உப்பு மூட்டை தூக்கப்பா என்று என் மகன் கெஞ்சிய போதெல்லாம்
"ஊர்ப்பட்ட வேலை இருக்கப்பா" என்று சொல்லி ஓடினேன்....!
உள்ளத்தில் பொங்கிடும் அன்பை ஒரு துளியும் சிந்தாமல் ஓடினேன்.
மணிக்கொரு கூட்டம், மணிக்கணக்கில் பேச்சு, பங்குச்சந்தை நிலவரம்,
விற்பனை உயர்வு, இத்தனையும் எதற்கு? பொருள் தேட எனக்கு...!
இன்று என் மகன் ............................................................................................?
வளர்ந்து சிறகுகள் முளைத்துப் பறந்து விட்டான்.
ஒன்றை மட்டும் உணர்கிறேன்: மனது கனக்கிறது.
இன்று அந்த சின்ன மகனை ஒரு முறை உப்புமூட்டை தூக்க
இந்த உலகத்தையே விலை பேசத் தயாராக இருக்கிறேன் ...................!
ஆனால் .........................................................?
1 கருத்து:
excellent.touches heart;it is the
happening in somany others life.
gopal
கருத்துரையிடுக