திங்கள், டிசம்பர் 01, 2008

பயனுள்ளவை

பூண்டு ----உணவில் பூண்டை சேர்த்துகொண்டால் பாக்டீரியா,வைரஸ் மூலமாக வரும் உடல் கோளாறுகள் வராது. இருமல் முதல் kolastral வரை வராமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் உள்ள அல்லிசின் என்ற ரசாயன பொருள்தான், இதன் தனிப்பட்ட மணத்திற்கு காரணம்
தேங்காய் எண்ணையில் சில சொட்டு பூண்டு சாறு அல்லது தட்டிய பூண்டு பல்
இரேண்டோ சேர்த்து சூடாக்கி ,காதில் ஊற்றினால் காது குடைசல், வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம். முக்கியமாக கவனிக்க வேண்டியது சூடான எண்ணையை காதில் ஊற்றக்கூடாது.
வாய்வு தொல்லைகளுக்கு,பூண்டு நல்ல மருந்து.
அசைவ உணவுகள்,குருமா போன்ற மசாலா சேர்த்து செய்யும் பதார்த்தங்களில்,பூண்டு நல்ல வாசனை தருவதோடு, செரிக்கவும் உதவுகிறது.
பூண்டின் மகத்துவம் பற்றி இங்கிலாந்து போன்ற நாடுகளும் தெரிந்து வைத்துள்ளன. பூண்டு தொடர்பான மருந்துகள் அதிகம் விற்பனை ஆகின்றன. மேலை நாட்டினர் இதனை ஆராய்ந்து, வியக்கின்றனர்.
ஆனால், நம் முன்னோர், "உணவே மருந்து " எனும் உண்மையை உணர்ந்து நாள்தோறும் உணவில் இதனை சேரும்படி ந்ம் சமையலை, பல நூறாண்டுகளுக்கு முன்பே அமைத்துள்ளனர். என்னே ந்ம் மூதாதையரின் அறிவுகூர்மை!

கருத்துகள் இல்லை: