புதன், ஜனவரி 12, 2011

சுவையான குழம்பு

தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம் - கால் கிலோ,
புளி - எலுமிச்சை அளவு,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்,
தனியா தூள் - 2 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள், -2 டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்.
இஞ்சி பூண்டு விழுது-- 2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
கசகசா, --ஒரு டேபிள்ஸ்பூன்,
சோம்பு ----ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய் - ஒரு கப்,
மிளகாய் வற்றல் - 2.
இவை அனைத்தையும் எண்ணெயில் வறுத்து விழுதாக அரைக்கவும்..
அல்லது பொடிக்கவும்.
செய்முறை:
வாணலியில் எண்ணெய் விட்டு, சாம்பார் வெங்காயத்தை வதக்கவும்.
வதக்கிய பின் பொடி அல்லது அரைத்த மசாலா போட்டு வதக்கவும்.
பிறகு, இஞ்சி - பூண்டு விழுது சேர்க்கவும்.
இப்போது புளியைக் கரைத்து விடவும்.
ஒரு கொதி வந்ததும்,மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்க்கவும்.
உப்புப் போடவும்.
நன்றாகக் கொதி வரட்டும்.
எண்ணை மேலே வருமளவு அடுப்பில் இருக்கட்டும்.
குழம்பு சிறிது கெட்டியானவுடன் அடுப்பை அணைக்கவும்.
சிறிதளவு சாம்பார் வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி,
எண்ணெயில் சிவக்க வறுத்து அதில் தூவவும்.

கருத்துகள் இல்லை: