புதன், நவம்பர் 23, 2011

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

சோப்பு எல்லோரும் பயன்படுத்துகிறோம்.

அதில் இரசாயனப் பொருட்கள்    இருப்பது தெரிந்த விஷயம்

.இந்த கால கட்டத்தில் இதெல்லாம் யாரும்   பார்ப்பது இல்லை.

ஆனாலும், இன்னும் குளியல் பொடி பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள் ;  

மஞ்சள் சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்குகிறது.

அதனுடன் சில பொருட்களை சேர்த்து செய்யப்படும் குளியல் பொடி

சருமத்தை பாதுகாக்கிறது.





தேவையான பொருட்கள்- 

பாசிப்பயறு ------- 500  கிராம்

கடலைப் பருப்பு ---- 250  கிராம்

கஸ்தூரி மஞ்சள் ---- 150  கிராம்  

விராலி மஞ்சள் ------ 50  கிராம்

வெட்டி வேர்- ----------- 20  கிராம்

பூலான் கிழங்கு ----- 100  கிராம்

கார்போக அரிசி ------ 50  கிராம்

மூன்று நாட்கள் வெயிலில்   நன்கு காய வைக்க வேண்டும்.

மெஷினில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.


தினம் இரு முறை பயன் படுத்தினால் நாளடைவில் நிறம் கூடும்.

தினம் சோப்புக்குப் பதில் இந்த பொடியை பயன்படுத்தலாம்.






குழந்தைகளுக்கு - 

உடம்பில் தேங்காய் எண்ணை அல்லது

நல்லெண்ணெய் தேய்த்து , 15  நிமி கழித்து இந்த பொடியை


தேய்த்துக் குளிப்பாட்டவும்.






எண்ணைப் பசை சருமம் உள்ளவர்களுக்கு-

எலுமிச்சை சாறு அல்லது தேங்காய்த் தண்ணீர் முகத்தில் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.  .





உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு-   

தேங்காய்ப் பால் அல்லது ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும். 





முகத்தில் சுருக்கம் உள்ளவர்களுக்கு- 


முகத்தில் முட்டையின் வெள்ளை கருவைத் தடவி

சிறிது நேரம் கழித்து ,  இந்த பொடியை பயன்படுத்திக் கழுவவும்.





கருத்துகள் இல்லை: