புதன், ஆகஸ்ட் 10, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

சைனஸ் - சளியின் இன்னொரு அவதாரம்.


கொஞ்சம் கவனிக்க வேண்டிய பிரச்சனையும் கூட.


அதிலும் ஆயில் பாத் எடுக்கும் முன் யோசிக்க வேண்டிய matter . 


அதற்காக மாசக் கணக்காக தலைக்குக் குளிக்காமல் இருக்க முடியுமா?


அதற்காக ஒரு மூலிகை ஆயில்-


150 மிலி நல்லெண்ணையில் 


2  ts   சீரகம் 


2  ts  மிளகு 


4  ts நெல்லிக்காய் பொடி  


ஒரு கைப்பிடி கற்பூரவள்ளி இலை


ஒரு கைப்பிடி துளசி 


சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி வைக்கவும். 


எண்ணையை வெதுவெதுப்பாக  சூடு செய்து 


தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும்.


15 ---- 20 நி மட்டுமே ஊற வேண்டும்.  




பொதுவாக தலைக்கு எண்ணை தேய்க்கும் போது


காதுகளுக்குப் பின்னாலும் 


உள்ளங்காலிலும் சூடு பறக்க தேய்க்க வேண்டும்.


உடல் சூடு கால் வழியாகவும், 


தலை சூடு காது வழியாகவும் வெளியேறும்.




சைனஸ், சளித்தொல்லை உள்ளவர்கள் 


ஆயில் பாத் எடுக்கும் முன் 


யூகலிப்டஸ் தைலம், விக்ஸ் இரெண்டையும் 


கலந்து , கழுத்தின் பின்பகுதி, 


நெற்றிப்பொட்டு  ,   முதுகுத் தண்டு 


ஆகிய இடங்களில் தடவி , பின் 


உடல் பொறுக்கும் சூட்டில் 


வெந்நீரில் குளிக்க வேண்டும்.


பச்சை தண்ணீரில் குளிக்கக் கூடாது.


அன்று பகல் தூங்கக் கூடாது. 


பித்தம்  தரக்கூடிய உணவுகள் கூடாது. 


பூசணி, கத்திரி, புடலை, கொள்ளு 


பரங்கிக்காய், சுரைக்காய், மாங்காய், 


கொத்தவரைக்காய், பாகற்காய், 


மொச்சை, கீரை, தேங்காய் 


இவைகளைத் தவிர்க்க வேண்டும்.     


  நான் இதை ஒரு பெண்கள் பத்திரிக்கையில் படித்தேன். 


இது எல்லோரும் அறிய வேண்டிய சங்கதி. 


இதை கூறிய ஹெர்பல் காஸ்மெடாலஜிஸ்ட்க்கு நன்றி.      

கருத்துகள் இல்லை: