செவ்வாய், ஏப்ரல் 12, 2011

தமிழ் வருட பிறப்பு

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு என் உளம கனிந்த புத்தாண்டு
                                                             
நல் வாழ்த்துக்கள்


14-04-2011 வியாழன் அன்று சித்திரை மாத பிறப்பு வருகிறது.

என் நினைவில் சித்திரை கனி-

சித்திரை முக்கனிகளும் வரும் காலம்.  
அதனால் கண்ணாடி முன் வைக்கும் கனி வகைகளில் மா, பலா, வாழை
முதன்மை வகிக்கும்.
 சாமி அறையில் அல்லது நடுகூடத்தில் ஓர் இடத்தில் முதல் நாள் இரவே
சுத்தம் செய்து கோலம் போட்டு, அதன் நடுவில் ஒரு முகம் பார்க்கும்
கண்ணாடி வைக்க வேண்டும்.
அதன் சட்டத்தில் சந்தானம், குங்கும போட்டு வைக்க வேண்டும். 
 அதன் முன் ஒரு தாம்பாளத்தில் முக்கனிகள் , வேறு பழங்கள்.
வெற்றிலை, பாக்கு, [வெட்டு பாக்கு]
 மஞ்சள் கொம்பு வைக்க வேண்டும்.
அதன் மேல் பூ,  எலுமிச்சை பழம் வைக்க வேண்டும்.
இனித்தான் முக்கிய பொருட்களே வருகிறது.
பணம், தங்க நகை, தங்க காசு, நாணயங்கள் என
அவரவர் சக்திக்கு ஏற்றார் போல் வைக்கலாம்.
 ஒரு படி நிறைய அரிசி வைக்க வேண்டும்.
அந்த வருடத்திற்கு உரிய புது பஞ்சாங்கம் வாங்கி அதற்கும் மஞ்சள், குங்கும
போட்டு வைத்து வைக்க வேண்டும்
ஒரு விளக்கைமஞ்சள், குங்கும பொட்டு இட்டு எண்ணை ஊற்றி,
திரி போட்டு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
அதிகாலையில் பாட்டியோ, அம்மாவோ எழுந்து விளக்கு ஏற்றி

‘நாடும், வீடும் எல்லா நலன்களையும் பெற்று, அந்த வருடம் நல்ல வருடமாய்

அமைய வேண்டும்என  முதலில் சாமி கும்பிடுவார்கள்.
 பின் வீட்டில் உள்ளவர்களை எழுப்புவார்கள்.
கண்ணை மூடிக் கொண்டே சென்று கண்ணாடியில் தான் விழிக்க வேண்டும்.
காலை குளித்து வந்த பின் தீபாராதனை காட்டி சித்திரை தாயை வணங்க
வேண்டும்.

அந்த காலத்தை நினைத்தாலே நான் சிறு குழந்தை ஆகி விடுகிறேன். 
 பழங்கள் வாங்க கடைவீதிக்கு ஓடுவதும்,
அம்மாவிற்கு உதவி செய்வதும் ஒரே ஆர்வ கோளாறுதான் 
வீட்டு நிலையில் மாவிலை தோரணம் கட்டு வார்கள்.
 வாசலில் பெரிய கோலங்கள் போடப்படும்.
இனிப்பு,  நிறைய பதார்த்தங்களுடன் சாப்பாடு. 
முக்கியமாக பள்ளி விடுமுறை நிச்சியம்.
கொண்டாட்டத்துக்கு கேட்கவா வேண்டும்?


ஒரு காலகட்டத்தில் நானே அலங்காரங்கள் செய்வேன்.
வாசலில் பெரிய கோலமாக போட சில நாட்களாகவே யோசித்து, அதை
போட்டுப் போட்டுப் பழகி இருந்தாலும், போடும் போதும் டெண்சனாக இருக்கும்.
முதலில் கோலத்திற்கு புள்ளி வைப்பதில்  ஆரம்பிக்கும்-
புள்ளிகள் ஒழுங்காய், சம இடைவெளிகளில் வைக்க வேண்டும்.
ஒரே சீராய்  கோடுகள் . போட வேண்டும்.
புள்ளிக் கோலங்கள் என்றுமே சிக்கல் கோலங்கள். தான்.
கொஞ்சம் பிசகினாலும் முடிந்தது. முடிக்கவே முடியாது.
எல்ல சாமிகளையும் கும்பிட்டுக் கொண்டு நல்லபடியாய் போட்டு முடிப்பது
அந்த வயதில் ஒரு பெரிய விசியமாய் இருந்தது
.அக்கம் பக்கம் இருப்பவர்கள் பாராட்ட வேண்டும் என்பதுதான் இந்த
மெனக்கெடலின் basic. 



கோலத்திற்கு செம்மண் கரை கட்ட வேண்டும்
காவிப் பொடியை அளவான நீரில் கரைத்து வைக்க வேண்டும்.
தண்ணீ அதிகமானால் வழிந்து ஓடும
கெட்டியாக இருந்தால் கோடு இழுக்கவே முடியாது.
ஒரு சிறு துணியை இக்கரைசலில் நனைத்து கரை கட்ட வேண்டும்.
 தேங்காய் குடுமியில் அளவாக எடுத்து அதிலும் இடலாம்.
இப்போது பெயிண்ட் பிரஷ் கொண்டு சுலபமாக போடலாம்.
 சரியான பக்குவத்தில் கரைப்பது,
துணியில் அல்லது குடுமியில் ஒழுகாமல் எடுப்பது,
ஒரே அளவாக கோடு இழுப்பது என்று காவி இடுவதும் ஒரு கலைதான்.
தேவை பொறுமை + கவனம் [concentration]
தற்போது புள்ளி கோலங்கள் சிறு புள்ளிகளாகி மறைந்து விடுமோ
எனும் நிலையில் உள்ளது.
சில காலமாகவே போட சுலபமாகவும், வண்ண பொடிகள் கொண்டு

கண்ணைக் கவரும் விதமாய் போடும் ரங்கோலி வகை கோலங்கள் அதிக

அளவில் போடப் படுகின்றன.


இரண்டுமே அழகுதான்



ஆனால் இன்றைய கால கட்டத்தில் கோலம்போடும் அளவிற்கு வாசலும்

இல்லை;

நேரமும் இல்லை; ஓட்டும் ஸ்டிக்கர் கோலங்கள் வந்து விட்டன.

தொல்லைக் காட்சியின் பயன்பாட்டால் பண்டிகை தினங்களே அரிதாகி

விட்டது.

. அன்றைய பண்டிகை கொண்டாட்டங்கள் இன்றைய நினைவுகள்.


நம் பிள்ளைகளுக்கு நம்மால் சொல்லத்தான் முடியும்.

அதைச் செய்வோம்.

அவற்றை தொடர்வதும், விடுவதும் அவர்கள் விருப்பம்.



கருத்துகள் இல்லை: