செவ்வாய், ஜூலை 05, 2011

பூரிகள்

பூரி, மிகவும் சுவையான, அடிக்கடி செய்யப்படாத ஒரு பதார்த்தம்.

பொதுவாக பூரி + உருளைக் கிழங்கு மசால்தான் மெனு.

பூரியும் கோதுமை மாவில் மட்டுமே செய்யப் படுகிறது.

ஒரு மாறுதலுக்காக, மாவுடன் வேறு சில பொருட்களைக் கலந்து

செய்யும் பூரி வகைகள் சிலவற்றை பார்க்கலாமா!!!!!!!


ஜீரக பூரி -

மைதா ----------------- 2 கப்

கெட்டித் தயிர் ----------- 1/2 கப்

ஜீரகம்-  --------------------- 1/2 tbs

எண்ணை அல் நெய் -- 1 tbs

உப்பு -- தேவைக்கு ஏற்ப

எண்ணை  ----- பொரிப்பதற்கு ஏற்ப

எல்லாவற்றையும் நன்கு கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து

கெட்டியாகப் பிசைந்து , ஒரு ஈரமான துணியில் சுற்றி வைக்கவும்.

15  நி பிறகு பூரியாகத் தேய்க்கவும்.

சூடான எண்ணையில்  பொரிக்கவும்.


கேரட் பூரி-

கோதுமை மாவு-------- 2கப்

துருவிய கேரட்-------   1/2கப்

இஞ்சி- பச்சை மிளகாய் விழுது ----1 ts

சீரகம்- -------------------1 ts

நெய் அல்   எண்ணை ----- 1 tbs

உப்பு------- தேவைக்கு ஏற்ப 

மல்லித் தழை-------  2 tbs

பொரிக்கத் தேவையான எண்ணை  ---

எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து பூரியாகப் பொரிக்கவும்.    


அப்பள பூரி- 

கோதுமை மாவு---- 2கப்

பொறித்தஅல்சுட்ட மசாலா அப்பளம் சிறுதுண்டுகளாக நொறுக்கியது-1 கப் 

உப்பு------- தேவைக்கு ஏற்ப 

எண்ணை --------- பொரிப்பதற்கு ஏற்ப

மாவை, உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன்   எண்ணை  சேர்த்து பிசைந்து வைக்கவும்.

சிறிய வட்டங்களாகத்  தேய்த்து, அதன் நடுவில் அப்பள துண்டுகளை

வைத்து மூடி, பூரிகளாகத் தேய்த்துப் பொரிக்கவும்.


ரவை பூரி-

கோதுமை மாவு------ 1 1/2 கப்

பாம்பே ரவை--------- 1/2 கப்

இஞ்சி- பச்சை மிளகாய் விழுது---1/2 ts

சீரகம் ----------1/2 ts

மல்லித் தழை ---1 ts

உப்பு ------ தேவைக்கு ஏற்ப

எண்ணை--------- பொரிப்பதற்கு ஏற்ப

எல்லாவற்றையும் நன்கு கலந்து பிசைந்து பூரிகளாகப் பொரிக்கவும்.


மசாலா பூரி-

 கோதுமை மாவு--------- 1கப்

கடலை மாவு-------------1 கப்

தயிர்-------------------------1/2 கப்

மிளகாய்த்தூள்-------------1 ts

மஞ்சள் தூள்----------------1 ts

சீரகம்--------------------------1 ts

சோம்பு-------------------------1/4 ts

ஓமம்----------------------------1/4 ts

கரம்மசாலாத்தூள்---------------1/4 ts

நெய் அல்  எண்ணை----------1 tbs

உப்பு------------------------     தேவைக்கேற்ப

பொரிக்க எண்ணை------ தேவையான அளவு

எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து பிசைந்து ,

ஒரு ஈரத்துணியில் கால் மணி நேரம் வைக்கவும்.

பின் பூரிகளாகப் பொரிக்கவும்.


நன்றி- லேடீஸ் ஸ்பெசல்

கருத்துகள் இல்லை: