ஞாயிறு, ஜனவரி 02, 2011

ஒரு CARTOON

தினமணி நாளிதழில் கலைஞர் அவர்களை பற்றி ஒரு கார்டூன் பார்த்தேன் ? மிகவும் சுவாரசியமாகவும், அர்த்தம்முள்ளதாகவும் இருந்தது; உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தேன்; இதோ உங்கள் பார்வைக்கு_______
பதவி மோகம்___
வயது ஒன்றும் அதிகம் ஆகவில்லையே?????????? ஜஸ்ட்எண்பத்து ஐந்துதானே!!.இப்போதுதான் 'இளைஞன்' படத்திற்கு வசனம் எழுதுகிறார்.ஒருவேளை இப்படி இருக்குமோ? தன்னைப் போல் நல்லாட்சி தரக்கூடிய, வலுவான எதிர்க்கட்சிகளின் குடைசல்களைத் சமாளிக்கக்கூடிய தகுதியானவர் ஒருவரும் இல்லை என்ற நினைப்போ?
ஆடம்பர விழாக்கள்_
விழா என்றாலே ஆடம்பரம்தான்; கலைஞர் தொலைக்காட்சியில் வரும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியில் வரும் அரங்க அமைப்பும், அதில் ஆடுபவரின் ஒப்பனைகளும், ஆடை அலங்காரமும் பிராமாண்டம்.
சின்னத்திரையே ஜாலம் காட்டினால் வண்ணத்திரை மகா பிரமாண்டம் காட்டாதா? இவருக்கு விழா எடுப்பவர்கள் சினிமாத்துறையை சேர்ந்தவர்கள்தானே. ஆடம்பரத்திற்குப் பஞ்சமா;
இந்த விழாக்கள் தரும் விளம்பரத்தில் மயங்காத அரசியல்வாதிகளும் உண்டோ? ஆனாலும் முதுகு வலியுடன் பல மணி நேரங்கள் நாற்காலியிலேயே அமர்ந்து இருப்பது பெரிய சாதனைதான்.
காங்கிரஸ் கூட்டணி_
இது அம்மா கையில் இருக்கிறது. நம்ம தென்னிந்திய அம்மா இல்லைங்கோ; வடஇந்திய அம்மா கையில் இருக்குங்கோ. ஆனால் நம்ம சாணக்கியர் இதற்குள் அரசியல் சதுரங்கத்தில் பல காய்களை நகர்த்தி இருப்பார். முடிவு தெரிய ரொம்ப நாள் இல்லை. எதிர்பாராத மாற்றங்களும் வரலாம். WAIT AND SEE .பலன்தான் இல்லை.
ஈழத் தமிழர் விடுதலை_
இந்தநூற்றாண்டில் அதிக பேசப்பட்ட வார்த்தை. இதைப் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம்; எப்படி வேண்டுமானாலும் பேசலாம்; சுயலாபத்திற்கும், விளம்பரத்திற்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். குறிப்பாக அரசியல் தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ளவும், மக்கள் தங்களை மறந்து விடக்கூடாது என்பதற்காவும் இந்த மந்திரச்சொல்லை சில காலமாகவே பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதில் தங்களை அரசியல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்ள நினைப்பவர்களும் அடக்கம். பலன்தான் இல்லை. அவங்க கஷ்டம் அவங்களோடுதான் இருக்கு. சரி இவரும் பேசிட்டு இருக்கட்டுமே.
வாரிசு அரசியல்-______
அட இது நம்ம நாட்டுக்குப் புதுசா? இது ரோஜா மாமா காலத்தில் துவங்கி அவரின் கொள்ளுப் பேரன் காலம் வரை வந்தாச்சு!!!!!!!!!!
அவரின் வழியில்
திரு. சிதம்பரம்------------- திரு. கார்த்திக்
திரு. முரசொலி மாறன் ------------- திரு. தயாநிதி மாறன்
திரு.E.V.K. சம்பத்----------- திரு. E.V.K.S இளங்கோவன்
திரு. ராஜ சேகர ரெட்டி-------- திரு. ஜெகன் மோகன் ரெட்டி
திருமதி. சோனியா காந்தி-------- திரு. ராகுல் காந்தி
திரு. சஞ்சீவ் காந்தி -------------- திருமதி. மேனகா காந்தி
அம்மா!!!!!!!!!! சொல்லி முடியாது
இதில் பொழைக்கத் தெரியாதவர்கள் பட்டியலும் இருக்கு.அதில் முதல்
நம்ம தேசத் தந்தை காந்தி அவர்கள் நான்கு மகன்கள் இருந்தும் NO USE
திரு. காமராஜ் அவர்கள்
திரு. கக்கன் அவர்கள்
திரு. மொரார்ஜி தேசாய் அவர்கள்
திரு. சாஸ்திரி அவர்கள்
திரு. முத்துராமலிங்கத்தேவர் அவர்கள்
இதுவும் நீண்டு கொண்டே போகும்; so leave it.
எந்த ஒரு குடும்பத் தொழிலுக்கும் ஒரு வாரிசு இருப்பது உலக மரபு. கலைஞருக்குத் தெரிந்த ஒரே தொழில் அரசியல்;
அதனால் உலக நடைமுறைப்படி வாரிசு அரசியல் நடத்துகிறார்.
என்ன !!!!!!11வாரிசுகள் கொஞ்சம் அதிகம்; அதனால் பிரச்சனைகளும் அதிகம்.
so உலக அரங்கில் அவருக்குத் தலைவலி;
மக்களுக்கு வீட்டு அரங்கில் அசைபோட ஒரு வழி.
மீடியாக்களுக்கும், நாளிதழ்களுக்கும் கொண்டாட்டம்;
எனக்கு எழுத ஒரு topic கிடைத்தது. ENJOY..............

1 கருத்து:

ηίαפּάʞиίнτ ™ சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.