ஆனால் ஒரு டிசைன் வந்தால் எங்கெங்கு நோக்கினும் அதே புடைவை தான் இருக்கும்; feelings of india!!!!!!!!!!!!!!!!!!!!.
பட்டு வசதி உள்ளவர்கள் மட்டுமே கட்டுவார்கள் என்பது எல்லா கால கட்டத்திலும் ஒரு அபிப்பிராயம். ஓரளவிற்கு அது உண்மையும் கூட. நம்ம ஊர் சீதோஷண நிலைமைக்கு கொஞ்சம் கூட சரிப்படாது. வயதானவர்கள் கட்டுவது என்றும் பெரும்பாலும் ஒதுக்கப் படுகிறது. designs மற்றும் கலர் combination பாரம்பரியமாகத்தான் இருக்கும். இப்போது நிலைமை மாறி வருகிறது. இது கொஞ்சம் costly item. maintanance கொஞ்சம் சிரமம்.
கம்பீரத்துடன் கூடிய கண்ணியமான தோற்றம் தரும் எனும் அளவுகோல் வைத்துப் பார்த்தால் காட்டன் புடைவைகள்தான் என்றும் முதலில் வருவது.இதற்கு சிறந்த உதாரணம் நமது மதிப்புக்குரிய திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள். what a graceful look she had in cotten sarees!
அருமையான, unique designes என்றாலே காட்டன் புடைவைகள்தான். vvvvvvvvow!நான் சொல்ல வருவது புடவை வகைகளைப் பற்றி அல்ல. ஒரு build up கொடுத்தால்த் தானே attractive ஆக இருக்கும் !சரி மேட்டருக்கு வருகிறேன். மிகப் பலபேர் ,காட்டன் maintain பண்ணுவது especially கஞ்சி போடுவது மகா கஷ்டமான விஷயம் என்றே காட்டனை ,ஆசையாக இருந்தாலும் வாங்குவதே இல்லை என்பார்கள். முக்காலும் உண்மை. நிறையா மெனக்கெட வேண்டும் தான்; ஆனா look வருமே ?? என்ன செய்ய? பேஷன் மக்கா பேஷன் ; இந்த கஞ்சி போடும் வித்தையைத் தான் நான் சொல்லப் போறேன். நான் செய்யும் முறை இது.
இப்ப கஞ்சி மாவு, reviva, spray starch - எல்லாமே கிடைக்குது. ஆனா நாமே தயாரித்து போடும் கஞ்சியே நன்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன். ஒ.கே.
மைதாமாவு அல்லது ஜவ்வரிசி மாவு தேவை.
ஜவ்வரிசியை மிக்ஸ்யில் அரைத்துக் கொள்ளுங்கள்.
ஏதோ ஒரு மாவை நீர்க்க தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு புடைவைக்கு ஒரு மேஜைக் கரண்டி[one table spoon] என்பது அளவு.
அடுப்பில் வைத்து ,கட்டி தட்டாமல் கிளறி நன்கு கொதிக்க விடவும்.
கஞ்சி பதம் வந்ததும் இறக்கவும். ஆறியதும் வடிகட்டவும்.
எப்போதும் காய்ந்த புடைவைகளைதான் கஞ்சி போடவேண்டும்.
1/4 பக்கட் நீரில் 2 கரண்டி கஞ்சியை ஊற்றி கலந்து விட்டு புடைவையை விரித்து நன்கு மூழ்கும் படி அமிழ்த்தி,அமிழ்த்தி இரண்டு மூன்று முறை எடுத்து தொங்க விடவும். பிழிய வேண்டாம். பிழிந்தாலும் அழுத்தி பிழியக்கூடாது.
நல்ல டார்க் கலர் புடைவைகளுக்குப் போடும்போது கஞ்சியில் 1-2 சொட்டு நீலம் கலந்து பிறகு நனைத்து எடுக்கவும்.
சாயம் போகும் புடைவைகளை கடைசியில் நனைக்கவும்.
கஞ்சியில் ஒரு துளி perfume கலந்துவிட்டால் வாசனைப் புடைவை கிடைக்கும்.
முடிந்தவரை புடைவைகளை வெயிலில் சுருக்கம் இல்லாமல் நன்கு விரித்து உலர்த்துவது நல்லது.
ஒரு பாயை தரையில் விரித்து அதன் மேல் காயப்போடலாம்.
கொடியில்நீர் வடியும் வரை தொங்கவிட்டு பின் விரித்து காயப் போடுவது சுலபம்.
பத்து நிமி கழித்து ஒவ்வொரு மடிப்பையும் உதறி விடலாம்.
அயர்ன் பண்ணக் கொடுக்கும் போது நீங்களே புடைவையை நன்கு விரித்து மடித்துக் கொடுங்கள். இதனால் புடைவை நன்குஇஸ்திரி செய்யப்படும்.
நான் சொன்ன அளவு பொதுவானது. மொடமொடப்பு வேண்டும் என்றால் 1/2 ts
கஞ்சி அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு முறை கட்டி விட்டு மடிக்காமல் தொங்க விட்டால் மூன்று, நான்கு முறை கூட கட்டலாம்.
எதற்கு இவ்வளவு சிரமம் என்று நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது.
கஞ்சி போடத் தேவை இல்லாத half காட்டன் புடைவைகளும் இப்ப மார்க்கட்டில் கிடைக்குது. ஆனால் pure காட்டன் feel வராது.
லைட்யாக சிந்தடிக் புடைவைகளுக்கு கூட கஞ்சி போட்டு கட்டலாம். அனுபவம்.
புடைவைகளுக்கு கஞ்சி போடும் போது ஜாக்கட்டுகளை மறந்து விடாதீர்கள்.
அதற்கும் கஞ்சி பாத் கொடுத்தால் சரி matchஆகும். [மொடமொடப்பில்]
ஊதற சங்கை ஊதி விட்டேன். பிறகு உங்கள் சாய்ஸ்.

1 கருத்து:

Vasthu Natarajan சொன்னது…

பரவாயில்லை நன்றாக உள்ளது உங்கள் பகிர்வு. நன்றி .