புதன், ஆகஸ்ட் 11, 2010

சுடும் உண்மை


 பாபு ராஜேந்திரப் பிரசாத்


முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான

மதிப்புக்குரிய பாபு ராஜேந்திரப் பிரசாத்அவர்கள்,

தேர்தல் நேரத்தில்,ஓட்டு கேக்க பீகார் சென்றிருக்கிறார்.

ஒரு குடிசையில் இருந்த ஒரு ஏழைப் பெண்

ஒருவரிடம் ஓட்டுக் கேட்டு இருக்கிறார் .

அப்பெண்ணின் மகள் இருப்பதை அறிந்து

 அவளிடமும் ஓட்டு கேட்க விரும்பிஇருக்கிறார்.

அவரை காத்திருக்கச் சொல்லிவிட்டு

அப்பெண் வீட்டின் உள்ளே சென்று விட்டாள்.

 சில நிமிடங்கள் கழித்து மகள் வந்தாள்.

இருவரையும் ஒன்றாகப் பார்த்துப்

 பேச வேண்டும் என பாபு விரும்பினார்.

ஆனால் அது முடியவில்லை.

 சிந்தித்துப் பார்த்த பின்

அவருக்கு ஒரு உண்மை,

மனதை சுடும் ஒரு உண்மை புரிந்தது.


தாயுக்கும், மகளுக்கும் இருப்பது ஒரே புடவை.