வியாழன், நவம்பர் 25, 2010

கோளறு பதிகம்

ஒன்பதாவது பாடல்

பலபல வேட மாகும்
பரன் நாரி பாகன்
பசுஎறும் எங்கள் பரமன்
சலமக ளோடே ருக்கு
முடிமேல் அணிந்த என்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும்
மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
மிகப்புலவான திருவுருவங்களோடு கூடிய பரமரும் பெண்ணொரு பாகரும் விடையை ஊர்கின்றவரும் அடியோங்களதுமேலோனுமாகிய இறைவர், கங்கையோடு எருக்கமலரையும் திருமுடியில் தரித்து அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் நான்முகனும், திருமாலும், வேதங்களும் தேவர்களும் அடிக்கடிவரும் காலமும், கடலும், மழையும் ஆகிய இவை எல்லாமும் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: