செவ்வாய், டிசம்பர் 14, 2010

வைகுண்ட ஏகாதசி

இந்த நன்னாள் இந்த மாதம் 17 ந் தேதி வெள்ளிக் கிழமை வருகிறது.
அன்று முழுவதும் துளசி தீர்த்தம் அருந்தி, அன்று இரவு முழுவதும் கண் விழித்து இருந்து நாராயண நாமம் சொல்லி .மறுநாள் துவாதசி அன்று காலையில் சாப்பிட்டு விரதம் முடிப்பது மரபு.
இந்நாளைப் பற்றி சிலவிஷயங்கள் நம்பப்படுகிறது.
1. ஏகாதசி விரதம் இருந்தாலே போதும்? செய்த பாவங்கள் தீர்ந்து விடும். is it ?
அப்ப எந்த பாவம் வேண்டுமானாலும் செய்து விட்டு just இந்த விரதம் இருந்தால் சரியாகி விடுமோ? பாவவான்கள் புண்ணியவான்கள் ஆகிவிடுவார்களா? so simple
2. இந்த நாளில் மரணம் அடைபவர்கள் எத்தகைய பாவிகளாக இருந்தாலும் straight ஆக சொர்க்கம் போய்விடுவார்கள்; is it?
நாம் பாவங்களை செய்து கொண்டே இருப்போம்; ஏகாதசியன்று விரதம் இருந்து பாவ விமோசனம் பெறலாம் என்று அர்த்தம் இல்லை.
ஒரு குட்டிக் கதை-
ஒரு முனிவரும், அவர் சீடரும், ஒரு நதியைக் கடக்க படகுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு தாசிப் பெண், அக்கரை செல்ல வந்தாள். அவளைக் கண்ட முனிவர் "இழிந்த தொழில் செய்யும் நீ, நாங்கள் செல்ல இருக்கும் படகில் வரக் கூடாது; பாவம் செய்பவள் நீ; வேறு படகில் வா" எனக் கடிந்து கொண்டார்.
அவள் மனம் வருந்தி ஒதுங்கி நின்று கொண்டாள். நிர்பந்தம் காரணமாகவே இத்தொழில் இருப்பது தெரியாமல் முனிவர் பேசிவிட்டாரே என மிகுந்த வேதனை அடைந்தாள். அதனால் நெஞ்சு வலி வந்து மரணம் அடைந்தாள்.
முனிவர் சென்ற படகு கவிழ, நீச்சல் தெரிந்த படகோட்டியும், சீடரும் தப்பி விட்டனர்.முனிவரோ நீரில் மூழ்கி இறந்தார்.
இறந்த பெண்ணும், முனிவரும் எமனுலகம் சென்றனர். ஒரே இடத்தில் நின்றனர்.பின் நரக வாசல் வழியே முனிவரும், சொர்க்க வாசல் வழியே பெண்ணும் அழைத்துச் செல்லப் பட்டனர்.
கோவம் அடைந்த முனிவர் " இதென்ன அநியாயம்! தவமே வாழ்வாகக் கொண்ட நான் நரகம் செல்வதா? பாவத் தொழில் செய்த பெண்ணிற்கு சொர்க்கமா ?" எனக் கேட்டார். யம தூதர்கள் " முனிவரே, பிறரை குறை கூறுபவர்கள், அவர்கள் நிலை அறியாது நிந்தித்துப் பேசுபவர்கள், எவ்வளவு பெரிய தபஸ்வியாக இருந்தாலும் தங்களது மேலான தவ வலிமையை இழந்து சாதாரணமானவர்களை விடவும் கீழ் நிலைக்குப் போய் விடுவார்கள். மேலும் நீர் ,அவள் மனதை குத்தி காயப் படுத்தினீர்கள்; பிறர் மனத்தைக் காயப்படுத்துபவர்களின் கண்களை குத்துவது எங்கள் வழக்கம்; இப்போது உங்கள் கண்களும் பறிக்கப்படும். அந்த பெண்ணோ இழிந்த இப்படி ஒரு வாழ்வு , இனி வரும் பிறவிகளில் வரக்கூடாது என, ஸ்ரீமந் நாராயண மூர்த்தியை நினைத்து கண்ணீர் வடித்து வாழ்நாள் எல்லாம் அவர் நினைவாகவே வாழ்ந்தாள்; அதனால் அவள் வைகுண்ட பதவியைப் பெறுகிறாள்" என்று கூறி அழைத்துச் சென்றனர்.
so வெறும் விரதங்களும், தவங்களும் சொர்க்கத்தை தராது. பிறர் மீது நாம் காட்டும் கருணையும், இரக்கமுமே சொர்க்கத்தை தரும். 

கருத்துகள் இல்லை: