வெள்ளி, டிசம்பர் 11, 2009

கூந்தல் பராமரிப்பு

கீரைத் தைலம்.

தேவையான பொருட்கள்-

கரிசலாங்கண்ணிக் கீரை -3-4 கட்டு

அரிசி களைந்த நீர் -2- 3 டம்ளர்

கடுக்காய் -5 பொடிக்கவும்

தேங்காய் எண்ணை -1/4 கிலோ

நல்லெண்ணெய் -1/4 கிலோ

மருதாணி இலை - ஒரு கை பிடி நசுக்கி வைக்கவும்

செய்முறை-

கீரையை கழுவி, அரிசி களைந்த நீர் விட்டு

மிக்சி அல்லது கல்லுரலில் போட்டு இடித்து

இரண்டு டம்ளர் கெட்டிச் சாறு எடுக்கவும்.

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் சாறு, எண்ணைகள்,

கடுக்காய்ப் பொடி, இடித்த மருதாணி இலை போட்டு

கலக்கி அடுப்பில் வைக்கவும்.

கொதிக்க ஆரம்பித்ததும் தீயை குறைக்கவும்.

சிறு தணலில் சப்தம் அடங்கி,

அடியில் நெய் கசண்டு போல்

வரும் வரை வைத்திருக்கவும்.

பின் இறக்கி ஆறியதும்,

வெள்ளைத் துணியில் வடிகட்டவும்.

தினமும் இதை கூந்தலில் தடவி வர

கூந்தல் நன்கு வளரும்.

கருத்துகள் இல்லை: