வியாழன், நவம்பர் 03, 2011

முருகன் -அழகன்

தமிழர்கள் விசேஷமாக வழிபடும் கடவுள்,

 தமிழ்ப் பெண்ணை மணந்த மணமகன், 

அகத்திய முனிவருக்கு தமிழைக் கற்றுத் தந்த குரு என்று 

தமிழின் முதல் கடவுளாக முருகன் திகழ்கிறார்.

பண்டைய தமிழ் இலக்கியங்கள் முருகனைக் 
குறிஞ்சித் திணைக்குரிய தெய்வமாகப் போற்றினாலும் 
அப் பெருமான் உலகம் முழவதும் நிரம்பியிருக்கிறான்.  ,

முருகப் பெருமானை ஆராதிக்கும் மூன்று விரதங்கள் 
விரத நூல்களிலே சொல்லப்பட்டிருக்கின்றன. 
வார விரதம் ஒன்றும், (சுக்கிரவாரம் அல்லது வெள்ளிக்கிழமை விரதம்)  திதி விரதம் ஒன்றும் (கந்தசஷ்டி விரதம்)
நட்சத்திர விரதம் - (கார்த்திகை விரதம்)என
 அவை அமைகின்றன.

சுக்கிரவார விரதம்
 ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக் கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்கப்படும்.
உபவாசமிருத்தல் உத்தமம். 
அது இயலாதவர்கள் பால் பழமாவது பலகாரமாவது 
இரவு ஒரு நேரம் கொள்ளலாம். 
அதுவும் முடியாவதர்கள் பகல் ஒரு பொழுது போசனம் கொள்ளலாம்.
 மூன்று வருட காலம் அநுஷ்டித்த பின் 
விரத உத்யாபனம் செய்யலாம்.

கார்த்திகை விரதம்
கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் 
முருகப் பெருமானைக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் 
உபவாசம்உத்தமம்
இயலாதோர் இரவில் பால்பழம்பலகாரம் உண்ணலாம்.
அதுவுமியலாதோர் பகலொருபொழுது போசனம் செய்யலாம்.
 பன்னிரண்டு வருடங்கள் இவ்விரதமநுஷ்டித்த 
பின் உத்யாபனம் செய்யலாம். 
திருக்கார்த்திகை விரதத்துக்கு இஸ்தமன வியாபகம் முக்கியம். 
அதாவது மாலை ஐந்து மணிக்கு மேல் 
கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரத நாளாகும்.
 
.1.முருகனின் திருவுருவங்கள்:

1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.
 
2.  முருகன் அழித்த ஆறு பகைவர்கள்
ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.
 
3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் 
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. 
இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. 
(குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) 
அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் 
முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.
1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.
 
5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் 
நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது.
 சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.
 
6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். 
இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.
 
7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் 
அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் 
என்ற ஆறு ஆயுதங்களும், 
இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை,
 தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.
 
8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. 
அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். 
வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் 
கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.
 
9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:
 
1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,
13. குன்றக்குடி அடிகளார் ஆகியோர் ஆவார்கள்.
 
10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் 
சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு 
அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது.
 இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் 
வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன 
என்பது அதிசயமாகும்.
 
11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தளும் முருகப் பெருமான்
 முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், 
பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.
 
12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம்
 தினசரி அதிகாலையில் படிப்பவர்களது 
அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.
 
13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், 
கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.
 
14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். 
இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான்.
 சரவணப் பொய்கையில் உதித்தான்.
 ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். 
கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும் 
சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் 
கந்தன் என்றும் பெயர் கொண்டான்.
 
15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும்.
 இது காஞ்சீபுரத்தில் உள்ளது.
 
16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.
 
17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'
 நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.
 
18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று 
அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.
 
19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் 
ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.
 
20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும்,
 சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.
 
21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் 
காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.
 
22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் 
மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.
செய்யலாம். 
23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.
 
24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற
 பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் 
தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் 
இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.
 
25. முருகனின் கையில் உள்ள வேல் 
இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.
 
26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார்
 என்று பலர் பாடியுள்ளனர்.
 
27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் 
முருகனை மட்டுமே காண முடியும்.
 பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.
 
28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.
 
29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.
 
30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து 
ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.
 
31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், 
செந்நிற மேனியன், சேவற்கொடியோன், 
சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.
 
32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் 
முருகன் வழிபாடு உள்ளது.
 
33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச்
 சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.
 
34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு.
 விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.
 
35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் 
ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.
 
36. பொருள், வீரியம், புகழ், திரு, 
ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.
 
37. பல்லவ மன்னர்கள் முருகனைப் 
பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், 
பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் 
என்று செப்பேடுகள் கூறுகின்றன.
 
38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் 
சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே
 துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று 
முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் 
தணிகையாற்றுப் படை கூறுகின்றது.
 
39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன்
, இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, 
மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் 
முருகன் கோவில்கள் உள்ளன.
 
40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள்
 முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
 
41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.
 
42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத
 வேறு தெய்வம் வீரபத்திரர்.
 
43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார்.
 இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து
 18 கி.மீ. தூரத்தில் உள்ளது.
 தைப்பூசம் இங்கு விசேஷம்.
 
44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 
ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். 
முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். 
இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது.
 ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும்,
 மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில்
 இங்கே அருள் பாலிக்கிறார்.
 
45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில்
 பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் 
இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் 
வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.
 
46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட 
மலைமீது முருகன் கோவில் உள்ளது.
 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. 
இங்கு சிவன் கோவிலும் உண்டு. 
இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.
 
47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில்
 1957-ல் இழுக்கப்பட்டது.
 
48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் 
விருத்தா சலத்தில் உள்ளது. 
பெயர் கொளஞ்சியப்பர். 
அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம்
 என்று இத னைக் கூறுவார்கள்.
 
9. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.
 
50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.
 
51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.
 
52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை
 திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள  
நெடியமலை ஆகும்.
 
53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில்
 படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். 
இதனை உணர்த்தும் வகையில் 
திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள 
சின்னாளப்பட்டியில் 
நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.
 
54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.
 
55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.
 
56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.
 
57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.
 
58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.
 
59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் 
முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். 
இங்கு தெய்வானை கிரீடத்துடனும் 
வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள்.
 இப்படி வேறு எங்குமில்லை.
 
60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.





கருத்துகள் இல்லை: