ஐந்தாவது பாடல்
நஞ்சணி கண்டன் எந்தை
மடவாள்த னோடு
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும்
உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
விஷத்தை உண்டதால் திருநீலகண்டத்தை உடையவரும், எமது தந்தையும் உமாதேவியோடு காளை வாகனத்தில் ஊர்ந்து அருளுகின்ற பரமனாகிய சிவபெருமான், வன்னியையும், கொன்றை மலரையும் முடியில் தரித்து இரவில் அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் கொடிய சினமுடைய அசுரரோடும், அச்சத்தை உண்டாக்கும் இடியும், மின்னலும் மிகுதியான பூதங்களும் தொண்டர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
நஞ்சணி கண்டன் எந்தை
மடவாள்த னோடு
விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும்
உரும் இடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பொருள்-
விஷத்தை உண்டதால் திருநீலகண்டத்தை உடையவரும், எமது தந்தையும் உமாதேவியோடு காளை வாகனத்தில் ஊர்ந்து அருளுகின்ற பரமனாகிய சிவபெருமான், வன்னியையும், கொன்றை மலரையும் முடியில் தரித்து இரவில் அடியேனது உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் கொடிய சினமுடைய அசுரரோடும், அச்சத்தை உண்டாக்கும் இடியும், மின்னலும் மிகுதியான பூதங்களும் தொண்டர்களுக்கு மிகவும் நல்லனவே செய்யும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக