தேவையான பொருட்கள்
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க,
தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி
வைத்துக்கொள்ளவும்.*
ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து
இறைச்சியுடன் சேர்க்கவும்
உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ்
ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.*
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம்
கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.*
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.*
ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும்
பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து
கிளறவும்.*
சிறிது நேரம் சென்றபின்
2 தே.கரண்டி சோயா சாஸ்,
சில்லி சாஸ், 1 தே.கரண்டி
4 தே. கரண்டி டொமாடோ சாஸ்
போட்டு கிளறிவிடவும்
.
சில்லி சிக்கன் குழம்பு தயார்.
பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க
.
குறிப்பு
விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய்
போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்..
உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை
அலாதியாக இருக்கும்[.விருப்பம் ]
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால்
பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து
வதக்கிக்கொள்ளவும்
.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)
சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1
பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)
இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க,
தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி
வைத்துக்கொள்ளவும்.*
ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து
இறைச்சியுடன் சேர்க்கவும்
உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ்
ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.*
ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம்
கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.*
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும்.
இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.*
ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும்
பச்சை மிளகாயைப் போட்டு வதக்கவும்.
நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து
கிளறவும்.*
சிறிது நேரம் சென்றபின்
2 தே.கரண்டி சோயா சாஸ்,
சில்லி சாஸ், 1 தே.கரண்டி
4 தே. கரண்டி டொமாடோ சாஸ்
போட்டு கிளறிவிடவும்
.
சில்லி சிக்கன் குழம்பு தயார்.
பரோட்ட, சப்பாத்திக்கு சூப்பரா இருக்குங்க
.
குறிப்பு
விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய்
போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்..
உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை
அலாதியாக இருக்கும்[.விருப்பம் ]
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால்
பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து
வதக்கிக்கொள்ளவும்
.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை போடுங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக