செவ்வாய், மே 10, 2011

குழந்தைகள் படிப்பு

சில குழந்தைகள் நன்கு படிப்பார்கள்.

சில குழந்தைகள் ஆர்வக்குறைவினால்

சரியாகப் படிக்க மாட்டார்கள்.

சில குழந்தைகள் கஷ்டப் பட்டு படித்தாலும்

புரியாமல் , சிரமப்படுவார்கள்.

சில குழந்தைகள் நன்கு படித்திருப்பார்கள்.

தேர்வு எழுதும் போது டென்ஷன்யால் 

பதட்டமாகி, மறந்து விடுவார்கள்.

எந்த பிரச்சனையாக இருந்தாலும்

அதை நீக்கி, படிப்பில் முன்னேற்றத்தை தர

லட்சுமி ஹயக்ரீவர் வழிபாடு உதவும்.

குதிரை முகத்துடன் இருக்கும்

இப்பெருமானை வழிபட்டே ,

சரஸ்வதியே அனைத்து  கலைகளையும்

கற்றதாகச் சொல்வார்கள்.



காலை, மாலை நேரத்தில், படிக்கும் முன்

"ஞானானந்தம் மயம் தேவம் 


நிர்மல ஸ்படிகாக்ருதிம் 


ஆதாரம் சர்வ வித்யானாம் 


ஹயக்ரீவம் உ பாஸ் மஹே!"


என்று சொல்லிய பின் படிக்கத் துவங்க வேண்டும்.

கல்விக்குரிய நாள் புதன் கிழமை.

அன்று பெருமாள் கோவில் உள்ள

ஹயக்ரீவர் சந்நிதியில் நெய் தீபம் 


ஏற்றி வந்தால் , நிச்சயம் பிள்ளைகளுக்கு

படிப்பில் ஆர்வம் உண்டாகும். 

கருத்துகள் இல்லை: