திங்கள், நவம்பர் 15, 2010

சாம்பார்ப் பொடி

தனியா --------------------------------1/4 கி
மிளகாய் வற்றல் --------------------1/4 அல் 1/2 கி [உங்கள் விருப்பம்]
விரலி மஞ்சள் [நீளம்] ---------------15
மிளகு ---------------------------------50 கிராம்
வெந்தயம் ---------------------------50 கிராம்
துவரம் பருப்பு ----------------------100 கிராம்
கடலைப் பருப்பு --------------------100 கிராம்
உளுத்தம் பருப்பு --------------------75 கிராம்
செய்முறை-
பொருட்களை நன்கு வெயிலில் காய வைக்கவும்.
மிசினில் அரைக்கவும்.
அல்லது எண்ணையில்லாமல் வெறும் வாணலியில் கொஞ்சம்
சூடு வரும்வரை வறுத்து அரைக்கவும்.
அரைத்தவுடன் மூடக்கூடாது.
அரைத்தவுடன் பொடியை ஒரு பேப்பரில் பரத்தி வைக்கவும்.
நன்கு ஆறியவுடன் எடுத்து வைக்கவும்.
கை படாமல் வேண்டும் போது ஒரு ஈரமில்லா கரண்டியில் எடுக்கவும்.

மற்றொரு முறை-
மேலே சொன்ன பொருட்கள் + + +
சீரகம் ------------------------50 கிராம்
பெருங்காயம் ---------------2 to 3 ts
கட்டிப் பெருங்காயம் என்றால் ஒரு சிறு துண்டு
கருவேப்பிலை -----------------ஒரு கைப்பிடி
உப்பு -------------------------------கொஞ்சம்
இது போட்டால் வீடே மணக்கும்.

முதல் வகைப் பொடியில் உளுந்து வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.

உப்பும் கல்லுப்பாக [crystal salt] இருந்தால் அதன் சுவையே தனி.
உப்பு சேர்த்து அரைத்தால் ரொம்ப நாள் பூச்சி, வண்டு வராமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை: