ஞாயிறு, அக்டோபர் 31, 2010

சுலப சமையல்

வெளி நாட்டில் படிக்கும் நம்ம நாட்டு பிள்ளைகளுக்கு நான் கண்டு பிடித்த
சுலப சமையலின் தொடர்ச்சி -
இன்றைய ஸ்பெஷல் தக்காளி recipes
as usual oil base ஆரம்பத்திலேயே இஞ்சியை துருவிப் போடவும்.
அதாவது கேரட் துருவியில் தோல் எடுத்த இஞ்சியை துருவிப் போடவும். இதற்கு கடுகு, நிறைய வெங்காயம், நறுக்கிய மிளகாய், துருவிய இஞ்சி,நறுக்கிய பூண்டு போட்டு நன்கு வதக்கவும்.
நிறைய தக்காளி பேஸ்டை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
கொத்துமல்லித் தூள் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
தேங்காயைக் கரைத்தும் ஊற்றலாம். _______________________________________________________________________________________________alternative - இதில் முட்டையை ஊற்றலாம்.
குழம்பு நன்கு கொதித்து இறக்குவதற்கு முன் நிதானமாக முட்டையை உடைத்து ஊற்றவும்.
அதாவது பாத்திரத்திற்கு மேல் முட்டையை பிடித்துக் கொண்டு ஸ்பூனால் நடுவில் உடைத்து கையில் குழம்பு தெறிக்காமல் ஊற்றவும்.
கரண்டி போடாமல் 2 நிமி விடவும்.
முழுமுட்டை வெந்து மிதக்கும். _____________________________________________________________________________________________________alternative முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி உப்பு கொஞ்சம் போட்டு நன்கு கலக்கி குழம்பில் ஊற்றி கரண்டியால் மெதுவாக கிளறி விட்டால் குழம்பு முழுவதும் சின்னச்சின்ன துண்டுகளாக மிதக்கும்.
வெந்தமுட்டையைகட்பண்ணியும்போடலாம்
alternative - இந்த குழம்பில் நேற்று சொன்ன vegetable balls எண்ணையில் பொறித்து [போண்டா] போடலாம்.
முழு போண்டாவாகப் போடலாம். or உதிர்த்துப் போடலாம்.
முழு போண்டா போடுவதானால் சின்ன போண்டாவாக இருக்க வேண்டும். __________________________________________________________________________________________________-alternative - சிக்கன் துண்டுகளை உப்பு, மிளக்காயத்துள் போட்டு 10 நிமி ஊறவிட்டு இந்த குழம்பில் போடலாம்.
ஆனால் குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போதே போட்டால்தான் சிக்கன் வேகும்.
அல்லதுசிக்கனைப்பொறித்துப்போடலாம்.
___________________________________________________________________________________________________வெங்காயத்தை கேரட் துருவியில் {கையை சீவாமல் }துருவவும்.
வெங்காயத்தை அரைத்த effect வரும்.
மூன்று பெரிய வெங்காயமாகத் துருவவும். [வெங்காயத்திற்கு தோலுரிக்க வேண்டும். தெரியும் தானே!!!!!!! ]
நான்கு தக்காளியை பொடிப் பொடியாக நறுக்கவும். அல்லது துருவவும்.
6 ts எண்ணையில் கடுகு, சீரகம், துருவிய இஞ்சி, துருவிய வெங்காயம், துருவிய தக்காளி போட்டு வதக்கி 3 ts மிளகாய்த் தூள், உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் சுண்டி கெட்டியாக வரும் போது இறக்கவும்.
தக்காளிச் சட்னி. ________________________________________________________________________________________________________இதை இதை baseyaaka வைத்து சில recipes செய்யலாம்.
எண்ணையில் கடுகு, நறுக்கிய வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றிக் கரைத்து ஊற்றி கொத்துமல்லித் தூள் போட்டால் முதலில் சொன்ன தக்காளிகுழம்பு, முட்டைக் குழம்பு செய்யலாம். _________________________________________________________________________________________________இந்த சட்னியை தொட்டு சாப்பிடலாம்.
சப்பாத்தி, பிரட் மேலே லேசாக பட்டர் தடவி அதன் மேல் இதைத் தடவவும். இன்னொரு பட்டர் தடவிய சப்பாத்தியை வைத்து சுருட்டினால் சப்பாத்தி ரோல்.
சப்பாத்தியில் இந்த சட்னி மேல் துருவிய cheese போடலாம். ______________________________________________________________________________________________________எண்ணையில்நறுக்கியவெங்காயம்,கடுகு,சீரகம்,மிளகாய்தாளித்து இரண்டு தக்காளிவெட்டிப் போட்டு இந்த சட்னி கொஞ்சம் போட்டு மஞ்சள் தூள், உப்பு போட்டு வேண்டிய அளவு தண்ணீர்ஊற்றி அரிசி போட்டால் தக்காளி சாதம். ___________________________________________________________________________________________________எண்ணையில் கடுகு, கடலைப் பருப்பு, நறுக்கிய வெங்காயம், அதைவிட கொஞ்சம் அதிகமாக நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி மிளகாத் தூள், உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விட்டு கெட்டி ஆனதும் இறக்கவும். சப்பாத்தி side dish . ________________________________________________________________________________________________________
வெங்காயத்தை தக்காளியை நீளமாக நறுக்கவும்.
எண்ணையில் கடுகு, மிளகாய் போட்டு வதக்கி வெங்காயம், தக்காளி வதக்கி மிளகாய்த் தூள் போட்டு வதக்கி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வேக விட்டு இதில் முட்டையை ஊற்றி முழு முட்டையை மிதக்க விடவும்.
வெந்த முட்டையை துண்டுகளாக்கியும் போடலாம்.
முட்டைக்கு பதில் பட்டாணி போடலாம். ____________________________________________________________________
யாரவது இதைப் படித்து செய்து பார்த்தால் எனக்கு தெரியப் படுத்துங்கள்.
நான் சந்தோசப் படுவேன்.

கருத்துகள் இல்லை: