திங்கள், நவம்பர் 22, 2010

கோளறு பதிகம்

எட்டாவது பாடல்

வேள்பட வீழிசெய் தன்று
விடைமேல் இருந்து
மடவாள்த னோடும் உடனாய்
வாள்மதி வன்னி கொன்றை
மலர்சூடி வந்து என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை
அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-

மன்மதன் அழியும்படி அந்நாளில் விழித்து நோக்கி உமாதேவியாரோடும் கூடினவராய் சந்திரனையும், வன்னியையும், கொன்றைமலரையும் சிரசில் தரித்து எருதின்மேல் எழுந்தருளி வந்து அடியேனது உள்ளத்தில் புகுந்த காரணத்தால் ஏழு கடல்களும் சூழ்ந்த இலங்கைக்கு அரசனாகிய இராவணனோடு ஆழ்ந்த கடல்களும், பிறதுன்பங்களும் வருத்தாமல் தொண்டர்களுக்கு நல்லனவே செய்யும்.

கருத்துகள் இல்லை: