செவ்வாய், ஜூலை 05, 2011

மனிதர்களை அறிவோம்

 தனி மனித முயற்சியால் ஒரு தலித் காலனியில், அரசு உதவியின்றி

இயங்கி வருகிறது ஒரு நூலகம்.

இதை பார்த்ததும் உங்களுக்கு என்ன  தோன்றுகிறது?  ஆச்சிரியம்?

படித்துப் பார்த்தால், மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பது சத்திய

வாக்கு என்பதை உணர முடிகிறது.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி, வடக்கு  இளையாற்றங்குடியை

சேர்ந்த விஜய் என்பவரின் கனவு நனவானதின் விளைவே இந்த நூலகம்.

காரைக்குடி பொது நூலகத்திற்குச் சென்றார்.

அங்கு அழகழகாய் அடுக்கி வைக்கப் பட்டுள்ள நூல்கள்,

அவற்றை ஆர்வமாய்ப் படித்துக்கொண்டு இருக்கும் வாசகர்கள்

இதை பார்த்ததும் ஏற்பட்ட பரவசம், ஏக்கமாய் மாறி

பின் அதுவே அவரின் கனவாய் ஆனது.

 ஒரு தலித் காலனியில் நூலகம் இருக்கக் கூடாதா?  என்கின்ற

இவரதின் கனவின் விஸ்வரூபமே இது.

இவர் வசதியனவரோ, அரசியல் செல்வாக்கோ உடையவரல்ல.  

தற்பொழுது திருப்பத்தூரில் உள்ள தனியார் கலைகல்லூரியில்

இளங்கலை வரலாறு பயின்றுவரும் ஒரு மாணவர்

இன்றைய காலகட்டத்தில் மாணவர் சமுதாயம் பல திசைகளில்

கவன சிதறலொடு இருக்கும் போது, இவர் மட்டும் ஆக்கப் பூர்வமாக

செயல்படுவதே மிகவும் பாராட்டுக்குறிய செயலாகும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இவர் நூலகம் அமைக்க நினைத்த

இடமோ  ஒரு    தலித் காலனி.

இதில் எவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருக்கும்?????????

 அவர் சொல்லில்,

"எங்கள் ஊருக்கென கட்டப்பட்ட பொது பயன்பாட்டுக்கான கட்டிடம்

பன்னிரெண்டு வருடங்களாக எந்தப் பயனும் இன்றி கேட்பாரற்று

இருந்தது நினைவுக்கு வந்தது.

அதை சீர்படுத்தி நாம் ஒரு நூலகமாக பராமரித்தால் என்ன என்று

தோன்றியது.

என் ஆசையை அப்பொழுது என் ஆசிரியராக இருந்த முருகேசன்

அவர்களிடம் கூற, அவர் எனக்கு ஊக்கம் அளித்தார்.

ஊர்ப்பெரியவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் என்று அனைவரிடமும்

அந்த நூலக கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வாங்கி,

2008 ல் இருந்து இதை நல்ல முறையில் பராமரித்து வருகிறேன்."

இவரது அயராத முயற்சியாலும், முருகேசன் ஆசிரியர் கொடுத்த

ஊக்கத்தாலும் 'தமிழ்க் கோவில்' என்ற பெயரால் செயல்படுகிறது

விளையாடும் பிள்ளைகள் போகிற போக்கில் உள்ளே வந்து புத்தகங்கள்,

நாளிதழ்களில் படம் பார்த்துச் செல்கிறார்களாம்.

அதுவே அங்கு பெரிய விசியம்தானாம்.

இங்குள்ளவர்கள் படிப்பறிவு இல்லாத கூலி வேலை செய்பவர்கள்;

அவர்கள் பெயரை எழுதி பழக இப்போது இங்கு வருகிறார்களாம்.

அந்த ஊரில்,  படித்த அரசு உழியர்கள் விஜயனின் தந்தை வீரன் அய்யாவும்,

 அவரது சித்தப்பா நகராஜனும்தானாம்.

காலேஜ் போகிற முதல் ஆள் விஜயனாம்.

இந்தியாவின் ஆன்மா ??????????

அந்த காலனியில்  300 இருக்கிறார்கள்.

மற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் வந்து படிக்கிறார்கள்.

[ போற்றத்தகுந்த மாற்றம்]

புத்தகங்கள்   தந்து உதவிய

இளையாற்றங்குடி ஜமீந்தார் திரு. ஆர்.சி. ராஜா,

டி. அழகாபுரி ,

ஆர்.எம். முத்தைய செட்டியார்

உட்பட உதவிய அனைவரையும் நன்றியுடன் கூறுகிறார்கள்.

ஆசிரியர் முருகேசன், 'இப்போதுள்ள சுமார் 2000 புத்தகங்கள் போதாது ;

இன்னும் வேண்டும்' என்கிறார்.

வேலை கிடைத்து வெளியூர் சென்று விட்டால் இந்த நூலகத்தை

பராமரிக்க முடியாது என்பதால், வெளியில் வேலைக்கு செல்ல மாட்டேன்

என்பதில் உறுதியாய் இருக்கிறார் விஜய்.

வாழ்க; வளர்க

அவரது லட்சியம் --------அந்த கிராமத்தை பெரியஅளவில்

வளரச்சி அடையச் செய்ய வேண்டும்;

அதற்கு கற்றறிந்த பெரியவர்களின் ஆலோசனைகள் வேண்டும் என்கிறார்.

கழிவறைகளே இல்லாத, அரசு கட்டி கொடுத்ததைக் கூட பயன்படுத்தாத

மக்களை முன்னேற்ற வேண்டும் என பாடுபடுகிறார்.

"இன்னும் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டும்;

சில நேரம் போட்டிகளுக்கு தயார் செய்யக்கூட புத்தகங்கள்

இல்லாமல் கஷ்டப்பட வேண்டிருக்கிறது;

என் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கு; பிள்ளைகளுக்கு சொல்லித்தரணும்;

வாசகர் வட்டம், பெரியவர்களின் சொற்பொழிவு என்று மாதம்

ஒரு முறை நடத்துவேன்;

அதைத் தொடரணும்;

முதலில் இந்த ஊரில் எல்லோரும் படிக்கணும்"

ஏக்கத்துடன் கூறுகிறார் விஜய்.

"கனவு காணுங்கள் " என்றார் திரு. அப்துல் கலாம் அவர்கள்.

விஜய் கனவு காண ஆரம்பித்து விட்டார்.

ஜெயிப்பது நிச்சியம்.

 இந்த நல்ல உள்ளத்திற்கு உதவ விரும்பும் உயர்ந்த உள்ளங்கள்

தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்;

முருகேசன்-  ----94886 22826

விஜய்------- 97871 44366

புத்தகங்கள் கொடுத்துக்கூட உதவலாம்.








கருத்துகள் இல்லை: