ஞாயிறு, மே 01, 2011

குரு வழிபாடு.

09-05-2011--------- 17-05-2012
 குரு பகவான், கர வருஷம் சித்திரை மாதம் 25 - ஆம் தேதி

(8-5-2011) ஞாயிற்றுக்கிழமை    நள்ளிரவு, 1.09 மணிக்கு மீன  ராசியில் இருந்து

மேஷ ராசிக்கு  இடப் பெயர்ச்சி ஆகிறார்.
 இந்த ராசியில் மே 17 ,2012 வரை சஞ்சாரிப்பார்.
அதாவது ஓராண்டு காலம் குருப் பெயர்ச்சி காலம் ஆகும்.

குரு பெயர்ச்சியால் நற்பலன் பெரும் ராசிகள்-
மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம்
சுமாரான பலன் பெரும் ராசிகள்-
ரிஷபம், விருச்சிகம், மகரம், கும்பம்
கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்-

மேஷம, கடகம், கன்னி




கிரகங்களிலேயே சுப கிரகம் குரு.

இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர,

இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது.

இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது.

குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும்.

‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட

வாக்கு இவரை குறிப்பதுதான்.

ஒருவருக்கு திருமண பாக்கியம் கிடைக்க குரு பலம் அவசியம்.
 குரு பகவான் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும்  அந்த
இடத்திலிருந்து 5,7,9இடத்து பார்வை பெற்ற ஸ்தானங்கள் குரு பலம்
அடைகின்றன 

குருமந்திரம்
ப்தகாஞ்சன வர்ணாபம் சதுர்புஜ ஸமந்விதம்
                            தண்டாக்ஷ ஸத்ர மாலாம் சகமண்டலு வரான்விதம்
பீதாம்பரதரம் தேவம்  பீத கந்தானு லேபனம்
புஷ்பராக மாயம் பூஷணம் விசித்ர மகுடோஜ்வலம்
ஸ்வர்ணாஸ் வரத மாநடம் பீதத்வ ஜ ஸுஸோபிதம்!

கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும்.
அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம்.
நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும்.
அங்கும் வழிபாடு செய்யலாம்.
 திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார்.
எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை
சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.

‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே

க்ரூணி ஹஸ்தாய தீமஹி

தந்தோ குரு பிரசோதயாத்’

அல்லது

ஓம் குரு தேவாய வித்மஹே

பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’ என்ற

குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’

என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.

வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு
செல்லலாம்.
அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில்
கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை
சுண்டல் வழங்கலாம்
குரு பகவானின் அம்சமாக தட்சிணாமூர்த்தி கருதப்படுகிறார்.
சிவபெருமானே தட்சிணாமூர்த்தி என்பது ஐதீகம்.

பார்வதி தேவி இமவான் மகளாக பிறந்து வளர்ந்த நேரத்தில்

பிரம்மதேவருடைய மகன்களான  சனகன், சனந்தன், சனாதனன்சனத்

குமுரன் ஆகிய நான்கு ரிஷகள் சிவபெருமானிடம் வந்து ஒரு

கோரிக்கையை வைத்தனர்.. "வேதங்கள் , ஆகமங்களின் உட்பொருளை

உபதேசிக்க வேண்டினர்.

அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு வேதங்களை

உபதேசிப்பதற்காக சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவம் தாங்கியதாக

புராணங்கள் கூறுகின்றன.

நவக்கிரக பீடத்தில் உள்ள குருவை முல்லை மலரால் அர்ச்சனை
செய்யலாம்.
வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை
படைத்து அர்ச்சனை செய்து வழிபடலாம்.  




தட்சிணாமூர்த்தி   துதி

குருவே ஸர்வ  லோகானாம்

பிஷஜே பவ ரோகி ணாம்

நிதயே சர்வ வித்யானாம்

ஸ்ரீ தஷிணா மூர்த்தயே நம!


வியாழக்கிழமைதோறும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபாடு
செய்யலாம்.
வியாழக்கிழமைதோறும் ராகவேந்திரரை வணங்கி வரலாம்.
அவ்வப்போது நம்மனதில் குரு ஸ்தானத்தில் நினைத்திருப்பவர்களை
வணங்கி ஆசிபெறலாம்.
குரு பகவானுக்குரிய மந்திரங்களை கூறி அவரை வழிபட்டு வரலாம்.
விஷ்ணு சகஸ்ஹரநாம பாராயணம் செய்யலாம்.
அரசு, வேம்பு, நாகர், ஆகியவைகளை 9 முறை சுற்றி வலம் வரலாம்.

குரு ஸ்லோகம்-
குருர் பிரம்மா குருர் விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர:
குரு சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குருவே நம






குரு பாடல்

குணமிகு வியாழ குருபகவானே

மனமுடன் வாழ  மகிழ்வுடன் அருள்வாய்!

பிரகஸ்பதி வியாழப் பரகுரு நேசா

கிரக தோஷமின்றி காத்தருள்வாயே

கருத்துகள் இல்லை: