செவ்வாய், டிசம்பர் 14, 2010

தானியக் குழம்பு

தேவையான பொருட்கள்-
காய்ந்த சிவப்புக் கலர் காராமணி -----1/4 கப்
[தட்டப் பயறு]
காய்ந்த பட்டாணி------------------------1/4 கப்
வெள்ளை சுண்டல் கடலை -------------1/4 கப்
முளைவந்த பாசிப் பயறு -----------------1/4 கப்
இவற்றை ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கவும்.
காலையில் அளவான தண்ணீரில் சிறிது உப்பிட்டு வேகவைக்கவும்.
தண்ணீர் இருந்தால் வடித்து வைக்கவும். பயன்படுத்தலாம்.
வறுத்து அரைக்க-
சீரகம்----------------------2 ts
கருவேப்பிலை ----------- கொஞ்சம்
காய்ந்த மிளகாய்---------6-7
துருவிய தேங்காய் -------- 1/4 கப்
தனியா தூள் ----------------2 ts
இரண்டு ts எண்ணையில் மேலே உள்ள வரிசைப்படி பொருட்களைப் ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வணக்கவும்.
தேங்காய் நன்கு வறுபடணும். குறைந்த தணலில் வைத்து செய்யவும்.
ஆறியதும் இதனுடன், வேகவைத்த தானியங்கள் ஒவ்வொன்றும் ஒரு tbs அளவில் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
ஒரு கடாயில் 3 ts எண்ணை ஊற்றி கொஞ்சம் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதனுடன் சிறியதாக அரிந்த ஒரு தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.
அதில் அரைத்ததைப் போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் வேக வைத்த தானியங்களைப் போடவும். உப்பு போடவும்.
வேகவைத்த நீரோ, அல்லது தேவையான அளவு நீரோ சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு ஓரளவிற்கு கெட்டியாக இருக்க வேண்டும்.
மேலே மல்லித் தளை போடவும்.
இட்லி, தோசை, சப்பாத்திக்கு நல்ல side dish .





கருத்துகள் இல்லை: