வியாழன், செப்டம்பர் 06, 2012

மனம் அழுகிறது

சிவகாசி இன்று சிவந்தகாசி ஆகிவிட்டது?

ஒவ்வொரு வருடமும் நிகழும் ஒரு நிகழ்வாகி விட்டது.

கடந்த ஐந்தாறு வருடங்களாக நடந்த விபத்துக்களை

பத்திரிக்கைகள், தொலைகாட்சி செய்திகள் என

எல்லா ஊடகங்களும் பட்டியல் இட்டு சொல்லுகிறார்கள்.

{ஒலிம்பிக்ஸ் பட்டியலில் கூட ஒன்றும் இல்லை}

2012ம்  ஆண்டு நிகழ்வும் பட்டியலில் சேர்ந்து விட்டது.

இதை அறியும் போது

நாம் என்ன செய்தோம்?   மனம் அழுகிறது 

நாம் என்ன செய்கிறோம்?

நாம் என்ன செய்யப் போகிறோம்?

[இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம்]

ஒரே பதில் தான்.

அந்த நிமிடம்

வாய் தன்னிச்சையாக " ஐயோ! கொடுமை" என்று சொல்லும்.

சில கண்கள் தன்னிச்சையாக கண்ணீர் விடும்.

நாலைந்து நாட்கள் சரியாக

சாப்பிட முடியாமல்,

தூங்க முடியாமல்,

மனசு பரிதவித்துப் போகும்.

பிறகு வேறு சுவாரஸ்யமான செய்தி

நமக்கு நம்ம குடும்ப பிரச்சனைகள்??????

இதற்கு என்ன தீர்வு?

ஓ !!!!!! மந்திரிமார்கள் வந்துவிடுவார்கள்!!!

சமயத்தில் முதல்வர் கூட வருவார்.

கூடவே பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி

பெரிய விளம்பரம்,

இழப்புப் பணம்!

O.K. DONE!!!!!!!!!!

அந்த பணம் எதை ஈடு செய்யும்?

ஒ.கே. ஈமக்கடனுக்கு ஆகும்.

அதன் பின் அந்த குடும்பம் என்னவாகும்?

சினிமாவாக இருந்தால் கோடீஸ்வரன் ஆவான்.

இது உண்மையான வாழ்க்கை ஆச்சே?

இந்த விபத்துக்கு காரணம் என்ன????

யாராவது பொறுப்பு எடுத்துக்கொள்வார்களா?

அதிகாரிகள் " பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டுள்ளது;

நாங்கள் தடை விதித்து இருந்தோம்; என்பார்கள்.

"ஆனால் அதை நாங்கள் மறுபடியும் போய் பார்க்கலை;

எங்களுக்கு வர வேண்டியது வந்து விட்டது "

இதுதான் அந்த மழுப்பல் பதிலின் அர்த்தம்.

தொழிற்சாலை முதலாளிகளுக்கு

அந்த தீபாவாளியிலே கோடி சம்பாதிக்க வேண்டும்.

பணம், பணம், பணம்............................

WHERE MONEY  GOVERNS ,THERE LIFE IS VALUELESS.

படிப்பு அறிவு இல்லாத மக்களா?

அறியாமையை பயன்படுத்திக்கொள்ளும்

அரசியல்வாதிகளா, அதிகாரிகளா?

யாரை கேட்க முடியும்?

கையிலாகாமல் இதைப் பார்த்து

இதுபோல் எழுதிக்கொண்டும், பேசிக்கொண்டும்

இருக்கும் என்னைப் போன்ற சாமானியர்களால்

என்ன செய்ய முடியும்?

இதற்கு என்னதான் தீர்வு?????????

நம் நாட்டு

சட்டங்கள் மாற்றப்பட வேண்டுமா?

அரசியல் அமைப்பே மாற வேண்டுமா?

மனித மனங்கள் மாற வேண்டுமா?

மனித நேயம், மானுடம்,

மனித பண்புகள்,சக உயிர்களை நேசித்தல்

 இவை எல்லாம் மறைந்து வருகிறதா?

கேள்விகள், கேள்விகள், கேள்விகள்..................

பதிலே இல்லாத ,

பதிலே தெரியாத

கேள்விகள்!!!!!!!!!

யாராவது கண்டுபிடியுங்கள்...

பகிர்ந்து கொள்ளுங்கள்.....

இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம் .







 

கருத்துகள் இல்லை: