செவ்வாய், நவம்பர் 30, 2010

சிறு குறிப்புகள்

சூட்டினால் வயிறு வலி வந்தால்1ts சீரகம் அல்லது சோம்பை வெறும் [without oil] வாணலியில் வறுத்து அதனுடன் அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கால் டம்பளராக சுண்டியதும் வடிகட்டி ,அதனுடன் ஒரு ஸ்பூன் வெண்ணை, கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் வலி நிற்கும். சூடு தணியும்.



உளுந்து வடைக்கு அரைக்கும் போது முதலில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டுப் பின் உளுந்து போட்டு அரைத்தால் மிக்சி ஜாரில் இருந்து மாவை எடுக்கவும், கழுவவும் சுலபமாக இருக்கும்.
முட்டி வலி நீங்க- தினமும் காலை, மாலை இரு வேலையும் முடிந்த அளவு தோப்புக் கரணம் போடவும். அல்லது ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு மெதுவாக உட்கார்ந்து எழுந்திருக்கவும். முதலில் செய்ய கஷ்டமாகத்தான் இருக்கும்; போகப் போகப் பழகி விடும். அதிகம் இஞ்சி, பூண்டு சேர்த்துக் கொண்டால் வாய்வுத் தொந்தரவு இல்லாமல் இருக்கலாம்.
தலையணை இன்றி கைகளை மடித்து கொண்டு தலைக்கு வைத்து சம தரையில் ஒரு துணியை விரித்துப் படுத்து ஓய்வு எடுத்தால் இடுப்பு வலி, முதுகு வலி குறையும்.
வாழ்த்து மடலில் செண்டைத் தடவி அனுப்பினால் , பெறுபவர் பிரிக்கும் போது
நல்ல மணம் வீசும்.
செல்லோ டேப் எடுக்க முடியாமல் ஒட்டி கொள்ளும். பிரிட்ஜில் சிறிது நேரம் வைத்து எடுத்தால் சுலபமாக பிரிக்க வரும்.

கருத்துகள் இல்லை: