திங்கள், ஆகஸ்ட் 16, 2010

சைவ புரோட்டின் காளான்

நாம் கிழங்கு வகைகளைப் பயன்படுத்தும் அளவுக்கு மற்ற காய்களை குறிப்பாக காளானை அதிகம் பயன்படுத்துவதில்லை. பலர் காளானை சைவ உணவாகக்ஏற்றுக் கொள்ளுவதிலை. இது அசைவ உணவாக கருதப் படுகிறது. ஆனால் நாம் அதிகம் பயன்படுத்தும் காய்கறிகளை விட காளானில் நிறைய சத்துக்கள் உள்ளது. மிகுந்த அளவு புரதம் தரும் ஒரு சுவையான உணவு. சைவ உணவு உண்போருக்கு முழுமையான புரத உணவாக காளானை கூறலாம். புரத நோய்க் கோளாறுகளினால்உண்டாகும் பல பாதிப்புகளுக்கு காளான்கள் நல்ல மருந்தாகவும் பயன் படுகிறது.
காளானில் பல வகைகள் உள்ளது.ஆயிஸ்டர் மஸ்ரூம் எனப்படும் நத்தைக் காளானில், புரதமும் , 19 வகையான அமினோ அமிலங்களும் பலவிதமான
வைட்டமின்களும் உள்ளது. முட்டையில் உள்ள அதே அளவு சத்துக்கள் இதில் உள்ளது. மேலும் பட்டாணியில் உள்ள அளவு உயிர்ச் சத்துக்கள் நத்தைக் காளானில் உள்ளது.
சிப்பிக் காளானில் புரதம் 2.9% , மாவுச் சத்து 5.3 %, கொழுப்புச் சத்து 0.36% மற்றும் தாது உப்புக்கள்உள்ளது. இதில் கால்சியம் 71.௨%,பாஸ்பரஸ் 91.௨%, இரும்பு 8.8%,சோடியம் 10.௬%, பொட்டாசியம் 28.50% உள்ளது. பொதுவாக காளானில் போலிக் அமிலம் [folicacid] மற்றும் "பி"வைட்டமின் அதிக அளவிலும், வைட்டமின் "சி ",வைட்டமின் "டி" போன்றவையும் உள்ளது.
எல்லா வயதினரும், எல்லாப் பருவத்திலும் காளானை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மாவுச் சத்து குறைவாக இருப்பதால், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள், இதயக் கோளாறு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் போன்றவர்களும் காளான் சாப்பிடலாம். தெளிவான ,கூர்மையான கண் பார்வை, உறுதியான பலம் பொருந்திய எலும்புகள் மற்றும் பற்களையும் பெற காளான்கள் உதவி செய்கின்றன. அதிக உடல் எடை கொண்டவர்கள் , கொழுப்புச் சத்து மிகுந்த உணவு வகைகளை முழுமையாகத் தவிர்த்து விட்டுத் தொடர்ந்து ஒரு மாதம் காளான் வகைகளை உணவில் சேர்த்து உண்டு வந்தால், பக்க விளைவுகள் இல்லாமல் , உடல் எடை நன்கு குறையும். முழுமையான சைவ உணவு இது என்றாலும் அசைவம் உண்போர் அந்த முறைப்படி சமைத்து உண்டால், அசைவ உணவின் சுவை இதிலேயே கிடைத்து விடும்.

புதன், ஆகஸ்ட் 11, 2010

சுடும் உண்மை


 பாபு ராஜேந்திரப் பிரசாத்


முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான

மதிப்புக்குரிய பாபு ராஜேந்திரப் பிரசாத்அவர்கள்,

தேர்தல் நேரத்தில்,ஓட்டு கேக்க பீகார் சென்றிருக்கிறார்.

ஒரு குடிசையில் இருந்த ஒரு ஏழைப் பெண்

ஒருவரிடம் ஓட்டுக் கேட்டு இருக்கிறார் .

அப்பெண்ணின் மகள் இருப்பதை அறிந்து

 அவளிடமும் ஓட்டு கேட்க விரும்பிஇருக்கிறார்.

அவரை காத்திருக்கச் சொல்லிவிட்டு

அப்பெண் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.

 சில நிமிடங்கள் கழித்து மகள் வந்தாள்.

இருவரையும் ஒன்றாகப் பார்த்துப்

 பேச வேண்டும் என பாபு விரும்பினார்.

ஆனால் அது முடியவில்லை.

 சிந்தித்துப் பார்த்த பின்

அவருக்கு ஒரு உண்மை,

மனதை சுடும் ஒரு உண்மை புரிந்தது.


தாயுக்கும், மகளுக்கும் இருப்பது ஒரே புடவை.