திங்கள், மே 23, 2011

கூந்தல் பராமரிப்பு

தலையில் முடி அடர்த்தியாக வளர


ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து

நல்லெண்ணையில்காய்ச்சி, வடிகட்டிய பின்

 தலைக்குத் தேய்த்தால்

தலை முடி அடர்த்தியாக வளரும்.


முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்

தலைக்குத் தடவி

ஒருமணி நேரம் கழித்து

கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.


செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி

அரைமணி நேரம்ஊறிய பின்

தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும்.


கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4,

இரண்டையும் நன்றாக அரைத்து

அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால்

கூந்தல் நல்லகருமையான நிறத்துடன் வளரும்.

.
கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை

சம அளவுஎடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி

கூந்தலில் தடவினால் முடிநன்றாக வளரும்.



வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து

தலையில் பேக் போலபோட்டு ஊறிய பிறகு

தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.


. எலுமிச்சை ஜுஸ்ஸுடன் தேங்கெண்ணெயை கலந்து

தலையில் பூசிகுறைந்தது அரைமணி நேரம்

ஊறவைத்து குளிக்கலாம்.

[சளி, சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம்]


 வேப்பெண்ணெயை இலெசாக சூடுபடுத்தி

அதை தலையில் பூசிஊறவைத்த பிறகு

ஷாம்பு போட்டு குளிக்கலாம்.


 வேப்ப இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறவைத்து

அந்தநீரை தலை குளிக்க பயன்படுத்தலாம்.


 தயிரில் குருமிளகை பொடித்துகலந்து

தலையில் பூசிவிட்டு

 நன்கு ஊறீய பின்பு குளிக்கலாம்.


தேங்கெண்ணெயில் கருவேப்பிலையைப் போட்டூ

 நன்கு காய்ச்சிஆறவைத்து

அதை தலையில் தேய்த்து ஊறவைத்து

தலை குளித்து வரலாம்.


உலர்ந்த நெல்லிகாயை தேங்கெண்ணெயில் போட்டு காய்ச்சி

அதைஆரவைத்து  பயன்படுத்தலாம்.


தயிரை பூசி ஊறவைத்து தலைகுளிப்பதும் நல்லது.


பிரம்மி ஹெர் ஆயிலுடன் தேங்கெண்ணெயை சமமாக கலந்து

தினமும் பூசுவதும் பலனை தரும்.



 பொதுவாக இளநரையை ஏற்படும் காரணங்களில் முக்கியமாக

டென்ஷனும் ஒரு காரணமாக கூறப்படுகின்றது.

இவை இளநரைக்கு மட்டுமல்லாமல்

உடலில் பல கோளாருகளுக்கும்

இந்த டென்ஷனும்

அதனால் ஏற்படும் ஸ்டிரஸ் காரணமாக உள்ளதால்

கூடிய வரை டென்ஷனை தவிர்த்து வாழ்வது தான்

முழு உடல்ஆரொக்கியத்திற்கும் நல்லது.


பொதுவாக தலைக்கு வரும் தலையாய பிரச்சனையே

முடி கொட்டுவது தான்.

அவை ஏற்பட பல காரணங்கள் இருப்பினும்

சரிவர பராமரிப்பின்மை கூட

ஒரு முக்கிய காரணம் என்றும் சொல்லலாம்.



 இன்றைய அவசர உலகில் ஏதோ குளித்தோமா

காயவைத்தோமா என்றும்,

இன்னும் சிலர் அதுவாகவே காயட்டும் என்றும்

அப்படியே விட்டுவிட்டு

வேறு வேலையைப் பார்க்க செல்வார்கள்

 இவ்வாறு இல்லாமல் முடிக்கேன்று சிறிது தருணம் ஒதுக்கி

அதைபராமரித்து வந்தால் பிறகு

ஒரு பிரச்சனையும் ஏற்படாது.


 அதற்கு வாரம் ஒரு முறை எண்ணெய் மசாஜ் செய்தல் வேண்டும்.

 சிறிது எண்ணெயை கைகளில் பூசிக் கொண்டு

விரல்களால் தலையின்

எல்லா பாகத்தில் இலேசாக அழுத்தி

ஒரு பத்து நிமிடம் மசாஜ் செய்து

அதன் பிறகு குளிக்கலாம்.


 முட்டையை உடைத்து சிறிது எண்ணெயில் கலக்கி

தலையில் பூசி ஒருஇரண்டு மணி நேரம்

ஊறவைத்துவிட்டு பிறகு குளிக்கலாம்.


வெந்தயம், சிறுபருப்பை ஊறவைத்து அரைத்து

தலையில் பூசி குறைந்தது

ஒரு மணிநேரம் ஊறவைத்து

பிறகு அதை கழுவி விடலாம்.


வாரம் ஒரு முறை சீயக்காயை ஊறவைத்து அரைத்து

ஷாம்புக்கு பதிலாக போடலாம்.



அதிக வெய்யில் என்றால் குடை நிழலில் அல்லது

தலைக்கு தொப்பியை அணிந்துக் கொள்வது நல்லது.


 உளுத்தம் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து

அதை தலைமுழுவதும் பூசிவிட்டு குளித்தால்

முடி பளபளப்பாக இருக்கும்.


நீண்ட முடியானால் அதன் நுனியை அடிக்கடி

கத்தரித்துவிட வேண்டும்.

குட்டையான முடி வைத்திருப்பவர்கள்

குறைந்தது இரண்டுமாதத்திற்கொரு முறை

கத்தரித்துக் கொள்வது நல்லது.


 ஷாம்பூ மட்டும் போட்டு குளிக்கக்கூடாது

தொடர்ந்துஅதன் கண்டிஷனரையும் போட வேண்டும்

இல்லாவிடில் முடி வறண்டு விடும்.


 ஈரத்தலையை வாரக்கூடாது

முடி அதிகமாக கழன்று வரும்,

சற்று உலர்ந்த பின்னரே வார வேண்டும்.

பெரிய பற்கள் கொண்ட சீப்பை அல்லது

பிரஷ்ஹை உபயோகிக்க வேண்டும்.

ஒவ்வொரு முறையும் குறைந்தது இருபது முறையாவது

இலேசாக அழுத்தி வார வேண்டும்.


 வேலைக்கு போறவரனால் தினமும் படுக்க செல்லும் முன்

 சிறிதுஎண்ணெயை தலையில் பூசி

காலையில் குளித்துவிடலாம்.


 இவ்வாறு சிறியதொரு பராமரிப்புகள் இருந்தாலே

முடிசம்பந்தமாக வரும் பிரச்சனைகளை குறைக்கலாம்.

பிரச்சனை வந்தப் பிறகு பரிகாரம் தேடுவதற்கு பதில்

தலைமுடிஆரோக்கியமாக இருக்கும்போதே

அதை பேணிகாத்து தக்கவைத்துக்

கொள்வது மிக மிக அவசியம்


இர‌வி‌ல் ஒரு கப் தயிரில்

ஒரு கை‌ப்‌பிடி வெந்தயத்தை போட்டு

ஊற வைக்கவும்.


மறுநாள் காலை அ‌ந்த வெ‌ந்தய‌த்தை ம‌ட்டு‌ம் த‌னியே எடு‌த்து

அரை‌த்து ‌மீ‌ண்டு‌ம் அதனை த‌யி‌ரி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

அதை தலையில் தடவி, 20-30 நிமிடம் ஊற விடவும்.

பிறகு தலையை நீரால் அலசவும்.

உட‌ல் ‌சூ‌ட்டை மு‌ற்‌றிலு‌ம் தடு‌க்கு‌ம்.


கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால்,

கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து

தலையில் லேசாகதடவிக்கொண்டு

பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும்.

இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.



தேநீரில்  மிஞ்சும் தேயிலைத் தூளில்

எலுமிச்சை சாரை பிழிந்து,

தலையில் தேய்த்துக் குளித்தால்,

தலைமுடி பளபளப்பாகும்.


 நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து

தேங்காய்ப் பாலுடன் கலந்து

தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து

குளிக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு,

 மயிர்க்கால்களும் நன்கு வலுப்பெறும்.


குழந்தைகளுக்கு பேன் தொல்லை அதிகமாக இருந்தால்

சீத்தாப்பழக் கொட்டையை இரண்டு நாட்கள் காய வைத்து

பொடி செய்துதேங்காய் எண்ணையில் கலந்து

தலையில் தடவி

ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும்.


சோற்றுக் கற்றாழையை கீறி

அதன் நடுவில் வெந்தயம் வைத்து

இரண்டுபக்கமும் கயிறால் மூடி கட்டி விட வேண்டும்.

கறுப்பு உளுந்தை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

 பின்னர் ஊறவைத்த கறுப்பு உளுந்து,

முளை கட்டிய வெந்தயம்,

சோற்றுக்கற்றாழை கூழ் இவை மூன்றையும் அரைத்து

அதனுடன்செம்பருத்தி இலையையும் சேர்த்து

பேக் போல தலையில் போட்டு

 ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர்

குளித்தால் வெயிலின்கடுமையால் வரும்

நுனி முடியின் வெடிப்பை சரி செய்யலாம்.


 தேங்காய் எண்ணை ஒரு லிட்டர்,

நல்லெண்ணை ஒரு லிட்டர் எடுத்து

அதனுடன் நெல்லிக்காய் சாறு 1/2 லிட்டர் சேர்த்து

நெல்லிக்காய் நீர் வற்றும் வரை காய்ச்சி வடிகட்டி

வாரத்தில் இருமுறை தலையில் தேய்த்து வர

இளநரை வருவதை தவிர்க்கலாம்.


பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை

இந்த மூன்றையும்அரைத்து,

 பின்னர் சோயா பவுடர், நன்னாரி பவுடர், நெல்லிக்காய் பவுடர்

ஆகியவற்றுடன் கலக்க வேண்டும்.

 அத்துடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு,

தேவைக்கு நீர் கலந்து தலையில்

பேக் போட்டு ஒரு மணி நேரம் கழித்து குளித்தால்

பொடுகு நீங்கி விடும்.


பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும்.

உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி,

அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு

நன்கு காய்ச்ச வேண்டும்.

இளம் சூடு பதத்திற்கு ஆறியதும்,

வேப்பம் பூவுடன் சேர்த்துஎண்ணெயை

தலையில் நன்றாகத் தேய்த்து

அரை மணிநேரம்ஊறிக் குளித்தால்,

பொடுகு பிரச்னை தீரும்.

அதிகம் பொடுகு உள்ளவர்கள்,

வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டுமுறையோ,

மூன்று வாரங்கள் குளித்தால்

பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.


முடிகொட்டாமல் இருக்கவும்,

பொடுகில் இருந்து தலையைப்பாதுகாக்கவும்

புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ

மூன்றையுமே அரைத்துகலக்கி

தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு

குளிர்ந்த நீரில் குளித்து வந்தால்

முடி கொட்டாது. பொடுகும் வராது. .


 கூந்தல் உதிர்வதற்கான காரணங்கள்

ஆரோக்கியமற்ற உணவு மற்றும்

இரும்பு சத்து குறைவான

உணவு பழக்கவழக்கம்.

 மன உளைச்சல், கோபம், படபடப்பு.

கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங்,

ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள்.

 கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது

 மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது.

 அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று,

குளோரின் கலந்த நீர்

மற்றும் சுற்றுப்புற மாசு.


பெண்களுக்கு முடி கொட்டுவது தீராத பிரச்னையாக உள்ளது.

முடி நன்கு வளர வேண்டுமானால்,

புரோட்டீன் சத்து அதிகம் உள்ள

பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது.


 முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள்:


வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து

தலையில் தேய்த்து

 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.

 இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால்,

எந்தகாரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும்.

அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும்.

கருகருவென வளரும்.


இரவில் நெல்லிக்காய்களை தண்ணீரில் ஊறப்போட்டு,

காலையில்அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து

தலையில் தேய்த்து குளித்துவந்தால்

 முடி உதிர்வது நிற்கும்.

செம்பட்டை முடியும் நிறம் மாறும்.


தலைமுடி நன்றாக வளர

கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து

தலையில் தேய்க்கலாம்.

 இப்படி செய்து வந்தால் முடி உதிராது,

அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.



நரைமுடி கருப்பாக வேண்டுமா?

பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே

நரைமுடி தோன்றி விடுகிறது.

சிலருக்கு வம்சாவளியாகவும் நரை வருவதுண்டு.

கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல்

போன்றவற்றால்பித்த நரை உண்டாகும்.

வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

 மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து,

அதில் எலுமிச்சம்பழச்சாறையும்,

வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ளவேண்டும்.

இக்கலவையை முதல் நாள் இரவே

செய்து கொள்ள வேண்டும்.

காலையில் எழுந்ததும், இக்கலவையை

அனைத்து முடிகளிலும்

படும்படிநன்றாக தேய்த்து

இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து

பிறகுசிகைக்காய்த்தூள் தேய்த்து

 நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும்.

 குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன்,

தலையில் எண்ணெய் பசை

இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.


 கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள்

துவையல் அரைத்துசாப்பிட வேண்டும்.

காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால்,

படிப்படியாக குறைத்து

அறவே நிறுத்தி விடவேண்டும்.


முடி கொட்டுவதை தடுக்க

வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து

ஃபிட்ஜில் வைத்து கொள்ளுங்கள்

தினமும் குளிப்பதற்கு முன்பாக

தலையில் நன்கு தேய்த்து

அரைமணிநேரம் நன்கு ஊறவிட்ட

ஷாம்பு போட்டு நன்கு அலசிவிடுங்கள்

ஷாம்பு தினமும் போட வேண்டிய அவசியமில்லை

இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்து வரவும்.

நிச்சயமாக முடி கொட்டுவது நின்றுவிடும்.






























கருத்துகள் இல்லை: