ஞாயிறு, நவம்பர் 21, 2010

கோளறு பதிகம்

ஏழாவது பாடல்

செப்பிள முலைநன் மங்கை
ஒருபாக மாக
விடைஏறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும்
முடிமேல் அணிந்த என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம்
மிகையான பித்தும்
வினையான வந்த நலியா
அப்படி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-

செப்பைப் போன்ற தனங்களையுடைய உமாதேவியார் ஒருபக்கத்தில் அமர இடபத்தை ஊர்ந்து அருளுகின்ற செல்வராகிய இறைவர் திங்களையும், கங்கையையும் முடியில் தரித்து அடியேனுடைய உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் வெப்பம், குளிர்ச்சி, வாதம், பித்தம் மற்ற தீவினைகளும் தொண்டர்களை அதிகம் வருத்தாது நல்லனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: