செவ்வாய், டிசம்பர் 07, 2010

கூந்தல் பராமரிப்பு

சில ஹெர்பல் ஷாம்பூ-
வேப்பிலை ஷாம்பூ-
சந்தனப் பவுடர் -------125 கிராம்
சீகைக்காய்ப் பவுடர் ---- 500 கிராம்
வேப்பிலைத்தூள் ------- 400 கிராம்
கடலைமாவு ------------- 500 கிராம்
இவற்றை நன்கு கலந்து இரண்டு, மூன்று முறை சலித்து ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் வைத்துப் பயன்படுத்தவும்.
எல்லா விதமான முடிக்கும் பயன் படுத்தலாம்.

சந்தன ஷாம்பூ-
சீகைக்காய்---- 100 கிராம்
சந்தன எண்ணை-4 ts
தண்ணீர் ----------- 1250 மிலி
ரீத்தா--------------- 100 கிராம்
ஆம்லா [நெல்லிக்காய் தூள்] ------- 50 கிராம்
கசகசா --------------- 50 கிராம்
புங்கங்காய் --------- 50 கிராம்
எண்ணையைத் தவிர பிற பொருட்களை தண்ணீரில் போட்டு காய்ச்சவும்.
சீகைக்காய், புங்கங்காய்- தட்டிப் போடவும்.
பாதியாக சுண்டியதும் இறக்கவும்.
ஆறியதும் வடி கட்டவும்.
சந்தன எண்ணைக் கலந்து பயன் படுத்தவும்.
எண்ணைப் பசை அதிகம் உள்ள முடிக்கு நல்லது.

லாவண்டர் ஷாம்பூ-
சீகைக்காய் ----------- 100 கிராம்
ஆம்லா ----------------- 50 கிராம்
மருதாணி ---------------- 2 கைபிடி
கசகசா -------------------- 50 கிராம்
ரீத்தா ---------------------- 100 கிராம்
தண்ணீர் ------------------- 1250 கிராம்
லாவண்டர் எண்ணை -------- 4 ts
எண்ணையைத் தவிர மற்ற பொருட்களை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் காலையில் பாதியாகும் வரை காய்ச்சவும்.
ஆறியதும் வடிகட்டி, லாவண்டர் எண்ணை கலந்து பயன் படுத்தவும்.

இயற்கை கண்டிஷனர்-
வீட் ஜெர்ம் ஆயில் --------- 1 tbs
கிளிசரின் -------------------- 1 tbs
பசும்பால் --------------------- 1 tbs
தேங்காய்ப் பால் --------------1 tbs
முட்டையின் மஞ்சள் கரு ----- 1
நன்கு கலந்து முடியில் நன்கு தேய்த்து , பின் மிதமான சூட்டில் தண்ணீர் ஊற்றி அலசவும். இது கூந்தலுக்கு மெருகூட்டும்.

சீகைக்காய்ப் பொடி தயாரிக்கும் முறை-
சீகைக்காய் ----------------- 500 கிராம்
பாசி பயறு அல்லது பாசி பருப்பு ---- 250 கிராம்
வெந்தயம் -------------------------- 100 கிராம்
கருவேப்பிலை ---------------------- மூன்று கைபிடி
வேப்பிலை ---------------------------- மூன்று கைபிடி
துளசி ------------------------------------ மூன்று கைபிடி
செம்பருத்தி இலை---------------------- மூன்று கைபிடி
[இது கிடைக்கவில்லை என்றாலும் no problem]
வெயிலில் நன்கு காய வைத்து அரைக்கவும்.
மைக்ரோ ஓவன் இருந்தால் அதில் இலைகளை 5-6 நிமி வைத்து எடுக்கலாம்.
இலைகள் மொருமொருவென்று இருந்தால்த் தான் நன்கு அரைபடும்.

1 கருத்து:

Unknown சொன்னது…

ரீத்தா என்பது என்ன?