இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித்
தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும்
பிண்டதானம், சிரார்த்தம் செய்தும்
இறைவனை வழிபட்டும்
அந்தணர்களுக்குத் தானமும்,
விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர்
ஆகியோருக்கு உணவும் அளித்தும்
அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.
சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும்,அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள்
ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும்
சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும்
சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர்.
தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம்.
ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்பர்.
தட்சணாயனதொடக்க மாதம் ஆடி என்பதால்பிதுர் காரியங்களுக்கு ஆடி மாதம் சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி
பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம்
என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
ஆடி அமாவாசைத் தினத்தில்
கடல், நதி, ஆறு, வாவி போன்ற தீர்த்தங்களில் நீராடினால்
பல வினைகள் அறும் என்றும்
பாவங்கள் நீங்கும் என்றும் கூறுவர்.
தீர்த்தங்களை இறைவனின் அருள் குறித்த நீராக நினைத்து
முன்னோர்களான பிதுர்களை எண்ணி
அவர்களின் பாவங்களை நோக்கி
அவர்களுக்கு முத்தி அளிக்கும் படி
இறைவனை வேண்டி தீர்த்தமாடுதல் வேண்டும்.
சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்க கூடிய நாளாகியஇறந்த தாய் தந்தையர் அவர்கள் பெயர்களை முதலில் சொல்லி
பின்பு தாத்தா பாட்டி தலைமுறை சொல்லி
எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால்
பிதிர்கள் திருப்தி அடைவார்கள்.
தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.
பகவான் விஸ்னுவின் தேகத்தில் இருந்து வெளிப்பட்டதும்
சகல பாபங்களையும் தீர்க்க வல்லதும் ஆகிய எள்ளும்,
தாகத்தை தீர்க்கும் நீரும், கொண்டு
தர்ப்பணம் செய்து பிதிரின் ஆசியையும்
குருவின் ஆசியையும் பெற வேண்டும்.
பின் குருவிற்கு தானம் வேட்டிசால்வை
அரிசி காய்கறி குரு தட்சனை வழங்கி ஆசிர்வாதம் பெறவேண்டும்.
வீட்டில் அமரர்கள் படத்தின் முன்பு
சைவமாக சமைத்து வாழை இலை உணவு படைத்து
கற்பூர ஆராதனை செய்து வணங்கி
உறவினருடன் கூடி மதியபோஷனம் உண்ணவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக