பாசுமதி அரிசி ------------------- 2 கப்
பெரிய வெங்காயம்---------------1
வெங்காயத்தாள் ------------------கொஞ்சம்
மிளகாய் வற்றல் ----------------20
பூண்டு-----------------------------6 பல்
அஜினோமோட்டோ ------------1/4 ts
எண்ணை --------------------------1/4 கப்
செய்முறை-
12 மிளகாய் வற்றல், 8 பல் பூண்டு , மையாக அரைக்கவும்.
அரிசியை 10 நி ஊறவிட்டு இரண்டு முறை கழுவவும்.
நீரை வடிகட்டவும்.
4 கப் நீரில் இரண்டு விசில் விடவும். 10 நி சிம்மில் வைக்கவும்.
வெங்காயம், வெங்காயத் தாளை பொடியாக நறுக்கவும்.
2 ஸ்பூன் எண்ணையில் மிளகாய், பூண்டு விழுதை பச்சை வாசனை போக வதக்கவும்.
இதில் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் சாதம், அஜினோமோட்டோ சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் வெங்காயத்தாள் சேர்த்து வதக்கவும். இறக்கவும்.
வேறு ஒரு கடாயில் 1/4 எண்ணை ஊற்றி நன்கு காய்ந்ததும் 8 மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி ஆற விடவும்.
ஆறியதும் சாதத்தில் ஊற்றிக் நன்கு கலந்து விடவும்.
சூப்பர் ஆன காரமான சாதம் தயார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக