வெள்ளி, டிசம்பர் 05, 2008

மழை

ஆண்டாளின் திருப்பாவையில் உள்ள நாலாவது பாடல் இது. கண்ணனையே மழை தெய்வமாக வைத்துப் பாடப் பெற்ற பாடல். "ஆழி மலைக் கண்ணா" எனத் துவங்கும் பாடலைப் பாடினால் மழை வரும்.
இது போல் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்புன்கூர் பாசுரமும் அமைந்துள்ளது. இதைப் பாடினாலும் மழை வரும் என்பது ஐதீகம்.
வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கோள் கமற் றெங்களை என்ன
ஒளிகொள் வெண்முகிலாய்ப் பரந்தெங்கும்
பெய்யு மாமழைப் பன்னிரு வேலி கொண்டருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன்
செழும் பொழில் திருப்புன் கூருளானே.
இப்பாசுரத்தை பக்தியோடும், நம்பிக்கையோடும் பாராயணம் பண்ண வேண்டும்.

கருத்துகள் இல்லை: