ஞாயிறு, நவம்பர் 28, 2010

ஒரு நாள்

அந்த ஒரு நாள்; ஒரு விடுமுறை நாள்; வாரத்தின் கடைசி நாள்; அட! அதுதாங்க ஞாயித்துக் கிழமைங்கோ சரி விசயத்திற்கு வரேன். நான் சலிப்புடன் , என் கணவர் மகா சலிப்புடன் எழுந்து இருப்போம் போல் தெரிகிறது. இரண்டு நாளாக மப்பும் மந்தாரமாய் இருந்தது போல் கூட இன்று இல்லை. பின் எப்படி இந்த mood வந்தது என்று தெரிய வில்லை. பேப்பர் படித்து , கொஞ்சம் போல் பேசி, அங்கு நின்று, இங்கு நின்று எப்படியோ காலை டிபன் நேரம் வந்தது. நான் computer முன். என் கணவர் "என்ன செய்யப் போறே? என்று கேட்டார். நான் ரொம்ப diplomatica "என்ன வேண்டும்"? என்றேன். "மாவு இருந்தால் தோசை + முட்டை தோசை போதும்" என்றார். ; done என்றேன். என்ன நினைத்தாரோ தானே சட்னி அரைப்பதாக சொன்னார். நான் தோசை ஊற்ற, அவர் சட்னி அரைக்க காலை உணவு முடிந்தது.
அடுத்தது lunch; அப்போதுதான் எனக்கு உதித்தது .ஞாயிறு என்றாலே காலை
8-9o'clock nonveg வாங்கி வந்து விடுவார். அந்த routin இன்று மாறிவிட்டதே? என்ன
என்றால் "ரொம்ப bore; hotle போலாம்" என்றார்; அதுவும் done!வெளியில் எட்டிப் பார்த்தேன். climatum ஒ.கே. next எல்லோர் வீட்டிலும் இருக்கும் பிரச்சனை; வேலைக்காரி ? பக்கத்துப் பிளாட்டில் இருப்பவளைக் கூப்பிட்டு என் வேலையை முடிக்க சொல்லி ..............முடிந்தது. I am simply great.
As usual வெளியே முடிக்க வேண்டிய மூன்று வேலைகளையும் club பண்ணிட்டேன். அடுத்தது எந்த hotle? பேப்பரில் தேடல்; நெட்டில் தேடல்; [நாங்களும் மாடர்ன்தாங்க] discussion abt distance, taste, area, crowd. அதுவும் done.
முதல் வேலைக்கு almost close பண்ணும் நேரத்திற்கு correct ஆக போய்விட்டோம்.
அதுவும் முடிந்தது. Thanks to that gentle man.இதுவரை everything goes smooth.
இரெண்டாவது நாங்கள் போனது நீண்ட நாளாக போகணும் என்று நினைத்துக் கொண்டு இருந்த ஒரு famouse department store. கடையைத் தேடி, கார் பார்க்கிங் தேடி போனோம். நாங்கள் நினைத்த மாதரி காய்கறிகள் "fresh" ஆக இல்லை. ஞாயிறு என்பதால் சரில்லையா? என்றால் லாஜிக் உதைக்குது. அன்றுதானே நிறையாப் பேர் ஷாப்பிங் வருவார்கள்? இதுக்குப் போய் இவ்வளவு தூரம் ,பெட்ரோல் செலவு பண்ணிட்டு ,டிராபிக்யில் வந்தோம் என்று ஆகிவிட்டது.
வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் சிறிய கடையிலேயே நல்லா கிடைக்குமே!
மூன்றாவது main target- ஹோட்டல் -அதுவும் தேடிட்டுத் தான் போனோம். அங்கேயும் கார் பார்க்கிங் பிரச்சனை. ஹோட்டலும் ஒரு cut rdயில் தான் இருக்குது. அதிலேயும் கார் பார்க்கிங் full. அடுத்த கட்டில்தான் நிறுத்த முடிந்தது.
உள்ளே போனால் நிறையாபேர் waiting. enterance, steps, sofa -எங்கு பார்த்தாலும் மக்கள் ; மக்கள்;மக்கள்; அட!கைக்குழந்தை கூட இருக்குங்க. என்னத்தைச் சொல்ல? உலகம் எங்கேயோ போயிட்டு இருக்கு.
பெரிய உணவு விடுதி என்று சொல்ல முடியாது. at a time 30-35 members சாப்பிடலாம். low roof with embedded ceiling lights. அதனால் மெல்லிய வெளிச்சம்; ஒ.கே.ஒ.கே.atmosphere creat பண்ணராங்களாம். வழக்கம் போல் சீருடை [uniform]
கழுத்துப்பட்டி [tie] அணிந்து நமக்கு சேவை புரிய காத்திருக்கும் பணியாளர்கள் .
இந்த விடுதிக்கு நீண்ட பாரம்பரியம் இருக்குதாம். மூன்றாவதோ, நான்காவதோ தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தற்போது நடத்துகிறார்களாம். பல ஊர்களில் இதன் கிளைகள் இருக்குதாம். nonveg-briyani இதன் speciality. அதற்கு காரணம் அவர்கள் போடும் மசால் சாமான்களாம்; அதன் கலவை ரகசியம் தலைமுறை தலைமுறையாக சொல்லப்பட்டு, பாதுகாக்கப் படுகிறதாம். மற்ற உணவகங்கள் போல் இல்லாமல் இங்கு பிரயாணிக்கு சீரக சம்பா அரிசி உபயோகிக்கிறார்களாம். இந்த கடை துவங்கி 50++வருடங்கள் ஆகி விட்டதாம். என்னடா கடை கதை சொல்லுகிறேன் என்று நினைக்கிறீர்களா? என்ன செய்ய? இடம் கிடைக்காமல் நின்று கொண்டு இருக்கும் போது அங்கு எழுதப்பட்டு இருந்ததை படித்தே ஆக வேண்டும். நான் படித்துக் கொண்டும், வருபவரையும், போகிறவறையும் பார்த்துக் கொண்டும் ,என்னவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் மூடு கெட்டுச்சு கதை கந்தல்; திடீர் என்று எங்கேயோ கேட்டது ஒரு குரல்; பார்த்தால் ஒருவர் கையில் ஒரு நோட் வைத்துக் கொண்டு பெயர் சொல்லி கூப்பிடுகிறார்.
அது என்னவென்றால் நாம் வந்தவுடன் [காத்திருப்பவர்கள்] பெயரையும், எத்தனை பேர்யென்பதையும் சொல்லி வைத்தால், இடம் இருக்கும் போது அவர் கூப்பிடுவாராம். என் கணவர் " என்ன செய்யலாம் "? என்றார். பசி ; நேரமும் ஆகி விட்டது. நானும் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருக்கும் போது மறுபடியும் எங்கேயோ கேட்ட குரல்; இம்முறை ஒலிபெருக்கியில்[mike] பார்த்தால் பார்சல் எண் ; அது வங்கிகளில் இருப்பதைப் போல் திரையிலும் காட்டப் படுகிறது. ஓடு; இந்த கவுண்டருக்குப் போனால் அங்கேயும் waiting; ஒரு வழியாக பார்சல் எண் பெற்றுக் கொண்டோம். எண் 87 திரையில் 75 எண்தான் இருக்குது; மறுபடியும் waiting; எல்லாம் படித்து முடித்து விட்டேன். so lookingaround கைக்குழந்தையுடன் ஒரு தம்பதி; உட்காரக் கூட இடம் இல்லை; baby அழுகுது; mummy சமாதானம் செய்யுது.daady முழிக்குது;
எங்கள் பக்கத்தில் ஒரு குடும்பம் எங்களுக்கு முதலிலே வந்து waiting; அதில் குர்தாவில் இருக்கும் வயதானவர் "earlyஆக வரலாம் என்றேனே; இப்பப் பாரு ?காத்துக் கொண்டு நிற்கிறோம்; அடுத்த முறை முதலிலேயே வரணும்" என்கிறார்.
ஒரு ஐந்து வயது பெண் குழந்தை " அம்மாஇங்கு நாமே சமைத்துச் சாப்பிடவேணுமா" என்று அம்மாவிடம் கேட்கிறது. அம்மாவிடம் no answer.
ரொம்ப நேரமாக பார்சல் அழைப்பு இல்லை. அந்த கவுண்டரைச் சுற்றி இன்னும் கூட்டம். போனால் அங்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்.
"எவ்வளவு நேரம் நிற்பது? பார்சல் வருமா; வராதா?" என்று கேட்கிறார். பணியாளர் "நான் என்ன சார் செய்வது? ஞாயிற்றுக் கிழமைகளில் இப்படித்தான்" என்று சொல்ல , "தெரியுதுதானே; அந்த நாளில் மட்டும் அதிகம் prepare பண்ண வேண்டியதுதானே" என்று கஷ்டமர் கேட்கிறார்; but no reply.
ஒரு மேஜை அருகில் சாப்பிடுபவர்கள் எப்போ எழுந்திருப்பார்கள் என்று அவர்கள் பின்னாலே ஒரு குடும்பம் காத்து நிற்கிறது; அவர்கள் எழுந்த அடுத்த வினாடி இவர்கள் பூந்து உட்கார்ந்து விட்டார்கள். இம்முறை சபாரி போட்ட வயதானவர் ஒருவர் "20 நிமிடமாக அந்த சின்ன பையன் சாப்பிடுகிறான்; நாம காத்துக் கொண்டு இருக்கிறோம் என்ற courtsy கூட இல்லாமல் பெற்றவர்கள் ஜாலியாக பேசிட்டு இருக்காங்கள்; useless fellows" என்று கடுப்படிக்கிறார்.
ஒரு வழியாக பார்சல் பைகள் வந்தது. குரலும் கூப்பிட துவங்கி விட்டது. 97 வது எண் கூப்பிட்டார்கள். எங்களது 87 எண். என் கணவர் விடுவாரா? போனார்; கேட்டார். அதற்குள் எங்கள் பார்சலும் வந்து விட்டது. ஒரு வழியாக ஒரு மணி நேரம் கழித்து வெளியில் வந்தோம். பின் வீடு வந்து சாப்பிட்டு களைத்து தூங்கி விட்டோம். எப்படியோ ஒரு நாள் போய் விட்டது . ஆனாலும் ஒன்று சொல்ல வேண்டும் - பிரியாணி நன்றாக இருந்தது. இல்லை என்றால் நொந்து இருப்போம்.
இதிலிருந்து ஒன்று தெரிகிறது- ஞாயிறுகளில் பெரும்பான்மையான மக்கள் வீட்டில் அதிகம் சமைப்பது இல்லை? இதுகூட நல்ல system? ?????????

1 கருத்து:

HEMA சொன்னது…

appada.............super briyani