வெள்ளி, மே 27, 2011

விடுமுறை சுற்றுலா- வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்





தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள்

சரணாலயம் வேடந்தாங்கல் ஆகும்


சென்னையில் இருந்து 85 கி.மீ. தொலைவில் வேடந்தாங்கல்

பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.


1858 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் பழமையான

பறவைகள்சரணாலயம் ஆகும்.


இது  30 ஹேக் அளவிலான ஒரு சதுப்பு நிலப் பரப்பு.


இங்குள்ள மரங்களும், ஏரியும் பறவைகள் கூடு கட்டி வாழ்வதற்கு

 எற்ற சூழ்நிலையை தருகின்றன.

இங்குள்ள பெரிய ஏரியில், ஆண்டுதோறும் மழைக் காலத்தில் நீர்நிரம்பும்.

அப்போது ஏரியில் நீர்கடப்பை மரங்கள் அடர்த்தியாக வளர்கின்றன.

இங்கு நிலவும் தட்ப வெப்ப நிலை பறவைகளின்

இனப்பெருக்கத்திற்குஏற்றதாக உள்ளது.

எனவே,  வெளிநாடுகளைச் சேர்ந்த பறவைகள்  இனப்பெருக்கத்திற்காக

ஆண்டுதோறும் இங்கு வருகின்றன.

இனப்பெருக்கம் முடிந்ததும் திரும்பிச் செல்கின்றன


பறவை ஆர்வலர்களின் சொர்க்கம் என்றே இதைச் சொல்லலாம்.


குளிர்காலமே பறவைகளை பார்ப்பதற்கு ஏற்ற பருவமாகும்.


அதிகாலை அல்லது மாலை3-6 வரை   பார்ப்பதற்கு ஏற்ற நேரம் ஆகும்.



உலகப்புகழ் பெற்ற இந்த சரணாலயத்தில் தற்போது, கூழை கடா, நத்தை

கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நீர் காகம்,

மிளிர் உடல் அரிவாள் மூக்கன், வர்ண நாரை, குருட்டுக் கொக்கு, வெள்ளை

கொக்கு, பாம்பு தாரா, சாம்பல் நாரை, நீர் வாத்து உள்ளிட்ட 26 வகையான

பறவைகள் உள்ளன.


சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் கூடுகட்டி வசிக்கின்றன.


இந்த பறவைகள் அனைத்தும் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான்,

பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, சைபீரியா உள்ளிட்ட உலகின் பல்வேறு

நாடுகளை சேர்ந்தவை.


இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்து விட்டு அதனுடன் மீண்டும்

தாய் நாடு செல்லும்


மதுராந்தகம், உத்திரமேரூர், பழையபுத்தூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட

ஏரிகளில் தண்ணீர் போதுமான அளவில் இருப்பதால் இந்த பறவைகளுக்கு

தேவையான தீனி கிடைக்கிறது.


இந்த பறவைகளில் பெரும்பான்மையானவை, முட்டையிட்டு குஞ்சு

பொரித்து பாதுகாத்து வருகின்றன.

முட்டைகளையும், குஞ்சுகளையும் ஆண், பெண் பறவைகள் தீவிரமாக

பாதுகாத்து வருகின்றன.

ஆண் பறவை இரை தேட சென்றால் பெண் பறவையும்,

பெண் பறவை இரை தேட சென்றால் ஆண் பறவையும் பாதுகாக்கிறது.


வேடந்தாங்கலில் நீர் நிறைந்த ஏரிகள் பல உள்ளன.

அவற்றில் அடர்த்தியாக வளர்ந்துள்ள மரங்களில் பறவைகள்

கூடு கட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன.


வேடந்தாங்கல் ஏரி மற்றும் அருகில் உள்ள கருக்கிலி ஏரி

ஆகியவற்றை,வனத்துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

 வேடந்தாங்கல் ஏரியில் நீர்கடப்பை, மூங்கில், கருவேலம், நாவல் என,

ஐந்தாயிரம் மரக்கன்றுகளும், கரிக்கிலி ஏரியில் 10 ஆயிரம் கன்றுகளும்

   வனத்துறையினாரால்    நடப்பட்டுள்ளன.

அவை, தற்போது அடர்ந்து வளர்ந்து, பறவைகள்

வாழ்விடங்களாய் இருக்கின்றன.


இப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பறவைகளைப் பாதுகாப்பதில்

மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் வெடி வெடிப்பதில்லையாம்,

சத்தம் போட்டு பேசுவதில்லையாம்,

கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டுவதில்லையாம்.

இப்படி 250 ஆண்டுகளாக தொடர்ந்து பறவைகளைப்

பாதுகாத்து வருகின்றனர்



வேடந்தாங்கல் சரணாலயத்தை காண கட்டணமாக

சிறுவர்களுக்கு ரு 2, பெரியவர்களுக்கு ரு 5 வசூலிக்கப்படுகிறது.


கேமராவுக்கு ரு 25, வீடியோ கேமராவுக்கு ரு 150 கட்டணம்

செலுத்த வேண்டும்.


அற்புதமான புகைப்படங்கள் எடுக்க அருமையான location.


செவ்வாய்கிழமை சரணாலயத்திற்கு விடுமுறை நாள்.


காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சரணாலயம் திறந்திருக்கும்.

பார்வையாளர்கள் வசதிக்காக உயர் கோபுரத்தில்[ 24' ] பைனாகுலர்

அமைக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் பறவைகளை மிக அருகில் ரசிக்கலாம்.



இரை தேட செல்லும் பறவைகள் மாலையில் கூடுகளுக்கு திரும்பும்போது

வானில் வட்டமிட்டபடி வரும்.

பழ வண்ணங்களில், பலவகையான பறவைகள் கூட்டம், கூட்டமாக வரும்.

இது பார்ப்பதற்கு ரம்மியமாக இருக்கும்.


 மரங்களிடையே நடந்து செல்ல பாதைகளும், ஆங்காங்கே அமர்ந்து

பறவைகளை ரசிப்பதற்கு பெஞ்சுகளும் அமைக்கப் பட்டு இருக்கிறது.

பறவைகளை கலவரப்படுத்தாமல் ஓசையின்றி ஒரு புறமாக இருந்து

மௌனமாக பறவைகளின் அருமையான செயல்பாடுகளை கவனிப்பது

ஒரு சுவாரசியமான அனுபவம் ஆகும்.


பறவைகளும் ஓரளவிற்கு மனித நடமாட்டத்திற்கு பழக்கப்பட்டே

இருக்கின்றன என்றே கூறலாம்.

அதற்காக எல்லை மீறி அவற்றை பயமுறுத்தக்கூடாது.

அவை நம் நாட்டின்  அழகிய   விருந்தாளிகள்.




சுற்றுலா பயணிகள் தங்குவதற்கென விடுதி சரணாலயத்தின் நுழைவு

வாயிலிருந்து ஒரு கிமி தொலைவில் உள்ளது.

இரண்டு A.C  அறைகளும்,  இரண்டு A.C  இல்லாத அறைகள் என

மொத்தம் 4 அறைகள் தான் உள்ளது.

ஒரு அறையில் 12 மணி நேரம் தங்கலாம்.

அதற்கான கட்டணம் ரு 750.

கிண்டி வன உயிரின காப்பாளர் அலுவலகத்தில் இதற்கு

முன்பதிவு செய்து கொள்ளலாம்.



சென்னையில் இருந்து செங்கல்பட்டு சென்று, அங்கிருந்து

வேடந்தாங்கல் செல்ல வேண்டும்.

தாம்பரம், பாரிஸ் கார்னரிலிருந்து செங்கல்பட்டுக்கு செல்ல

பேருந்து வசதி உள்ளது.


மதுராந்தகம், செங்கல்பட்டில் இருந்து குறைந்த பஸ் இயக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர்.

சீசன் காலத்திலாவது கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.

சுற்றுலா பயணிகளுக்கு ஓட்டல் வசதி இல்லை.

இதனால் பயணிகள் இரவில் வீடு திரும்பி விடுகின்றனர் என்கிறார்கள்
                  




















வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பார்வையிட

டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலமே சிறந்ததாகும்.















பழங்கள், தேநீர், குளிர்பானங்கள், snacks   ஆகியவை சரணாலயத்திற்கு


வெளியில் உள்ள கடைகளில்   கிடைக்கிறது.


கழிப்பறை வசதிகளும் உள்ளது.

 
GUIDE களும் உள்ளனர். கட்டணம் கொடுக்க வேண்டும்.


பைனாகுலர், CAMERA WITH ZOOM LENS, குறிப்பு எடுக்க ஒரு நோட்டு புத்தகம்

கொண்டு செல்வது நம் பயணத்தை இன்னும் சுவாரசியம் ஆக்கும்.



காஞ்சிபுரம், மகாபலிபுரம் - இங்கிருந்தும் செல்லலாம்.


இங்கிருந்து 9கிமீட்டர் தொலைவில்   உத்திரமேரூர் செல்லும் பாதையில்     

கரிக்கில்லி என்ற இடத்தில் இன்னுமோர் பறவைகள்

சரணாலயம் அமைந்துள்ளது.

இங்கு சீசன் காலங்களில் மட்டுமே பறவைகள் வருகின்றன.




How to Get There

By Air :




 Chennai is the nearest and most convenient airport, connected by

daily Indian Airlines flights from


Delhi (6:40, 10:15, 16:45 & 19:00),


 Mumbai (7:05, 9:20, 11:45, 18:10 & 20:30),




Bangalore (8:30) and Kolkata (14:30 & 18:10).





By Rail :

Chengalpattu is the nearest railhead.

 Delhi is convenientlyconnected through


the Thirukkural Exp. (6:00, Sat) &

T N Smprk Krnti (7:25, Tue, Thu)


while Mumbai through the Madurai Exp. (00:15, Fri) &

Nagarcoil Exp. (12:05, Tue, Sat).


Daily trains running Chennai-Chengalpattu include

the Nellai Exp. (21:00), Kanyakumari Exp. (17:30),


Pandian Exp. (21:30), Pearl City Exp. (18:30),


 Anantapuri Exp. (19:30) & Rock Fort Exp. (22:30).





By Road :




To travel by road from Chennai,

 take the national highway no. 45 to Chengalpattu

and head south towards Padalam junction.


A right turn here will lead to the sanctuary road.


The sanctuary can also be accessed from other nearby towns of

Kanchipuram and Mahabalipuram,


 but the road is not very well maintained.


State transport buses ply between Chennai and Chengalpattu,


 the best option however would be to travel in your

own four wheeler


or


 hire a taxi from Chennai


The sanctuary can be reached by car from Chennai,between 1,5

and 2 hours to get there.

Take the highway to the south, passing the airport, Pallavaram,

Tambaram, Chengalpattu and don't miss the signpost to the right.

From the signpost it's another 12km to the sanctuary.



Distances from Major CitiesChennai : 86 km (SW)

Chengalpattu : 30 km

Delhi : 1784 km

Bangalore : 29 km

Contact Details

Wildlife Warden
259 Anna Salai
DMS compound
Teynampet
Chennai 600 006
Ph. 044-24321471


 






 


 









 


கருத்துகள் இல்லை: