திங்கள், நவம்பர் 22, 2010

இடியாப்பம் பாயா

இடியாப்பம்
பச்சரிசி ---------------------------4 கப்
புழுங்கல் அரிசி ----------------1 கப்
செய்முறை-
இரண்டு அரிசிகளையும் ஒன்றாக கலந்து 4- 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின் நன்கு கழுவி களைந்து நிழலில் காய விடவும்.
சிறிது ஈரம் இருக்கும் போதே மிசினில் மாவாக அரைக்கவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்க வேண்டும்.
கடாயை காய வைத்து கொஞ்சம், கொஞ்சமாக மாவைப் போட்டு வறுத்து எடுக்கவும். சிம்மில் வைத்து செய்யலாம்.
கோலம் போட்டால் பிசிறு இல்லாமல் கம்பி இழுக்க வர வேண்டும்.
பின் கட்டி இல்லாமல் சலித்து வைக்கவும்.
தேவையான போது தேவையான அளவு மாவை எடுத்து சிறிது உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரை தெளித்துப் பிசையவும்.
இடியாப்ப குழாயில் போட்டு இட்லித் தட்டில் பிழியவும்.
6-7 நிமி வெந்து விடும்.


இதற்கு super combination பாயா !!
சென்னையில் இது ஒரு famouse dish.
இதற்கு ஒரு தனி fans இருக்கிறார்கள்.
சில குறிப்பிட்ட கடைகளும் உண்டு.
o.k. இப்ப நாம் எப்படி இதை செய்யலாம் என்று பார்ப்போம்.


பாயா

ஆட்டுக்கால் ---------------------------2
சின்ன வெங்காயம் --------------------ஒரு சிறிய கப்
தக்காளி [மீடியம் ]----------------------2
இஞ்சி ------------------------------------ஒரு சிறிய துண்டு
பூண்டு ------------------------------------6 பல்
பட்டை ------------------------------------1 துண்டு
லவங்கம் ---------------------------------2
ஏலக்காய் ---------------------------------2
பச்சை மிளகாய் -------------------------2
பொட்டுக் கடலை -----------------------2 ts
தேங்காய் -------------------------------1 மூடி
எண்ணை -------------------------------3ts

செய்முறை-
ஆட்டுக்காலை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டவும்.
தேங்காய் கடலையை ஒன்றாக அரைத்து ஒன்றாம், இரண்டாம் பால் எடுக்கவும்.
குக்கரில் எண்ணையை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
அதில் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு சிறிது உப்பிட்டு வதக்கவும்.
அரைத்த விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் ஆட்டுக்காலைச் சேர்த்து சிறிது வதக்கி இரண்டாம் பாலை [2 டம்ளர் ]சேர்த்து குக்கரை மூடவும்.
5-6 விசில் விடவும்.
பின் குக்கரைத் திறந்து முதல் பாலை ஊற்றி 3 நி கொதிக்க விடவும்.
சுவையான பாயா ready.

கருத்துகள் இல்லை: