செவ்வாய், அக்டோபர் 26, 2010

கோளறு பதிகம்

மூன்றாவது பாடல்
உருவளர் பவள மேனி
ஒளிநீ றணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள்
முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்து அதனால்
திருமலர் கலைய தூர்தி
சமயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்ல நல்ல
அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.

பொருள்-
அழகு மிகுந்த பவளம் போன்ற சிவந்த திருமேனியில் திருவெண்ணீற்றை
அணிந்து மணங் கமழும் கொன்றை மாலையையும் பிறையினையும்
முடியில் சூடி, வெள்விடை மேல் உமையம்மையாருடன் அடியேனது
உள்ளத்தில் எழுந்தருளிய காரணத்தால் பொன்மகளும், நாமகளும்,
கொற்றவையும், பூமிதேவியும், திசைகாப்பாளருமாகிய பல தெய்வங்களும்
அடியவருக்கு நல்லனவே செய்யும்.

1 கருத்து:

praveen சொன்னது…

great going mummy .keep up the good work .but i have only one concern - will my big brother be able to read the poem you have given here?