சனி, அக்டோபர் 30, 2010

ரசம்

ரசப்பொடி1 -தனியா, மிளகாய் 200 g
துவரம் பருப்பு, மிளகு 100g
கடலைப்பருப்பு,மிளகு 50 g
காய்ந்த கருவேப்பிலை 2 கப்
வறுக்கலாம். or வெயிலில் காயவைக்கலாம்.
____________________________________________________________________________________ ரசப்பொடி2 -தனியா ஒரு பங்கு,
துவரம் பருப்பு முக்கால் பங்கு,
மிளகு, சீரகம் இரண்டு பங்கு,
மிளகாய் கொஞ்சம்
___________________________________________________________________________________
மைசூர் ரசம்- வெந்த துவரம் பருப்பு 1/ 4 கப் குழைய வெந்திருக்கணும். கொஞ்சம் எண்ணெயில்கருகாமல்
மிளகு ஒரு ts
தனியா 3 ts
துவரம் பருப்பு 3 ts
மிளகாய் 6
தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
புளி கரைக்கவும்.
அரைத்த விழுது, புளிக்கரைச்சல், நறுக்கிய 2 தக்காளி, உப்பு போட்டுநல்லா கொதிக்க விடவும்.
பருப்பில் தண்ணீர் கலந்து அதில் ஊற்றவும்.
பொங்கி நுரைத்து வரும் போதுஇறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் தாளித்து ஊற்றவும்.
______________________________________________________________________________ மற்றொரு வகை- கடலைப் பருப்பு 1 ts
தனியா 2ts
மிளகு கால் ts
மிளகாய்2 எண்ணெயில் வறுத்து
சீரகம் 1/4 ts சேர்த்து பொடிக்கவும்.
குழைய வெந்த பருப்பு 1/4 கப்.
இரண்டு தக்காளியை பொடியாக நறுக்கி கால் கப் நீரில் நன்றாக கொதிக்க விடவும்.
ஒன்றரைக் கப் நீரில் நெல்லிக்காய் அளவு புளியைக் கரைத்து வடிகட்டி தக்காளியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
உப்பு போடவும்.
கொதித்ததும் பெருங்காயம் போட்டு,ரசப் பொடியும் சேர்த்து கொதிக்கும் போது தண்ணீர் சேர்த்த பருப்பை சேர்க்கவும்.
கொதிக்கும் போது கொஞ்சம் வெல்லம்,. இரண்டு ts தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
நுரைத்து பொங்கி வரும் போது இறக்கவும்.
நெய்யில் கடுகு, கருவேப்பிலை தாளித்து போடவும்.
______________________________________________________________________________________ தக்காளி ரசம்-3 தக்காளிக்கு 100 துவரம் பருப்பு போதும்.
குழைய வேக விடவும்.
கொதிக்கும் நீரில் பழங்களைப் போட்டு கொஞ்ச நேரம் மூடிவைத்து தோலுரிக்கவும். நல்லா மசிக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முதல் ரசப்பொடி 1ts போட்டு, உப்பு, பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும்.
பருப்பை சேர்க்கவும்.
கொதித்துப் பொங்கி வரும் போது இறக்கி,நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளித்து விடவும்.
______________________________________________________________________________________
மற்றொரு முறை- புளிக்கரைசல், உப்பு, 4 ts ரசப்பொடி, பெருங்காயம், 2 நறுக்கிய தக்காளி போட்டு நன்கு கொதிக்க விடவும். வெந்த பருப்பை நீரில் கரைத்து ஊற்றவும். மிதமான தீயில் வைத்து பாத்திரத்தை மூடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கி நெய்யில் கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய் 2
கருவேப்பிலை தாளிக்கவும்.
______________________________________________________________________________________
மிளகு ரசம்-கரகரப்பாய்ப் பொடித்த மிளகு 3 ts,
4 மிளகாய்,
சீரகம் 1ts
கருவேப்பிலை, கடுகு
நெய்யில் கடுகு, சீரகம், கருவேப்பிலை, மிளகாய், பொடித்த மிளகு தீயாமல் ஒன்றுஒன்றகப் போட்டு வதக்கி, புளிக்கரைச்சல் ஊற்றி, உப்புப் போட்டு கொதிக்க விடவும். ரசம் வற்றி வரும் போது தண்ணீர்
ஊற்றவும். பொங்கி வரும் போது இறக்கவும். option தக்காளி.
______________________________________________________________________________________
மிளகு ரசம்- 2 மிளகாய்,
மிளகு, துவரம் பருப்பு 2 2 ts ,
தனியா 1ts
சீரகம் 1/2 ts பச்சையாக அரைக்கவும்.
எலும்பிச்சை அளவு புளியை 2 டம்ளர் நீரில் கரைத்து, அதில் 6 பல் பூண்டைத் தட்டிப் போட்டு உப்பு ,பெருங்காயம் போட்டு கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். கடுகு, சீரகம், கருவேப்பிலை தாளிக்கவும்.

கருத்துகள் இல்லை: