வியாழன், டிசம்பர் 09, 2010

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

எல்லோராலும் விரும்பப் படுவது அழகு. அழகாக இருக்க விரும்பாத பெண்கள்
[ஆண்களும்தான்] யாராவது இருக்கிறார்களா!பெண்கள் இயற்கையிலே ஏதாவது ஒரு விதத்தில் அழகுடையவர்களாக பிறக்கிறார்கள். ஆனால் அதை வெளிப்படுத்தத் தெரியாததால், அல்லது அக்கறை இல்லாததால் அழகு இருந்தும் அழகற்றவர்களாய் தெரிகிறார்கள். கொஞ்சம் நேரம் ஒதுக்கி வீட்டில் இருக்ககூடிய பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்று இருக்க முயற்சி செய்வோம்.
முகம், கழுத்து, கைகள் பளிச்சென்றும் ,மிருதுவாகவும் இருக்க-
பெரிய எலுமிச்சை பழத்தின் சாறு எடுத்து வடி கட்டவும்.
சம அளவு நல்ல கிளிசரின் கலந்து வைக்கவும்.
3-4 மாதங்கள் கெடாது.
காலையில் முடியை மேல் நோக்கி வாரி முடிந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும்.
இந்த கலவை ஒரு ஸ்பூன் +++தயிரின் மேலாடை ஒரு ஸ்பூன் கலக்கவும்.
இந்த கலவையை விரல்களால் மேல் நோக்கியும்,சர்குலர் முறையிலும் முகத்திலும், கழுத்திலும் தேய்க்கவும்.
கைகளில் முழங்கையிலிருந்து நுனி விரல்கள் வரை நன்றாகத் தடவவும்.
முக்கியமாக, மேஜை மேல் கைகளை ஊன்றிக் கொண்டு வேலை செய்வதால் கைகளின் பின்புறத்தில் காய்த்து, கருத்துப் போய் இருக்கும் இடங்களில் தடவி மென்மையாக தேய்த்து விடவும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, இளம் சூடான நீரில் கழுவி விட்டு, ஏதாவது கிளிசரின் சோப்பு பயன் படுத்தி அலம்பவும்.

கால்களை பாத்து நிமிடமாவது வெதுவெதுப்பான சோப்பு அல்லது சாம்பூ கலந்த நீரில் வைக்கவும். பழைய டூத் பிரஷ் அல்லது pumic stone அல்லது scarubber கொண்டு நகங்களின் பக்கமும், குதிகாலிலும் நன்றாகத் தேய்க்கவும்.இதனால் உலர்ந்த தோல் நீக்கப்படும். பீன் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனால் ரத்த ஓட்டம் அதிகம் ஆகும்.
நீரில் ஊறியதால் நகங்கள் மென்மையாக இருக்கும். இப்போது nail cutter கொண்டு நகங்களை சீராக வெட்டவும். கோல்ட் கிரீம் அல்லது தேங்காய் எண்ணையை நகங்களின் மேல் தடவி filer பயன்படுத்தி நகங்களின் உட்புறமாக வளைவாகத் தேய்த்தால் அங்குள்ள உலர்ந்த சருமம் அகன்று விடும். எண்ணை அல்லது கீரிமை கால்களில் நன்றாகத் தேய்த்து விடவும். இதனால் சருமம் மிருதுவாகவும், பளபளப்பாகவும் தெரியும்.
எலுமிச்சை தோலால் நகப்பகுதிகளைத்துடைத்துக் கொண்டால் நகங்கள் பலப்படும் ; சீக்கிரம் உடையாது.
களைப்பாக இருக்கும் போது மிதமான வெந்நீரில் நாலைந்து சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு கால்களை அதனுள் வைத்துக் கொள்ள வேண்டும்.தளர்ச்சி நீங்கியவுடன் பத்து அல்லது பதினைந்து நிமிடம் கால்களுக்கு ஓய்வு தர வேண்டும். இந்த சிறிய ஓய்வினால் கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

கண்களுக்கு ஓய்வு தேவை. கண்களை இரு கைகளினால் மூடிக் கொண்டு மேஜையில் முழங்கையை ஊன்றிக் கொள்ள வேண்டும்.
தலையை கீழாக சரித்து வெளிச்சம் கண்களை அணுகாமல் கழுத்து தசைகளை தளர்த்திக் கொண்டு 5-10 நிமி இருக்கவும்.
கண்களுக்குக் கீழ் சுருக்கம் விழுவதை தவிர்க்க-கண்களை குளிர்ந்த நீரால் அடிக்கடி கழுவ வேண்டும்.
விளக்கெண்ணை அல்லது eye cream தடவிக் கொண்டு தூங்கலாம்
அதிக வேலை, கவலைகள், தூக்கமின்மை ,வயது போன்ற காரணங்களால் கண்ணுக்கு கீழ் கருவளையும் தெரியும். இந்த காரணிகளை போக்கி கொள்ள முயற்சி செய்யுங்கள்; முடியாவிட்டால் ?????????????
வெள்ளரி சாறை பஞ்சில் தோய்த்து கண்களின் மேல் பத்து நிமிடம் வைக்கவும்.
பன்னீரையும் இது போல் பயன் படுத்தலாம்.
உருளைக் கிழங்கின் சாறு, பொதினா சாறையும் கருவளையத்தின் மேல் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
எலுமிச்சை சாறும் தடவலாம்.
நறுக்கிய வெள்ளரி ஸ்லைஸ்களை மூடிய கண்களின் மேல் 15 நிமி வைக்கலாம்.
தினமும் 5-10 நிமிடங்கள் விழிகளை மேலும், கீழும், இரு பக்கங்களிலும் சுழற்றி செய்யப்படும் பயிற்சியால் கண்கள் சுறுப்சுறுப்படைந்து விளங்கும்.
தூசி, அதிக வெயில் உள்ள இடங்களுக்குச் செல்லும் போது தரமான cooling glass
அணிந்து செல்வது நல்லது.

கருத்துகள் இல்லை: