ஞாயிறு, அக்டோபர் 17, 2010

இதுவே வாழ்க்கை

4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது.
6-அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி.
10-தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.மிட்டாய் தின்னதுக்காக என்னைஅடிச்சுட்டார்
12-நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு
14-அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பதுஎடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு
16-என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு.
18-எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்.
20-அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?
25-எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.இவரெல்லாம் ஒரு மனுஷனா?
30-என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?
40-என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்.
45-எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு.
50-ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.அவர் கிரேட்.
55-ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்சஆளே இல்லை.
60-எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது.
(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

கருத்துகள் இல்லை: