திங்கள், டிசம்பர் 01, 2008

பயனுள்ளவை

வினிகர்-இது ஊறுகாயில் பயன்படுத்த படுகிறது என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால் வினிகரை பலவிதங்களிலும் பயன்படுத்தலாம்.
கைகளில் வாழைப்பூ கரையை போக்க,வினிகர் கலந்த நீரில் கை கழுவ வேண்டும்.
குளியல் அறை சுவர், வாஷ்பேசின் குழாய் ஆகியவற்றில் உப்புநீர் கரை படிந்திருந்தால்,வினிகர் உடன் சிறிது உப்பு கலந்து தேய்த்தால் பளிச்சென்று ஆகிவிடும்.
ஆடைகளில் வியர்வை வாடை, வியர்வை கறை இருந்தால், அவ்விடங்களில் சிறிது வினிகரை தடவி,பிறகு நனைத்து துவைத்தால் வாடையும், கறையும் போய்விடும்.
குளிக்கும் போது வெந்நீரில் சிறிது வினிகர் கலந்து தலைக்கு குளித்தால் முடி மிருதுவாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.
சமையல் பாத்திரங்களில் வாடை இருந்தால் அதில் வினிகர் கலந்த நீரை ஊற்றி கொதிக்க வைத்தால் வாடை போய்விடும்.
கோதுமை மாவுடன் சிறிது வினிகர் கலந்து கொதிக்க வைத்து ஆறியதும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி வர முகம் பொலிவு பெறும்.
வெங்காயத்தில் சிறிது வினிகர் சேர்த்து சாப்பிட்டால் வியரிக்கொருவியர்க்குரு,வேனல் கட்டி வராது.

கருத்துகள் இல்லை: