சனி, ஏப்ரல் 30, 2011

சந்திராஷ்டமம்

ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் வந்தால் அது சந்திராஷ்டம்,
அதாவது ரிஷப ராசிக்கு எட்டாம் ராசி தனுசு ராசி.
தனுசு ராசியில் மூலம், உத்திராடம், உத்திராடம் முதல் பாதம் ஆகிய 3 நட்சத்திரங்களும் இருக்கும்.
அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொரு மாதமும் வரும்.
அந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் மன உளைச்சல், கோபம் போன்றவை அதிகம் ஏற்படும்.
சந்திரன்தான் எல்லாவற்றிற்கும் உரியவன். மனசுக்கு உரியவன். செயல்பாடுகளை கட்டுப்படுத்துபவன்.
எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது எதிர்மறையான செயல்கள் அதிகரிக்கும்.
அதனால்தான் சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்கள். வாகனத்தை இயக்கும்போது பொறுமையை கடைபிடியுங்கள் என்று அறிவுறுத்துகிறோம்.
ஆனால் ஒரு சிலருக்கு சந்திராஷ்டமம் நல்ல பலன்களை அளிக்கும். அவர்களுக்கு பிறக்கும்போதே லச்னத்திற்கு 8, 6, 12ல் மறைந்தவர்களுக்கு எல்லாம் சந்திராஷ்டம் நன்றாக இருக்கும்.

செவ்வாய், ஏப்ரல் 26, 2011

கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா




விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர்

கோவிலில், சித்திரை திருவிழா 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை, 

சாகைவார்த்தலுடன் துவங்கியது.

6-ந் தேதி பந்தலடி தோப்பில் தாலிகட்டும் நிகழ்ச்சியும்,

அன்று முதல்மகாபாரத சொற்பொழிவும் நடந்து வருகிறது.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில்

மடப்புரம் சந்திப்பிலிருந்து

30.கி.மீதூரத்தில் உள்ளது கூவாகம் கிராமம்.

இங்குள்ள அரவாணிகளின் தெய்வமாகிய

கூத்தாண்டவர் ஆலயத்தில்

இங்கு ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை

முன்னிட்டு நடக்கும்திருவிழாவில்,

 பல மாநிலங்களிலிருந்தும் அரவாணிகள் மற்றும்

பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்வர்.





இந்தாண்டு, சித்திரை திருவிழாவின் துவக்க நாளான


புதன் கிழமைமாலை 4.30 மணிக்கு

கூவாகம், நத்தம், சிவலிங்ககுளம், கொரட்டூர்,

வாணியங்குப்பம், தொட்டி ஆகிய கிராம மக்கள்

மேள, தாளங்கள் முழங்ககூழ் கலயங்களுடன்,

ஊர்வலமாக வந்து கூத்தாண்டவர்கோவில்

பின்புறமுள்ள மாரியம்மன் கோவில் முன் கூடினர்.

கூழ்கலயங்கள் வைக்கப்பட்டு

அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,

ஆராதனைசெய்யப்பட்டது.

பின் பக்தர்கள் எடுத்து வந்த கூழ் ஒன்றாக கலந்து

 பக்தர்களுக்குவழங்கப்பட்டது.





6ம் தேதி) முக்கிய பிரமுகர்களுக்கு தாலிகட்டுதல்

நிகழ்ச்சிநடை பெற்றது.





புராணம் கூறுவது

மகாபாரதப் பெருங்காதையில் அர்ஜானனால் கவரப்பட்டு

கர்ப்பமாக்கப்பட்டவேடுவப் பெண்ணான

நாகக்கன்னியின் மகன் அரவான்.

குருஷேத்திர யுத்தத்தில் பாண்டவர் பக்கம் வெற்றி கிடைக்க

 ‘எந்தகுற்றமும் இல்லாத சகல லட்சணமும் பொருந்திய

ஒரு மனிதப்பலிதங்கள் தரப்பில்

முதல் பலியாக வேண்டும்’ என ஆருடம் கூறுகிறது.

பாண்டவர் தரப்பில் இவ்வாறு சாமுத்திரிகா லட்சணம்

பொருந்தியவர்களாகக் காட்டப்படுபவர்கள் மூவர்.

அர்ஜானன், அவன் மகன் அரவான், ஸ்ரீகிருஷ்ணர்.

அர்ஜானனும், கிருஷ்ணரும் தான்

இந்த போருக்கான முகாந்திரம்

உடையவர்கள் என்பதால்

அரவானைப் பலியாக்க முடிவு செய்து

அவனைஅணுகுகின்றனர்.

அரவானும் பலிக்கு சம்மதித்தாலும்,

தனக்கான இறுதி ஆசையாக ஒரு

பெண்ணுடன் ஒரு நாள் இல்லற வாழ்வை துய்த்த

பின்பே தான்பலிக்களம் புகுவேன் என உரைக்கிறான்.

வேந்தர் குலம் முதல் வேடுவர் குலம் வரை

எந்தப் பெண்ணும் அதனைஏற்கவில்லை.

இறுதியாக ஸ்ரீகிருஷ்ணரே மோகினி அவதாரமெடுத்து

அரவானைமணக்கிறார்.

ஒரு நாள் இல்லற வாழ்விற்குப்பின்

 பலிக்களம் புகுகிறான் அரவான்.

விதவைக் கோலம் பூணுகிறாள் மோகினி.

இந்த சாராம்சத்தின் அடிப்படையில் மோகினியாய்

தம்மை உணரும்அரவாணிகள் கூடி வரும் இடமே

கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா.

சித்திரா பௌர்ணமிக்கு மூன்று நாட்களுக்கு முன்பே

அரவாணிகள்விழுப்புரத்திற்கு வந்துவிடுகின்றனர்.

அனைத்து விடுதிகளும் அரவாணிகளால் நிரம்பிவிடுகின்றன.

எங்கு நோக்கிலும் அரவாணிகள்.

இந்த நிகழ்வு ஓர் சமயம் சார்ந்த நிகழ்வாக இருப்பினும்

இந்தியாவின் பலபாகங்களில் இருந்துவரும் அரவாணிகளை

ஒன்றினைக்கும் விழாவாகவேஅமைகிறது.

அரவாணிகள் தங்கள் தோழிகளை சந்திக்கவும்,

உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளவும்,

 நலம் விசாரிக்கவும்,

தங்கள் கலைகளை வெளிப்படுத்தும்இடமாகவும்

இது அமைவதால், சமுதாயத்தின் கேலிப் பார்வைகள்,

ஒதுக்குதல் கூவாகத்தில் இல்லை.




சித்திரா பௌர்ணமியன்று கூத்தாண்டவராகிய அரவானைக்

கணவனாகதம்முள் வரித்துக் கொண்டு

கோயில் அர்ச்சகர் கையால் தாலி கட்டிக்

கொள்கின்றனர் அரவாணிகள்.

விடியவிடியத் தங்களது கணவனான

அரவானை வாழ்த்தி பொங்கல்வைத்து

கும்மியடிச்சு  பாட்டமும், ஆட்டமுமாக இரவு கழிகிறது.

பொழுது மெல்ல புலரத் துவங்க,

அதுவரை ஆனந்தமாய் இருந்தஅரவாணிகள்

முகத்தில் மெல்ல சோக ரேகைகள் படரத் துவங்குகின்றன.

அரவானின் இரவு களியாட்டம் முற்றுப் பெற்று

களப்பலிக்குப்புறப்படுகிறான்.

 நன்கு அலங்கரிக்கப்பட்ட தேரில்

மரத்தால் ஆன அரவான் சிற்பம்

வைக்கப்பட்டு, கூத்தாண்டவர் கோயிலிலிருந்து

நான்கு கி.மீ தூரத்தில்

உள்ள கொலைக் களமான

அமுதகளம் கொண்டுசெல்லப்படுகிறான்.

வழியெங்கும், சோகத்துடனும்,

அழுத கண்ணீருடனும் அரவாணிகள்.


'மதுர கோட்ட வீதியிலே

மன்னர் தானும் போகயில-

அட வளரும் நானும் போகயில

கோயில் வாசல் தாண்டிப் போகயில -

கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா

கரும் கூந்தல் அவுந்திட பாத்திங்களா

அம்பது லட்சமும் தாலி கட்டி -

 நல்ல ஒம்பது லட்சமும் தாலி கட்டி

வச்சி படைக்காத நம்ப கூத்தாண்டவர்

வடக்க போறார் பாருங்கடி'

என வடக்கே உயிர் விடப்போகும்

அரவானைப் பார்த்து ஒப்பாரிவைக்கின்றனர்.

அமுதகளத்தில் அரவான் தலை இறக்கப் படுகின்றது.

தன் தாலி அறுத்து, பூ எடுத்து,

வளையல் உடைத்து பின்

வெள்ளைப்புடவை உடுத்தி

விதவை கோலம் பூணுகின்றனர்.





18- ந் தேதி     திங்கட்கிழமை மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும்,

19-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு

சாமி கண் திறத்தலும்.நடந்தது.

 செவ்வாய்க்கிழமை மாலை கூத்தாண்டவர் கோயிலில்



ஏப். 20: உ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

ஏழு தலைமுறை பூசாரிகள் அரவானிகளுக்கு தாலி கட்டினர்.





அப்போது அரவானிகள் தங்களை மணப்பெண்களைப் போல்

அலங்கரித்து  கொண்டிருந்தனர்.

இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

அரவானிகள் மட்டுமல்லாமல்

நேர்த்திக் கடனுக்காகவும் ஆண், பெண்கள்

பேதமின்றி தாலி கட்டிக் கொண்டனர்.

 குழந்தை வரம் வேண்டிவேண்டிக்கொண்டவர்களும்,

 குழந்தை பிறந்தவுடன்

அதற்கு ஆண்டுதோறும்

தாலி கட்டும் வழக்கத்தையும் கொண்டுள்ளனர்.

 20ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு,

அரவாண் சிரசுக்கு கண் திறந்து,

மாலை அணிவிக்கப்பட்டது.

கோயில் அருகில் வடப்புறம் சகடையில்

30 அடி உயர கம்பம் நட்டு

வைக்கோல்பிரி சுற்றப்படும்.

இதுவே அரவான் திரு உருவம் அமைக்கும்

அடிப்படை பணியாகும்.

பின் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு,

30 அடி உயரமுள்ள தேரில்,

வைக்கோல் பிரியால் சுற்றி,

உடற்பாகங்கள் பொருத்தி,

திருவுருவம்அமைக்கப்பட்டது.

 கீரிமேடு கிராமத்திலிருந்து புஜம், மார்பகம், 

நத்தம் கிராமத்திலிருந்து கை, கால்கள்,

சிவலிங்ககுளம் கிராமத்திலிருந்து வெண்குடை,

தொட்டி கிராமத்திலிருந்து கடையாணி கொண்டு வரப்பட்டு

 காலை 7.40மணிக்கு தேரோட்டம் நடந்தது.

அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

"கோவிந்தா' கோஷம் முழங்கதேர் இழுத்தனர்.
.
திருநங்கைகளும் தேர் செல்லும் பாதையில்

சூடம் மற்றும் 108 தேங்காய்வைத்து

குழுவாக சுற்றி வந்து கும்மியடித்து

 தேங்காய் உடைத்தும்

நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டத்தின் போது திரண்டிருந்த

அரவாணிகள் உள்ளிட்ட

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

பூமாலைகள், பழங்கள், தானியங்களை


அரவாண் மீது வாரியிறைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

இவ்விழாவுக்காக வந்த அரவானிகள்

விழுப்புரம் நகரில் தங்கி

பல்வேறுநிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதில் மிஸ் கூவாகம் உள்பட கலை நிகழ்ச்சிகள்,

மருத்துவ முகாம்

உள்ளிட்டவை நடைபெற்றன.


விழுப்புரம் வட்டம், மரகதபுரம் கிராமத்திலிருந்து வந்த

 ஐயப்பன் (41),தன்னுடைய 32 வயதில்

 புதுவை அரசு மருத்துவமனையில் குடல் அறுவை

சிகிச்சை செய்து அதில் பிளாஸ்டிக் குடல் பொருத்தப்பட்டது.

பின்னர் செப்டிக் ஆனதால்

உயிர் வாழ்வது கடினம் என்று கூறியதால்

கூத்தாண்டவர் கோயிலில்

வேண்டிக் கொண்டதால் குணமாகியுள்ளார்.

எனவே அன்று முதல் பிரார்த்தனை செய்து கொண்டு

 9 ஆண்டுகளாகதொடர்ந்து கோயிலுக்கு வரும்

 டெய்லர் ஐயப்பன், தனக்கு 2 பெண்ணும்,

ஒரு மகனும் உடல் ஊனமுற்ற மனைவியும்

உண்டு என்று தெரிவித்தார்.

இப்படி அரவானிகள் மட்டுமல்லாமல்,

அனைத்துத் தரப்பு மக்களும்

கோயிலுக்கு வந்தனர்.

இருப்பினும் அரவானிகளின் எண்ணிக்கையே அதிகம்.



தேரோட்டத்தின் போது

விவசாயிகள் வேண்டுதலின் பேரில்

விளைபொருட்களை கூத்தாண்டவர் மீது வீசி

சூடம் ஏற்றி வழிபட்டனர்




அப்போது சுற்றி நின்று கும்மி அடித்து

அரவாணிகள் ஆடிப்பாடிமகிழ்ந்தார்கள்

அப்போது புது மணப்பெண்கள் போல் தங்களை

ஆடை, அணிகலன்களால்அலங்கரித்துக்கொண்டு

கூத்தும், கும்மாளமாக இருந்த திருநங்கைகள்,

தேர் அழிகளம் புறப்பட்டவுடன்

சோகமாய் உணர்ச்சி வசப்பட்டு

ஒப்பாரிவைத்து  அழுதனர்

வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு

தேரை பின்தொடந்தார்கள். 



நடுப்பகல் 1.30 மணிக்கு

அழிகளம் எனப்படும் நத்தம் கிராம பந்தலுக்கு

சென்று அடைந்தது

அங்கு அரவான் களப்பலி கொடுக்கும்

 நிகழ்ச்சி நடை பெற்றது.

அரவான் களப்பலி கொடுத்த பின்

 அரவாணிகள் தங்கள் தலையில்

சூடியிருந்த பூக்களை பிய்த்து எறிந்தனர்.,

நெற்றியில் உள்ள பொட்டை  அழித்தனர்.

பூசாரிகள், திருநங்கைகள் கையிலிருக்கும்

 வளையல்களை உடைத்து,.

தாலிகளை அறுத்தெறிந்தனர்.

பின்னர் கிணறுகளுக்கு சென்று

 தலையில் வைத்துள்ள பூக்களை

பிய்த்தெறிந்து கிணற்றில் தலைமூழ்கி

வெள்ளாடை அணிந்து விதவை

கோலம் பூண்டு

சோகத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு

புறப்பட்டுசென்றனர்.

மாலை 4 மணியளவில்,

 பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில்,

"உறுமைசோறு' படையல் நடந்தது.

இதை வாங்கி சாப்பிட்டால்,

 குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பிக்கை

உள்ளதால் ஏராளமான பக்தர்கள்

முண்டியடித்து வாங்கினர்.

 இரவு 7 மணிக்கு ஏரிக்கரை காளி கோவிலில்,

அரவாண் உயிர்ப்பித்தல்நடந்து,

மீண்டும் பந்தலடிக்கு அரவாண் சிரசு எடுத்து வரப்பட்டு,

பூக்களால்அலங்காரம் செய்யப்பட்டு,

 நத்தம், தொட்டி வழியாக,

கோவிலுக்குசென்றடைந்தது

 17-ம் நாள் 21-ந் தேதி விடையாத்தியும்,

22-ந் தேதி தர்மர் பட்டாபிஷேகமும்   நடை பெற்றது

இத்துடன் இவ்விழா முடிவடைந்தது.
 பொன். வாசுதேவனின் அகநாழிகையில்  
'அரவாணிகளின் வாழ்வும், தாழ்வும்' என

 தலைப்பில் மிக அருமையாக

அவர்களது  இன்றைய நிலைமையை

உள்ளது உள்ளபடி கூறியுள்ளார்.
படிக்க வேண்டிய ஒரு விசியம்

திருநங்கை தினம்

திருநங்கைகளின் சமூக பாதுகாப்பை கருதி

அவர்களின் சிறப்பைவலியுறுத்தும் வகையில்


ஏப்ரல்15-ம் நாளை ஒவ்வொரு வருடமும்

கொண்டாட தமிழக அரசு

 மார்ச் 1, 2011 அன்று அரசாணை பிறப்பித்துள்ளார்.

ஏப்ரல் 15, 2008ம் ஆண்டு தமிழக அரசால்

திருநங்கைகளுக்கு நலவாரியம்

அமைக்கப்பட்டது.

திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில்

நலவாரியம் அமைத்த நாளை

திருநங்கைகள் தினமாக அறிவிக்க வேண்டும்

என்ற திருநங்கைகளின்

கோரிக்கையை ஏற்று

தமிழக அரசு இந்த நாளை அறிவித்துள்ளது.

திங்கள், ஏப்ரல் 25, 2011

விடுமுறை சுற்றுலா ----- கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்






கோடையும் வந்தாச்சு; லீவும் விட்டாச்சு;
விருந்தினர்களும் வரத் துவங்கி விட்டார்கள்.
இனி என்ன???? ஊர் சுற்ற ப்ளான் பண்ண வேண்டியதுதான்
குழந்தைகளுக்கு பிடித்த மாதிரியும், USEFUL ஆக இருக்கும் படியும்,
கையைக்கடிக்காமலும் இருக்கும்படியான இடங்களாக இருக்க
வேண்டுமே!!!
நான் அறிந்த சில இடங்களைப் பற்றி இனி எழுத இருக்கிறேன்.
என்னுடைய முதல்  CHOICE பறவைகள் சரணாலயங்கள்.
கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே!!!!!!!!!!!!!!


கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

குந்தன்குளம் பறவைகள் சரணாலயம் நாங்குநேரி தாலூக்காவில்

திருநெல்வேலிக்கு 33 கி.மீ. தொலைவில் உள்ளது.

இயற்கைக் காடுகளும் குளமும் நிறைந்த ஊர்


நான்குநேரி அருகில் உள்ள கூந்தன்குளம் 1994-ம்பறவைகள்

சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.

டிசம்பர் மாதக் கடைசியில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து

தங்கும்.


இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி மாதம்

கூடு கட்ட துவங்கும்.

ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,

நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு

வருகின்றன

வலசை வந்து ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து

பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூந்தன்குளம் பறவைகள்

சரணாலயம் பரப்பளவிலும் உயிர்சூழலிலும் வேடந்தாங்கலைவிட

பெரியது.

கூந்தன்குளத்தில் மற்றுமொரு சிறப்பு…இங்கு வலசை வரும்

பறவைகளுக்கும் ஊர் மக்களுக்கும் உள்ள உறவு.

 பல கிலோமீட்டர் கடந்து வீடு தேடி விருந்துக்கு வரும்

பறவைகளை கூந்தன்குளம் மக்கள் உபசரிக்கும் விதம்

உலகமக்களுக்கெல்லாம் பாடம்

கூந்தங்குளம் உலகின் முக்கிய பறவை சரணாலயங்களில் ஒன்று.

230க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக

பறவையியல் அறிஞர்கள் கணக்கெடுத்துள்ளனர்.

நாங்குநேரி அருகிலுள்ள கூந்தங்குளத்தைச் சுற்றிலும் 150க்கும்

மேற்பட்ட குளங்கள் உள்ளன. கூந்தங்குளம் என்று பெயரளவில்

அழைக்கப்பட்டாலும் இப்பறவைகள் சரணாலயம்

கன்னியாகுமரியிலிருந்த திருநெல்வேலி வரை விரிந்து பரவியுள்ளது.

இரு மாவட்டங்களிலும் இரை தேடுதல், கூடு கட்டுதல், முட்டையிட்டு

குஞ்சு பொரித்தல் ஆகிய பறவைகளின் வாழ்க்கைச் செயல்பாடுகள்

பல்வேறு ஊர்களில் நடைபெற்று வருகின்றன.

நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊருக்கு பறவைகள் வந்து

செல்வதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பறவைகளின் வாழ்க்கைக்கு இம்மக்கள் சிறிய தொந்தரவைக்கூட

செய்வதில்லை.

சூழலியல் கல்வியை அனுபவ அறிவு மூலம் முழுமையாகக் கற்ற

மனிதர்கள், இந்த ஊரில் வாழ்கின்றனர் என்றும் இதைக்

குறிப்பிடலாம். யாரும் சத்தம் போடக் கூடாது.

தீபாவளிப் போன்ற பண்டிகை நாட்களில்கூட இங்கு பட்டாசு

வெடிப்பதில்லை.


யாரும் வேட்டையாடக் கூடாது.

பறவை வேட்டையாடுபவர்கள் யாராவது தென்பட்டால் இந்த ஊர்

மக்கள் கடுமையான தண்டனை தருகிறார்கள்.

தமிழகத்திலுள்ள வேறு பறவை சரணாலயங்களில் இல்லாத

அதிசயம் என்னவென்றால், வலசை வரும் பறவைகள் இந்த ஊர்

மக்களோடு மக்களாக ஒட்டிப் பழகுவதுதான்.

ஊரின் மையம் போல அமைந்துள்ள 100 ஏக்கர் பரப்புள்ள குளத்தைத்

தவிர ஊரில் உள்ள வேப்ப மரம், கருவை மரம், இதர உயர்ந்த

மரங்களில் மஞ்சள் மூக்கு நாரைகள் கூடு கட்டியிருப்பது அதிசயம்.

ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் கூட்டைப் பார்க்கலாம்.

மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் மரங்கள் மேல் பறவைகள்

குஞ்சு பொரித்திருப்பதை நன்றாகப் பார்க்க முடியும்.





 4-5 அடி உயரமுள்ள மஞ்சள் மூக்கு நாரைகள் தெருவில்,

குட்டைகளில் நடந்து செல்வதையும் காண முடியும்

கூந்தன்குளத்துக்கு கூழக்கடா, பூநாரை, கரண்டிவாயன்,

நீர்காக்கை(மூன்று வகை), செங்கால்நாரை, பாம்புதாரா, செண்டுவாத்து,

புல்லிமூக்கு வாத்து, நத்தை கொத்திநாரை,

அரிவாள் மூக்கன்(மூன்று வகை), நாமக்கோழி,. கானாங்கோழி,

சாம்பல்நாரை, சாரை நாரை, முக்குலிப்பான், சம்புகோழி,

பட்டைத்தலை வாத்து என 174 வகையான பறவைகள் வருது.

சைபீரியாவிலிருந்து ஏராளமான வாத்து வகைகள் வரும்.

மற்ற பறவைங்க எல்லாம் குஜராத் போன்ற இந்திய

பகுதிகளிலிருந்து வருகிறவைதான்.




பூநாரை ஆயிரக்கணக்கில் வரும் அதோட வெளிர்சிவப்பு நிறமும்

உயரமும் கொள்ளை கொள்ளும் அழகு!

ஊருக்கு நடுவுல இருக்கிற இந்த குளமும் குளத்தை சுற்றி

வளர்ந்திருக்கிற மரங்களும்தான் பறவைகளின் வாழ்விடம்.



35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கருமேனி ஆத்துல இருந்து

குளத்துக்கு தண்ணீர் வருது.





தை அமாவாசைக்கு வரும் பறவைகள் ஆடி அமாவாசை முடிந்ததும்

கிளம்பிப்போகும்.

சீஸன் நேரத்துல ஊர்பக்கம் வந்தா மூக்கைப்பொத்திக்கிட்டுதான்

நடமாட முடியும்.

காரணம் பறவைகளோட எச்சம்தான்.பறவைகள் அந்த அளவுக்கு

கூட்டம் கூட்டமாக வரும்.

பறவைகள் எச்சமிடுகிற குளத்து தண்ணீரை ஊர்மக்கள்

விவசாயத்திற்கு காலங்காலமாக பயன்படுத்திட்டு வர்றாங்க.

அவங்க நம்பிக்கை பொய்க்காம மூணு மேனி மகசூல் நிச்சயமா

கிடைக்குது” என்கிறார்கள்.



பறவைகளசரணாலயம் திருநெல்வேலிக்கு அருகில் இருக்கிறது.   
திருநெல்வேலி தென்னக ரயில் பாதையில் ஒரு முக்கிய சந்திப்பு ஆகும்.
அதனால் தென் இந்தியாவின் பல முக்கியநகரங்களுடன்    இணைக்கப்பட்டு
உள்ளது.
அங்கு இருந்து சரணாலயத்திற்கு செல்ல  பேருந்து வசதி இருக்கிறது.
தினமும் சுமார் 5000  பேர் வருகிறார்களாம்.
திருநெல்வேலிக்கு13 கி கிழக்கில்  ஆரியகுளம்எனும்மற்றொரு  பறவைகள்
சரணாலயம் இருக்கிறது.

திருநெல்வேலியில் இருந்து 58  கிமி தூரத்தில்

 கலக்காடு- முண்டந்துரை   புலிகள் சரணாலயம் இருக்கிறது.    
.
    அருள்மிகு நெல்லைஅப்பர் ஆலயம் தரிசிக்க வேண்டிய இடம்.

திருநெல்வேலி அல்வா,
முந்திரி போட்ட மட்டன் பிரியாணி
 என்று நிறைய விசியங்கள்இருக்கு.
ஜாலியாகப் போயிட்டு வாங்க.

வியாழன், ஏப்ரல் 21, 2011

வருமானவரி செலுத்த புதியவசதி

வருமான வரி-
அடித்தட்டு மக்களுக்கு இதைப் பற்றி கவலை இல்லை;
மேல்த்தட்டு மக்களுக்கு ஒரு விதமான கவலை;
பக்காவாக பொய் கணக்கு தயார் பண்ண வேண்டும்??????
இதில் மாட்டிக்கொண்டு, பைசா குறையாமல் வரிகட்டும் அரசாங்க
பணிஆட்கள்;
இந்த பிரிவில் இரண்டு category -
டேபிளுக்கு மேல் சம்பளம் வாங்கி ஒழுக்கமாய் வரி கட்டுபவர்கள்
டேபிளுக்கு கீழ் சம்பளம் வாங்கி வரி ஏய்ப்பு செய்பவர்கள் 
whatever  it  is ,  மார்ச் மாதம் வரி கட்டும் மாதம்
இந்த மாதத்தில் வரி செலுத்துபவரின் கவலையே வங்கியில் காத்திருக்க
வேண்டும் என்பதுதான்;
வங்கிக்குப் போய் காத்திருந்து படிவம் வாங்க வேண்டும்
அதை பூர்த்தி செய்து [பொய்கணக்கும், மெய் கணக்கும்  CONFUSE 
ஆகக் கூடாது] 
  
கொடுத்து வரி செலுத்த வேண்டும்.
அதற்குரிய ரசீதை பெற வேண்டும்; 
பின் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்
இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்குது.
அதுவும் வரி கட்டறவங்க கடைசி நேரத்தில் தான் பறப்பாங்க;
கடைசி நேரத்தில் வங்கிகளில் போய் மணிகணக்காய் காத்திருக்க
வேண்டியது இல்லை.
A .T .M  களிலேயே வருமான வரி செலுத்தும் வசதியை மத்திய அரசு
முதன் முதலாக அறிமுகம் செய்துள்ளது.
பொதுவாக மார்ச் கடைசியில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகம்.
அதற்காக கூடுதல் மையங்கள் அமைக்கப் பட்டும் முடியலை.
அதனால், கடந்த டிசம்பர் மாதம் 'இனி அனைத்து தேசிய வங்கிகளிலும்
வரி செலுத்தலாம்' என ரிசர்வு வங்கி அறிவித்தது. 
BUT NO USE;
ஆக்சிஸ்  வங்கி  [ AXIS  BANK ] மட்டும் கடந்த பிப்ரவரி மாதம் ஏ. டி . எம் 
மூலம் வரி செலுத்தும் முறையை அறிவித்தது.
இதனால் காத்திருந்து வரி செலுத்த வேண்டிய நிலை பெரும் அளவு
குறைந்தது.

அதனால் தற்போது முதல் கட்டமாய்    யூனியன்  பேங்க் ஆப் இந்தியா

[Union Bank Of India]  இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
65,00,000  டெபிட் கார்ட் வசதி கொண்டுள்ள இந்த வங்கியின்
2600 ஏ.டி.எம். களில் இந்த நவீன வசதி கொண்டு வரப்பட்டு உள்ளது.
இனி படிப்படியாக மற்ற வங்கிகளிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப் படும் என்று மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
இதன் சேவையை பயன்படுத்த
வங்கி இணய தளத்தில் தங்கள் TAN, மற்றும்  PAN எண்கள்  மூலம் பதிவு
செய்து கொள்ள வேண்டும்.
அப்போது ஒரு எண் தரப்படும்.
அந்த எண் உதவியுடன் ஏ. டி.எம் மில் வரி செலுத்தும் தேர்வை அழுத்த வேண்டும்.
அதை அழுத்தியதும் PAN எண்ணை குறிப்பிட வேண்டும்.
பின் செலுத்த வேண்டிய வரித் தொகையைக் குறிப்பிட்டு ஒப்புதல்
கொடுத்தால், கணக்கில் இருந்து நிமிடத்தில் பணம் பிடிக்கப் பட்டு
வருமான வரித் துறைக்குச் செல்லும்.
செலுத்தியதற்கான ரசீது எண்   தரப்படும்.  
இந்த முறையில் கடைசி நேர  டென்ஷன் குறையும்.
காத்திருக்கும் நேரமும் மிச்சமாகும்.
வரி செலுத்துவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
அரசின் இந்த வசதியை நல்ல முறையில் பயன்படுத்தி பயன் பெறுவோம்.
   

புதன், ஏப்ரல் 20, 2011

ரசங்கள்

 வித விதமான ரசங்கள் இருக்குது.
 
ஒவ்வொன்றும் ஒரு சுவை.
 
அந்த வரிசையில் இன்று ஒரு புது வகை ரசம்-
 
 
தேங்காய்ப் பால் ரசம்-
 
தேவையான பொருட்கள்-
 
தேங்காய் ------------ 1
சிறிய பழுத்த தக்காளி ---- 4
சின்ன வெங்காயம் ------ 5 --6
பூண்டு ------------- 4 --5
மிளகு ----------- 1  ts
சீரகம் ----------- 1  ts
எண்ணை அல் நெய் ----3  ts 
உப்பு ---------- தேவையான அளவு
மல்லித் தழை ----கொஞ்சம்
 
செய்முறை-
 
தேங்காய்த் துருவி சிறிது அரைத்து , பிழிந்து முதல் பால் எடுத்து தனியே வைக்கவும்.
இரெண்டாவது , மூன்றாவது பால் எடுத்து கலந்து வைக்கவும்.
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து தட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், பூண்டு -பொடிக்கவும். [ பிரெஷ் ஆக பொடித்து செய்தால் மணமாக இருக்கும்]
தக்காளியை பொடியாக நறுக்கவும்.
வாணலியில் எண்ணை அல் நெய் விட்டு வெங்காயம், தக்காளி வதக்கவும்.
பின் பொடித்து வைத்ததை போட்டு வதக்கவும்.
இதனுடன் இரெண்டாவது, மூன்றாவது பாலை ஊற்றி கொதிக்க விடவும்.
உப்பு சேர்க்கவும்.
கொதித்ததும் இறக்கி வைத்து முதல் பாலை கலக்கவும்.
மேலே கொத்துமல்லி தலை தூவவும்.
 
கவனிக்க வேண்டியது -
தேங்காய் பால் கொதிக்கும் போது தீ தணிவாக இருக்க வேண்டும்.
அதிக நேரம் கொதிக்க கூடாது.
கொதி வந்து   அடுப்பில்       2 -3  நி இருந்தால் போதும்.

செவ்வாய், ஏப்ரல் 19, 2011

கர்ப்பிணிப் பெண்களுக்கு

குழல் இனிது; யாழ் இனிது என்பர்

மக்கள் சொல் கேளாதவர்.

குழந்தைச் செல்வம் மிகப் பெரிய செல்வம்.

கரு உண்டாகி இருப்பதை அறிந்த கணமே

பெண்ணானவள்; தாயாக மாறுவதே

பெண்மையின் மகத்துவம்;

  அதுவே அவளின் தனித்துவம்.

பிரசவம் ஒவ்வொரு பெண்ணிற்கும் மறு பிறப்பு.

இன்றைய கால கட்டத்தில் சுகப் பிரசவம்

அரிதாகிக் கொண்டு இருப்பதாக சொல்லப் படுகிறது.


பெரியவர்களின் அனுபவ ஆலோசனைகள்,

மருத்துவரின் வழி நடத்தல்

சரியாக பின்பற்றப்பட்டால்

normal delivery எனும் சுகப் பிரசவம் சாத்தியப்படும்.

ஆரோக்கியமான உணவு,

மகிழ்ச்சியான மனது,

சந்தோசமான சுற்றுப்புறம்

இவையுடன் இறைவனின் கருணை

இவை இருந்தால் எல்லாம் நலமே.



திருச்சி மலை கோட்டையில் இருக்கும்

ஸ்ரீ மட்டுவார் குழலம்மை உடனுறை ஸ்ரீ தாயுமானவர் 


கிருபையால் சுகப் பிரசவம் ஆக

கிழேயுள்ள சுலோகத்தை நம்பிக்கை உடன்   தினம்

மூன்று முறை சொல்லி நமஸ்காரம் செய்யவேண்டும்.


ஹே சங்கர ஸ்மரஹர பிரமாதி நாத


மன்னாத ஸாம்ப சசிசூட ஹர திரிசூலின் 


சம்போ சுகப்ரஸவக்ருத் பவமே தயாளோ


ஸ்ரீ மாத்ருபூத சிவ பாலயமாம் நமஸ்தே. 


தெய்வ அருளால் ஷேமங்களும் உண்டாகும்.

“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்யலாம் என்று பெரியவங்களே சொல்லி இருக்காங்க?நாம ஒரே ஒரு பொய்தான் சொல்லறோம் என்று தவறான ஒரு செயலைச் செய்ய ஒரு சப்பக்கட்டு கட்டி விடுகிறோம்; அதுவும் இந்த பிரச்சனை அதிகம் செயல் படுத்துப்படுவது திருமண பேசி முடிக்கப் படும் போது தான்.
ஒரு பொய்யினால் பாதிக்கப் படுபவர்கள் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ வேண்டிய கணவனும், மனைவியும் தான்.
சொத்து, நிறம், தொழில்- இதில் கூட பொய் சொல்வது பின்னாளில் பெரும் பிரச்சனை ஆகி விவாகரத்துக் கூட நடக்கிறது.
ஜாதகத்தையே மாற்றுவது [தோஷம் இல்லை என்பது, கட்டங்களை மாற்றி எழுதுவது] என்று பெரிய அளவில் இந்த பொய் பயன்படுத்தப் படுவதுதான் வேதனைக்குரிய விசியம்.
இதனால் இருவரில் ஒருவர் இறக்க நேரிட்டால் வாழ்கையே போச்சே?  இது போன்ற நிகழ்வுகளை நான் கேட்க நேரிடும் போது எப்படி நம் முன்னோர்கள் ஒரு தவறுதலான வழிகாட்டியாக இருந்தார்கள்? என மனம் நொந்து இருக்கிறேன்;
  உண்மையில் இந்த கூற்றுக்கு வேறு அர்த்தம் இருப்பதை நான் இணைய தளத்தில் படித்தேன்;
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.

ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம் என்ன?

நம் முன்னோர்கள் கூறிய பழமொழிகளில் சில காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளதற்கு இதுவும் நல்ல உதாரணம்.
ஏனென்றால், “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்பதே உண்மையான பழமொழியாகும்.
காலப்போக்கில் “போய் சொல்லி” என்ற வார்த்தை “பொய் சொல்லி” என மாற்றப்பட்டு விட்டது.
பழங்காலத்தில், சுற்றத்தினர் பற்றி அவ்வளவாக அறியப்படாத காரணத்தால் பெண் கொடுக்கும் முன் அந்தக் குடும்பத்தினர் பலமுறை யோசனை செய்வர்.
அதனால் மாப்பிள்ளை வீட்டிற்கு நெருக்கமானவர்கள், பெண் வீட்டாரிடம் பலமுறை சென்று, “நல்ல வரன்தான், நீங்கள் தாராளமாக பெண் கொடுக்கலாம்” என வலியுறுத்துவர்.
இதைத்தான் “ஆயிரம் முறை போய் சொல்லி திருமணம் செய்” என்று குறிப்பிட்டனர்.
ஆனால் தற்போது இந்தப் பழமொழி மருவி, “ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” எனக் கூறப்படுவதால், பலர் மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் சில உண்மைகளை மறைத்து திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
 இதனால் தம்பதிகளின் வாழ்க்கைதான் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொண்டால் நல்லது.


நன்றி- ஆன்மிகம்

சித்திரா பௌர்ணமி

சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம்கூடி வரும்

பௌர்ணமி நாள்சித்திரா பௌர்ணமி நாளாகும்.

இது வசந்தகாலம்.

"காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கின்றேன்..." என்று

கண்ணன்பகவத்கீதையில் கூறுகிறார்

ராசிச் சக்கரத்திலுள்ள 12 ராசிகளில்


6 ஆவதான கன்னிராசியிலும்,
7ஆவதான துலாராசியிலும் உள்ள


 நட்சத்திர மண்டலத்துக்கு


சித்திரைஎனப் பெயர். 


அசுபதி முதலான 27 நட்சத்திரங்களில்


14 ஆவது நட்சத்திரம்.
சித்திரை பௌர்ணமியெனப் புகழ் பெற்ற தினத்தன்று


சந்திரன் சித்திரைநட்சத்திரத்திலோ 


அதற்கு அடுத்தோ இருக்கும்எனக் 


கலைக் களஞ்சியம்கூறும்



வானமண்டலத்தில் சூரியனுக்கும்,

சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை

'திதி' என்கின்றோம்.

அமாவாசையன்று சூரியனும் சந்திரனும்

இணையும் நாளில்

மூதாதையர்களுக்கு 'திதி' கொடுப்பதும்,

 (அன்று சூரிய, சந்திரர்கள்

ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்)

பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள்,

வழிபாடுகள் செய்வதும் சிறந்தது.

(அன்று சூரிய, சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)

அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன்,

தினமும் 12 டிகிரி நகர்ந்து

15ம் நாளான பௌர்ணமி அன்று

180ம் டிகிரியை அடைகிறது;

சூரியனுக்கு சம சப்தமமாகி

முழுமையான ஆகர்ஷண சக்தியை

(புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது.

அதனால் அன்று செய்யும் பூஜைகள்,

வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

சிவசக்தி ஐக்கியம்

சூரியனைப் பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும்,


சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர்.

அதாவது அமாவாசையன்று

 சூரியனும், சந்திரனும் இணையும் நாளில்

மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம்.

சூரியனுக்கு அதிதேவதையாகபரமசிவனையும்,

 சந்திரனுக்குஅதிதேவதையாக பார்வதியையும்

வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உகந்தது.

அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே

சூரிய சந்திர சங்கமத்தையும்,

சமசப்தமமாக இருப்பதையும்

 சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது

மிகையாகாது.

மனித மனதில் திதிகளின் தாக்கம்]

 அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும்

ஆகர்ஷண சக்தியின்வேறுபாடுகள்

மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை

உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது.

இந்தக் காலங்களில் மன நோயாளிகளின்

நடத்தையில் மாற்றங்கள்உண்டாகின்றன.

மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள்

 பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு


சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள்

உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.

இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால்,

சூரியனை ஆத்மகாரகன் என்றும்,

சந்திரனை மனோகாரகன் என்றும்

நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது.

நமது ஆத்ம பலம் பெருகினால்தான்

 நம்மால் இந்த உலகில் சிறப்புடன்

வாழ முடியும்.

கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும்.

அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற,

இத்தகைய ஜாதகஅமைப்பு உதவுகிறது.

ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு

சூரிய பகவானின் அனுக்கிரகம்அவசியம் தேவை.

ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம்.

'மனம் வசப்பட உன்னை உணர்வாய்'

என்பது பெரியோர் வாக்கு.

அப்படிப்பட்டமனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான்.

அதனால்தான் சூரிய சந்திரர்களின்

பலத்தைப் பெருக்கிக் கொள்வதால்,

வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.

சித்திரா பௌர்ணமியை ஒட்டி அம்மன் கோவில்களில்

 பால்குடங்கள்எடுப்பது,

திருவிளக்கு பூஜை என்றும்,

சிவாலயங்களிலும் பெருமாள்

கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள்,

 இறைவன் வழிபாடு,

வீதிஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

தாயாரை இழந்தவர்கள்


 இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள்

பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது.

தந்தையை இழந்தவர்கள் 


ஆடி அமாவாசையன்று விரதமிருப்பது

போன்று தாயாரை இழந்தவர்கள்


 சித்திரா பெளர்ணமி விரதத்தை

மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.

அம்மன் ஆலயங்களிலே


 சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது.

தாயார் பசிபோக்கி வாழ்வளிப்பவர் 


அதை நினைவு கூர்ந்து

பசிப்பிணியகல அம்மன் 


அருள் நாடி இச்சித்திரைக் கஞ்சிவார்ப்பு

இடம்பெறுகின்றது

சித்திரையில் ஆரம்பிக்கும் காண்டாவனம் பறவைகளின்

முட்டைகளுக்கு வெப்பத்தைக் கொடுக்கும் காலமாகும்.

மரங்களை வாளால் அரிந்து  பார்த்தால் 


அங்கு அவற்றின் வயதைக்

குறிக்கும் ஆண்டு வளையங்கள் இருக்கும்.

 இந்த ஆண்டு வளையங்கள் விழ ஆரம்பிக்கும் 


காலமும் சித்திரைதான்
.
அன்றைய தினம் சந்திர அண்மித்த நிலையாகும்.

 சந்திரன் பூமிக்கு மிக அருகில் வரும் நாளாகும். 


இதனால் புவியீர்ப்புவிசை 


முன்னைய காலத்தை விட அதிகமாகத் தொழிற்படுகிறது.

இது கடலில் புதிய அலைகளை புரட்டி விடும் காலமாகும்.


 தரையில்மட்டுமல்ல 


கடலிலும் இது புத்தாண்டுதான்.

மாதவிடாய் என்று ஏன் சொல்கிறார்கள்.

சந்திரன் பூமியைச் சுற்றிவரும் 29 நாட்களுக்கும்


 பெண்ணின் உடலுக்கும்உள்ள உறவு அது

சித்ரா பௌர்ணமி அன்று ஊரில் தெருக்கள்தோறும் 


ஆங்காங்கே பந்தல்அமைப்பார்கள்.

 பந்தலில் இரவு நேரம் பெரியோர்கள் சிலர் அமர்ந்து


 சித்ரகுப்த நயினார்கதை படிப்பார்கள்.

மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து 


விடிய விடிய இந்தக் கதையைக் கேட்டுக்

கொண்டிருப்பார்கள். 


கதை படித்து முடிக்க கிட்டத்தட்ட


 நாலு மணிநேரம்ஆகிவிடும். 


ஆனால் இது புண்ணியக்கதை


கேட்பது நல்லது என்று கூறுவார்கள்
சித்ரா நதி

நெல்லை மாவட்டம் திருக்குற்றால மலையிலுள்ள


 சித்ரா நதி சித்திரைபௌர்ணமி அன்றுதான் 


உற்பத்தியானதாகக் கருதப்படுகிறது.

அன்றைய தினம் அந்நதியில் நீராடுவது


 மிகச் சிறந்த பலன்களைஅளிக்கும்



கல்வெட்டில் சித்திரை

திருச்சி மலைக்கோயிலின் தூணில் உள்ள 


கி.பி. 1011 ஆம் ஆண்டுக்

கல்வெட்டு ஒன்று சித்திரைத் திருவிழாவின்


9 ஆவது நாளன்று

பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய


 நிலம் தானம் அளிக்கப் பட்டதைக் குறிக்கின்றது

திருச்சி நெடுங்கள நாதர் திருக்கோயிலில் உள்ள 


அதே ஆண்டுக் கல்வெட்டு,

சித்திரைத் திருவிழாவின் போது 


550 சிவயோகிகளுக்கு அன்னதானம் செய்ய

நிலம் தானம் தரப்பட்டதைச் சொல்கிறது



இந்திர விழா

பூம்புகாரில் நடந்த இந்திர விழா 


சித்திரை பௌர்ணமியில் தான்தொடங்கப்பட்டது.

இவ்விழாவை   சோழன் தூங்கெயில் எறிந்த 


தொடித்தோள் செம்பியன்


துவக்கிவைத்தான் என மணிமேகலை கூறுகிறது `

சித்திரை மூலிகை


சித்திரை பௌர்ணமி அன்று


 நிலவின் ஒளியில் பூமியில் 


ஒருவகை உப்புபூரித்து வெளிக்கிளம்பும்.

இதை பூமி நாதம் என்பர்.

இந்த உப்புத் தூள் மருந்துக்கு வீரியமளிக்கும்.

இளமையையும் மரணமில்லாத வாழ்வையும் கொடுக்கும்.


அந்த உப்பு, மருந்துகளுக்கு 


அதிகமான சக்தியை அளிக்கவல்லது என்பதால், ம


ருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.


 இதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள். 


ஆதலால் முன்காலத்தில் சித்ரா பௌர்ணமி,


 சித்தர் பௌர்ணமி என்றே வழங்கப்பட்டது.




கன்னியாகுமரியில்...


கன்னியாகுமரியில் சந்திரோதயமும்,
 சூரிய அஸ்தமனமும் 


சித்திரை பௌர்ணமி அன்று ஒரே நேரத்தில் நடக்கும்
மகாபாரதத்தில்..
பாரதப் போர் முடிந்து 


தர்மர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும்
அசுவமேத யாகம் செய்ததும் 


இந்த நாளில் தான்
சித்திரகுப்தரும் சித்திரை பௌர்ணமியும்

சித்திரை பௌர்ணமியன்று 


தமிழகம் முழுவதும் சித்திரகுப்தர் வழிபடப்படுகிறார்.

யமதர்மராஜாவின். கணக்கரான இவர் 


சித்திரை பௌர்ணமியன்றுதான்
அவதரித்தார் என புராணங்கள் கூறும்
சென்னைக்கு வடக்கே


33 கி.மீ. தொலைவில் ஆரணியாற்றின் 


கரைப்பகுதியில் உள்ள தலம் சின்ன காவனம்.
இங்கு 8.42 ஏக்கர் பரப்பளவில் இரண்டு சிவன் கோவிலாக
நூற்றெட்டீஸ்வரர், சதுர்வேதபுரீஸ்வரர் ஆலயம் 


500 வருடத்துக்குமுற்பட்ட கோவில்.
மேலும் இவ்வூரில், மதகவிநாயகர்


கரி கிருஷ்ண பெருமாள் கோவிலும்உள்ளது
கும்மங்கலம் என்னும் இடத்தில்


2.21 ஏக்கர் பரப்பளவில் 


இராஜராஜ சோழமன்ன னால் கட்டப்பட்ட 


ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்உள்ளது.
சித்திரை மாதம் பௌர்ணமி அன்று 


ஐந்து கோவில்கள் ஒன்று கூடி
சந்திப்பு உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது.



சித்திரா பௌர்ணமி ஜோதி: 


திருவண்ணாமலையில் கார்த்திகை ஜோதி விசேஷம்.
சபரிமலையில் மகர ஜோதி பிரசித்தம்.
அதுபோல திருவக்கரை என்ற இடத்தில் 


சித்ரா பௌர்ணமி ஜோதிவிசேஷம்.
அங்கே வக்ர மகாகாளி கோவில் கொண்டிருக்கிறாள்.
இந்த தலத்தில் எல்லாமே வக்கிரம் தான்.
சித்திரா பௌர்ணமி அன்று 


ஜோதி யைத் தரிசித்து காளியையும் தரிசிப்பது
எல்லா வகை தோஷங்களையும் நீக்கக்கூடியது.
தேவர்களின் தலைவனான இந்திரன்

ஒரு முறை விருத்ராசுரன் முதலான 

அசுரர்களைக் கொன்றான். 

அவர்கள் வேதம் பயின்றவர்கள். 

அவர்களைக் கொன்றதால் பற்றிக் கொண்ட 

பிரம்மஹத்தி தோஷத் திலிருந்து நீங்க 

தேவ குருவான பிரகஸ்பதி யிடம் 

ழி கேட்டான்.

பூலோகத்திற்குச் சென்று

அங்குள்ள சிவாலயங்களை வழிபட

சிவனருள் கிடைக்குமென்றும்

அப்போது தோஷம் நீங்குமென தேவகுரு கூறினார்.

 குருநாதர் கூறியபடி பூலோகத்துக்கு வந்த இந்திரன் 

கேதாரம் முதலான பல தலங்களை வணங்கி

தெற்கு நோக்கி வந்தான். 

ஒரு கடம்ப மரத்தினடியில் 

லிங்கம் இருந்த பகுதியை தூய்மை செய்து 

முறைப்படி வழி பட்டான். 

அவரே சொக்கலிங்கம். 

அவருக்கு தேவேந்திரன் கோவில் கட்டினான்.

 ஆகாய உலகத்திலிருந்து வந்த 

மயன் உருவாக்கிய

ஸ்ரீ விமானத்தை எட்டு திசையிலும் 

எட்டு யானைகள் தாங்கின. 

32 சிகரங்கள் அந்த விமானத்தில் இருந்தன. 

64 சிவகணங்களும் விமானத்தை அலங்கரித்தார்கள். 

இந்திரன் அமைத்த விமானமாகையால்

மதுரை சொக்கநாதர் விமானத்திற்கு "இந்திரவிமானம்' என்று பெயர்.

சொக்கநாதரைப் பிரிய முடியாமல் 

இந்திரன் தவித்தான். 

அந்த நிலையில், ""இந்திரனே! ஒவ்வொரு வருடமும் 

சித்ரா பௌர்ணமி அன்று என்னை

இங்கு வந்து வழிபடுக என்று கட்டளையிட்டார். 
அதன்படி ஒவ்வொரு வருடமும் 

சித்ரா பௌர்ணமி நாளில்

 இந்திரன் இங்கு வந்து வழிபடுகிறான் என்று 

திருவிளையாடல் புராணம் கூறுகிறது. 

அதனால் தான் சித்ராபௌர்ணமி 

மதுரையில் விசேஷமாகக் கருதப்படுகிறது




சிவபெருமானை வழிபடுவதற்குரிய 


நாட்களுள் பௌர்ணமியும் ஒன்று. 


பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், 


சித்ரா பௌர்ணமி நாளில் 


மருக்கொழுந்து இலையால் 


சிவனை அர்ச்சிப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். 


சுவாமிக்கு அன்று வெண்பட்டாடை சமர்ப்பிக்க வேண்டும்


. பலாசு என்னும் ஒருவகை மரத்தில்


 மலரும் மலர்களால் ஆன மாலையை அணிவிப்பது 


அந்த மலர்களால் அர்ச்சனை செய்வது 


மிகவும் விசேஷம். 


சுத்த அன்னத்தைப் (வெறும் சாதத்தை) படைக்க வேண்டும். 


இந்த முறையில் சித்ரா பௌர்ணமி பூஜை செய்தால், 


லட்சுமிகடாட்சமும் சகல சௌபாக்கியங்களும்


 கிடைக்கும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.









ஸ்ரீ வில்லிபுத்தூர் -




சித்திரா பௌர்ணமி அன்று 




ஸ்ரீ ஆண்டாளும் 




கூடவே ஸ்ரீ ரெங்க மன்னாரும் ஆற்றில் இறங்குவார்கள்




மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று 


கள்ளழகன் ஆற்றில் இறங்கி 


பக்தர்களுக்குத் தரிசனம் கொடுப்பது 


ஆண்டுதோறும் நடக்கும் திருவிழா. 


சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும், 


பௌர்ணமி திதியும் அற்புதமாகக் கூடுவதால், 


அன்று ‘கடல் ஸ்நானம்’ செய்வது சிறப்புகளை வழங்கும். 


அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் 


கர்மவினைகளைக் கழித்தும், 


சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும், 


அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், 


மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர் தயாராக இருப்பார்களாம்.