வெள்ளி, அக்டோபர் 29, 2010

ரிப்பன் பகோடா

தேவையான பொருட்கள்-
கடலை மாவு -------------------1 கப்
அரிசி மாவு ----------------------1 கப்
நெய் அல்லது வனஸ்பதி ------1 tbls
மிளகாய்த் தூள் ------------------1 அல்லது 2 tbls
உப்பு-------------------------------தேவையான அளவு
எண்ணை -------------------------பொரிப்பதற்குத் தேவையான அளவு
செய்முறை-
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசிமாவு ,உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
அதில் நெய் or வனஸ்பதி போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணையை ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
சூடான எண்ணை 2 tbls அளவு கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கலக்கவும்.
மாவில் மிளகாய்ப் பொடி போட்டு கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் ஊற்றிப்
பிசையவும்.
எல்லாம் ஒன்று சேர்ந்து உருண்டை பிடிக்க வந்தால் அதுதான் பதம்.
ரிப்பன் பகோடா அச்சை முறுக்கு குழாயில் போடவும்.
மாவை அது கொள்ளும் அளவு போட்டு சூடான எண்ணையில் பிழியவும்.
முதலில் சூடான எண்ணையில் பிழிந்து விட்டு அடுப்பை சிறிது குறைக்கவும்.
எண்ணை மிகவும் சூடாக இருந்தால் மாவு உள்ளே வேகாது.

கருத்துகள் இல்லை: