திங்கள், ஏப்ரல் 04, 2011

ஆரஞ்சு திருவிழா

இந்தியாவின் 'ஆரஞ்சு நகரம்' என சொல்லப்படுவது நாக்பூர் நகரம். இது மகாராஷ்ட்ராவில் இருக்கிறது. நம் நாடு சுதந்திரம் பெற்றபோது நாக்பூர் , மகாராஷ்டிராவின் தலை நகரமாக இருந்தது.
நாக் நதி ஓடுவதால், இதற்கு நாக்பூர் என பெயர் என்று கூறுவார்கள். இங்கு பசுமையான காடுகள் அதிகம் என்பதால், இந்நகரம் இந்தியாவின் இரெண்டாவது பசுமை நகரம் எனப்படுகிறது.

இங்கு விளையும் மாண்டரின் வகை ஆரஞ்சு உலக தரம் பெற்றவை.

அதனால்ஏற்றுமதி வர்த்தகம், நம்நாட்டிற்கு பெருமளவில் பொருள் ஈட்டித் தருகிறது. இங்கு குறைந்த விலையில், தரமான ஆரஞ்சு ஜாம், ஜெல்லி, மர்மலேட் மற்றும் ஸ்குவாஷ் வாங்கலாம். நாக்பூர் வழியாகச் செல்லும் ரெயில் தடங்களில் வரும் ரயில் நிலையங்களில் ஆரஞ்சு விற்கப்படுவதும், அவற்றைவாங்க பயணிகள் .கூட்டம் ஓடுவதும் வாடிக்கையான செயல்பாடாகும்.

நாக்பூரில் உள்ள, விதர்பா பகுதியில் 80000 ஹெக் பரப்பில் பயிரிடப்படுகிறது. மொத்த மகசூல் 5 லட்சம் டன்.மகாராஷ்டிரா மாநிலத்தின்மொத்த விளைச்சலில் 65 % விதர்பா பகுதியில் விளைகிறது.

வருடம்தோறும் மார்ச் மாதம் புனாவில் ஐந்து நாட்கள் நடைபெறும் 'மகா ஆரஞ்சு திருவிழா' விவசாயிகளின் உழைப்பை உலகுக்கு காட்டும் ஒரு தளமாகவே செயல்படுகிறது. இந்த மாபெரும் விழாவில்ஆரஞ்சு கொண்டு செய்யப்படும் பிரமாண்டமான அலங்காரங்கள் நம்மை பிரமிக்க வைக்கும்.

அவற்றில் சில உங்களின் பார்வைக்கு-----


























கருத்துகள் இல்லை: