வெள்ளி, பிப்ரவரி 19, 2010

தேர்வு ஜுரம்

தமிழ்நாட்டில் இந்த ஜுரம், விஷ ஜுரம் போல் வீட்டுக்கு வீடு பரவிக் கொண்டு இருக்கிறது. சிக்கன்குனியா,மட்டன்குனியா மாதிரி இது தேர்வு குனியா .இதற்கு பெற்றவர் மருந்து, அடுத்தவர் மருந்து, புத்தக மருந்து என பற்பல அறிவுரைகள் சொல்லப்படுகிறது.இதையெல்லாம் தாண்டி, கம்ப்யூட்டர் காலத்திற்கு தகுந்தபடி இந்த முறை T.Vயில் , தற்பொழுது அனைவராலும் அறியப்படும் சமையல் நிபுணர்
ஒருவர் தேர்வுக்கு முதல் நாள் சாப்பிட வேண்டிய உணவுகளில் துவங்கி தேர்வு அன்று சாப்பிடும் உணவு வரை கூறுகிறார்.ஆயிரம் நன்றிகள் அவருக்கு. இப்ப அதல்ல மேட்டர். இவைஎல்லாம் யாரைச் சென்று அடைகிறது? என்பதுதான்இன்றைய மேட்டர்.
CITY,TOWN மாணவர்களுக்கு, சந்தேகமே இல்லாமல், புத்தகங்களில், தொலைக்காட்சியில் வருவது எல்லாமே சுலபமாக, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அதை பின்பற்றினாலும், பின்பற்றாவிட்டாலும் அவர்கைளச் சென்று அடைந்து விடும். {ஆ....எவ்வளவு பெரிய வாக்கியம்; நன்றி என் தமிழ் ஆசிரியர்களுக்கு]
பெரிய பள்ளிகளில் அனுபவப்பட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் உண்டு. எல்லாவற்றுக்கும் மேல் சத்தான [?]பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளும் சத்தானவர்கள்தான். தேர்வு அன்றுதான் நல்ல உணவு சாப்பிடுவார்களா? தினம்தினம் சத்துத்தான்! ஊட்டம்தான்.
இதில் BEAUTY என்னன்னா தேர்வு உணவு ஸ்பெஷல் மெனு என்று சொல்லப்படுவதில் சீஸ்,ஜூஸ், சாலட்,பழங்கள்,முட்டை பிரட்,மீன், கோழி, காய்கறிகள் ....................என நீண்டு கொண்டே போகிறது.இந்த
நீண்ட பட்டியல் நீண்டு கொண்டே இந்தியாவின் உயிரைச் சென்று அடையுமா? என்பதுதான் இன்றைய மேட்டர். புரியலையா? இந்தியாவின் உயிர் எது? சத்தான உணவு சாப்பிடாமல் மஹா ஒல்லியான ஒரு கைத்தடி தாத்தா சொல்லியிருக்கிறார்? எனக்கே நான் என்ன சொல்லவந்தேன் என்று மறந்து விட்டது; மூக்கைச் சுற்றி தலையை தொட முயன்றால் .............?நேரா விசயத்திற்கு வரேன்.
கிராமங்களிலும் மாணவர்கள் படிக்கிறார்களே? அவர்களுக்கு இந்த
மெனுவை எப்படித் தெரியப்படுத்துவது?o.k.ஓரளவிற்கு புத்தகங்கள்,newspaper படிக்கிறார்கள்: T.V.யும் கலைஞர் அவர்களின் தயவால் எல்லா வீட்டிலும் இருக்கும்? அதனால் மெனுவை தெரிந்து கொள்ளுவதில் problem இல்லை. இதில் என்ன பிரச்சனை என்றால்

இவைஎல்லாம் என்னவென்று தெரியுமா?
விற்கும் பெரிய கடைகள் இருக்குதா ?
அம்மாக்களுக்குச் செய்யத் தெரியுமா?
மெய்னா வாங்க துட்டு இருக்கா துட்டு?
அதனால் இவர்களின் தேர்வு ஸ்பெஷல் மெனுவை,ஸ்பெஷலா யோசித்து கொடுக்க வேண்டும்.
அவர்களுக்குப் பழக்கமான உணவாக இருக்க வேண்டும்.
எளிதாக கிடைக்கக் கூடியதாகவும், அவர்களின் வாங்கும் சக்திக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
அம்மாக்களுக்குப் புரியும்படியும், செய்வதற்கு சுலபமாகவும் இருக்க வேண்டும்.
அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்ற உணவாக இருப்பது மிக, மிக முக்கியம். [நம் நாட்டில் பெரிய அளவில் மாணாக்கர்கள் பல மைல் தூரம் நடந்தும்,சைக்களிலும், பஸ்சிலும் வருகிறார்கள்]
இதற்கு தகுந்த மாதிரிசமையல் நிபுணர்கள் செய்முறைகளை உண்டாக்கலாம்.
மதிய உணவில் இதை அரசாங்கமே கொண்டு வரலாம்.
ஆசிரியர்கள் "நீ மாடு மேய்க்கத்தான் லாயக்கு; இங்கு வந்து என் உயிரை எடுக்கிறாய்" என்றெல்லாம் அன்பாக பேசாமல் இருப்பதே பெரிய உதவி. அவர்கள் வீட்டு வேலைகளை செய்யச் சொல்லாமல் இருப்பது மிகப் பெரிய உதவி.
தேர்வு எழுத பயிற்சி தரலாம்.
பெற்றவர்களை கலந்து பேசலாம்.
இதில் பெற்றவர்களின் பங்களிப்பும் இருக்கிறது.
தேர்விற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும் சூழ்நிலையை உண்டாக்கித் தர வேண்டும். [காட்டு வேலைக்குப் போ, வீட்டு வேலை செய், மாடு மேய்க்கப் போ என்று சொல்லாமல் இருந்தாலே போதும்]
படிப்பதற்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்.[சண்டைகளை மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்களும் நிம்மதியாக சண்டை போடலாம்.]
டி .வி. பொட்டி பார்ப்பதை குறைத்துக் கொள்ளலாம்.
"கழனி வேலை செய்யறவனுக்கு பாசானால் போதாதா? கடுதாசி படிக்கத் தெரிந்தால் போதும்" என்று பையனிடமும், "உன்னை இம்புட்டு நாள் இஸ்கூலுக்கு அனுப்பியதே அதிகம்: நாலெழுத்து படிச்சப் புட்டு கலெக்டரா ஆகப் போறே?சட்டி, பானை கழுவ இது போதும்"என்று பெண்ணிடமும்
இது போன்ற நம்பிக்கையைக் குறைக்கும் பேச்சைப் பேசாமல் இருப்பதே மிக,மிக, பெரிய உதவி.[ இதையெல்லாம் மீறி ஒருவர் படித்து,நல்ல நிலமையை அடைந்தால் அதை அனுபவிக்கப் போறவர்களும் பெத்தவங்கதான்.] .
ஆனா இப்ப நாட்டில் என்ன நடக்குதுன , இந்தியாவின் உசுருகள்தான் , உசுரை கையில் பிடுச்சுட்டு முதல் மார்க் எடுக்கிறார்கள். டவுன் மக்கா ,படிப்பில் கொஞ்சம் மக்காயிட்டு வர மாதிரி தெரியுது. ஆனா இவங்க பெத்தவங்க sorry டாடி, மம்மியைக் கேட்டால்" சிட்டி,டவுனில் டைவேர்சன் அதிகம்; ஊர்ப்புரம் [நான் புதிதாக தெரிந்து கொண்ட சொல்லை பயன்படுத்தி விட்டேன்] படிப்பைத் தவிர வேறு எந்த டைவேர்சனும் இல்லை"என்றுசொல்லுவார்கள் ; சொல்லுகிறார்கள்.{ அப்பாடி ! நான் தெரிஞ்சுகிட்ட ஒரு உண்மையையும் சொல்லிட்டேன். }
ஒ.கே. இப்ப நான் , டவுனுப்புரம், ஊர்ப்புரம் ,எல்லாப்புரத்து மாணவ, மாணவிகளுக்கு
தகுந்த மாதிரி எனக்குத் தெரிந்த, அனுபவத்தில் உணர்ந்த சில விஷியங்களை சொல்லப் போறேன்:
1. டெய்லி நடத்தற பாடங்களை அன்னனைக்கே படிக்கப் பாருங்கள். கொஞ்சம் சிரம்மம்தான்.அட்லீஸ்ட் ஒரு முறையாவது படித்துப் பாருங்கள்.
2 புரிந்து படிப்பது மிகவும் முக்கியம்.
3. ஆசிரியர் பாடம் நடத்தும் போது சொல்லும் குறிப்புக்களை குறித்து வையுங்கள்.[அதையும் தவறாமல் படிக்கணுங்கள்]
4. டெஸ்ட்+பள்ளித் தேர்வு எழுதறீங்களோ, இல்லையோ கொஸ்டீன் பேப்பரை வாங்கி வையுங்கள். பின்னால் உதவும்.[அட்டெம்ட் அடிக்கும் பின்னால் இல்லை]
5. பள்ளி +முந்திய ஐந்து வருடபொதுத் தேர்வு கொஸ்டீன் பேப்பரைப் ரிவைஸ் பண்ணுவது நல்ல பலனைத் தரும்.
6 . தேர்விற்கு அட்லீஸ்ட் மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு பொதுத் தேர்விற்கு என்று முழு கவனத்துடன் படிக்க வேண்டும்.
7. எண்ணை குறைவான உணவுகள் [முடிந்தவரை அசைவ உணவுகளைதவிர்ப்பது ]சாப்பிடுவது நல்லது.
8. அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.
9.இளநீர்,மோர் நிறைய குடிக்கலாம்.

10.இரவு நீண்ட நேரம் படிப்பதை விட அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது.
11. இரவு படுக்க போகும் முன்னும், காலையில் எழுந்தவுடன் பத்து நிமிடங்களாவது
கண்களை மூடிக் கொண்டு "'நான்தான் முதல் மார்க் எடுப்பேன்" என்று உங்களுக்குள்ளேயே சொல்லுங்கள். [ கனவு காணுங்கள் என்று ஒருவர் சொன்னது நினைவிற்கு வருதா? இதுதான் அவர் சொன்ன கனவு]
12 .காலையில் எழுந்ததும் பச்சை மரத்தைப் பார்ப்பது கண்களுக்கு மிகவும் நல்லது.
13. அதிகாலை காற்றை நன்கு சுவாசிப்பது நல்லது.
இடைவிடாமல் படிப்பதும் போர்தான். கொஞ்ச நேரம் வேறு ஏதாவுது செய்யலாம். உடம்புக்கும்,
மனசுக்கும் , கண்ணுக்கும் ஓய்வு கட்டாயம் தர வேண்டும்.

வழக்கம்போல் அம்மா, குடும்பத்தார் அவங்க சக்திக்குத் தகுந்த மாதிரி பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பது, குடம் தண்ணீர் ஊற்றுவது, மொட்டை அடிப்பது [யார் தலையை?] என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
மாணவமணிகள் அவங்க பங்குக்கு ஸ்பெஷல் வேண்டுதல்களை செய்துக்குங்கள்.
மேலே சொன்னதெல்லாம் ஒ.கே. நான் இப்போது ஒன்று சொல்லப் போறேன்; அதுதான் ........................
உறுதியான, நிச்சியமான,அனுபவத்தில் உணர்ந்த ஒரு உண்மை........!
இதில்தான் உங்களின் மகத்தான வெற்றியே இருக்கிறது!
பாசானாலே போதும்,

நல்ல மார்க் வேணும் ,
ரொம்ப நல்ல மார்க் வேணும்,
மாவட்டத்தில், மாநிலத்தில் முதலாவதாக வரணும்.
இதில் ஏதோ ஒன்றுதான் மாணாக்கர்களின் ஆசையாக இருக்கும்.

எனக்குத் தெரிந்து இதற்கு ஸ்பெஷலா ஒரு சாமி அல்லது தேவதை [அவங்கவங்க விருப்பபடி எப்படிவேணா சொல்லலாம்] இருப்பதாக கேள்விப் பட்டுயிருக்கிறேன். அது ..............................................?
"லக்"[LUCK]

"அதிர்ஷ்டம்"
இந்த சாமிக்கு,தேங்காய் உடைப்பீர்களோ, தண்ணி ஊற்றுவீர்களோ, மொட்டை அடிப்பீர்களோ தெரியாது: என்ன செய்வீர்களோ; இந்த சாமியின் அருள், இருந்தால் மட்டுமே மேலே சொன்னதுஎல்லாம் நடக்கும்.

ஆனா முயற்சி திருவினை ஆக்கும் என்றும் சொல்லி இருக்காங்கள்; [ஐயோ கொஸ்டீன் பேப்பர் போலவே இதுவும் கொழப்புது!] சரி எதோ ஒன்னு; பாஸ் ஆனால் போதும்.
ஆல் தி பெஸ்ட்.















கருத்துகள் இல்லை: