சனி, ஜனவரி 19, 2013

வெந்தயத்தில் மருத்துவம்.


உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும்

பொருட்களில் ஒன்று வெந்தயம்

உணவுக்குருசியைக் கொடுப்பதோடு

அதில் உள்ள பல்வேறுமருத்துவக் குணங்கள்

 நம்மை நோய்களில்இருந்தும் பாதுகாக்கிறது.
எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு

சுத்தமான வெந்தயத்தை எடுத்து

200 மி.லிஅளவுதண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும்.
காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த 

பின்தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள்

பின்வெந்தயத் தண்ணீரை குடியுங்கள்

தேவைப்பட்டால்கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.
வாரம் ஒருமுறை இதுபோன்ற 

வெந்தயத் தண்ணீர்குடித்து வர

உடல் சூடுமலச்சிக்கல் என 

எந்தநோயும் உங்களை அண்டவே அண்டாது.
தவிரஉடலை வனப்புடன் வைப்பதில்

வெந்தயத்தின் பங்கு அலாதியானது.  

ஒருதேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்து

,வாணலியில் போட்டு வறுத்துஆற வைத்து, 

பின்மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள்

வெந்தயப்பொடியை ஆறிய பின் 

பாட்டிலில் போட்டுதேவைப்படும் போது 

தண்ணீரிலோ/மோரிலோகலந்து பயன்படுத்தலாம்.
வெந்தயத்துடன்சிறிதளவு பெருங்காயத்தையும்

போட்டு வறுத்து பொடி செய்த பின் 

ஒரு டம்ளர்வெந்நீரிலோ அல்லது 

மோரிலோ போட்டு பருகி வர

வயிற்றுக் கோளாறுகள்அஜீரணம் போன்றவைஏற்படாது.
மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் 

தினமும் இந்தபொடியை தண்ணீர்/மோரில் கலந்து குடித்தால்

சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும்

வெறும்வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.
வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடிசெய்து 

காபிபொடியுடன் கலந்து காபி போட்டு் குடித்தால்,

சர்க்கரை நோயாளிகளுக்கு 

சர்க்கரையின் அளவுகட்டுக்குள் இருக்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பட்சத்தில்

வெந்தயம் –பெருங்காயப் பொடியை 

ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை என 

முறை குடிக்க வயிற்றுப்போக்குகட்டுப்படுத்தப்படும்.


மூட்டுவலிக்கு வெந்தயத் தண்ணீர் 

மிகவும்அருமருந்தாகும்

சர்க்கரை நோய் இல்லாதவர்கள்

மூட்டு வலி ஏற்பட்டால்

வெந்தயப் பொடியை 

சிறியவெல்ல கட்டியுடன் கலந்து 

சிறு உருண்டையாக்கி

தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.

எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்

வெந்தயப்பொடியையும்பெருங்காயப் பொடியையும் 

சேர்க்க,சுவை கூடுவதுடன்

உடல் உபாதைகளையும்போக்கும்.

இட்லி அரிசியுடன் உளுந்துக்குப் பதில்

வெந்தயம்சேர்த்து அரைத்து 

சிறிது நேரம் ஊறிய பின்தோசையாக ஊற்றி சாப்பிட்டால்

சுவைகூடுவதுடன் உடலுக்கும் ஏற்றதாக அமையும்.
மோரில் ஊற வைத்த வெந்தயத்தை 

தினமும்காலையில் சாப்பிட்டால்

நீரிழிவுவயிற்றுப்புண்,வாய் துர்நாற்றம் 

உட்பட பல நோய்கள் குணமாகும்.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது.

கோடை காலத்தில் உடல் சூட்டில் இருந்து தப்பிக்க

வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்துசாப்பிடலாம்.


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் 

வெந்தயம்பயன்படுகிறது

பிரசவமான பெண்களுக்குகஞ்சியில் 

வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக்கொடுக்க பால் சுரக்கும்.

 இலைகளை தணலில் வதக்கி இளஞ்சூட்டுயில் 


பத்துப் போட வீக்கம் தீப்புண் குணமாகும்.
 

வெந்தயத்த நல்லா காயவச்சுப் பொடியாக்கி

காலை மாலை ஒரு தேக்கரண்டி தொடர்ந்துசாப்பிட்டு வர 

சர்க்கரை நோய் குறையும்.

 
வெந்தயம் 20 கிராம் + 350 கிராம்பச்சரிசியுடன் சேர்த்து 

சமைச்சு சாப்பிட இரத்தம்ஊறும்.

 
கஞ்சியில் வெந்தயத்தை  சேர்த்துக் 

காய்ச்சிக்க காய்ச்சி குடித்தால் தாய்ப்  பால் சுரக்கும்.

 
வெந்தயத்த ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊறவத்து 

நல்லா அரைச்சு தலைக்கு தேச்சு குளிக்க 

முடிஉதிராம நல்லா வளரும்.

 5 
கிராம் வெந்தயத்த நல்லா வேகவச்சுக் 

கடைந்து கொஞ்சம் தேன் சேர்த்துச் சாப்பிட தாய்ப்பால்பெருகும்.

வெந்தயம்கோதுமை ரெண்டும் சேர்த்து வறுத்து

கஞ்சியாக்கி சாப்பிட உடல் வெப்பம் நீங்கும்.

 
வெந்தயம்கடுகுபெருங்காயம்கறிமஞ்சள் 

சமமாக எடுத்து நெய் விட்டு வறுத்துப் பொடியாக்கி

சாப்பாட்டில் கலந்து சாப்பிட 

வயிற்றுவலி,பொருமல்ஈரல்  வீக்கம் குறையும்.

 
வெந்தயம்வாதுமைப் பருப்புகசகசாஉடைத்தகோதுமை

நெய்பால்சர்க்கரை சேர்த்து சாப்பிட

உடல் வன்மையாகவும்வலுவாகவும் இருக்கும்.

இடுப்பு வலி தீரும்.

வெந்தயத்தை  சீமை அத்திப்பழம் சேர்த்து அரைத்துக் 

கட்டிகளுக்குப் பத்துபோட்டால் 

கட்டி உடையும்.படைகளுக்கும் பூசலாம்.

 
வெந்தயத்தையும் அரைச்சுத் தீப்புண்கள் மேல 

பூச எரிச்சல் குறையும்.

கருத்துகள் இல்லை: