21-12-2011 புதன் கிழமை காலை 7 .24 மணிக்கு, சனி பகவான்
கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சனி பகவானை கொண்டு பயம் தேவை இல்லை.
அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில்
நீதி தவறாதவர் சனீஸ்வரன்.
சனீஸ்வரனைப்போல் கெடுப்பாரும் இல்லை,
கொடுப்பாரும் இல்லை என சோதிடம் கூறுகின்றது.
இராசிகளில் சனீஸ்வரன் சஞ்சரிக்கும் போது
பல கஸ்டங்களையும் நஸ்டங்களையும்
தந்து துன்பப்படுத்திய சனீஸ்வரன்
இவ் இராசிகளைக் கடந்து
அடுத்த ராசிக்கு செல்லும் போது
நஸ்டங்களை ஈடுசெய்யும் வகையில்
கொடுத்து விட்டுச் செல்வார் என்பது ஐதீகம்.
சனி பகவான் காயத்ரீ:
காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்தோ மத்த: ப்ரசோதயாத்
பலனடையும் ராசிகள்-
ரிஷபம், சிம்மம், தனுசு.
சுமாரான பலன் பெரும் ராசிகள்-
மேஷம், மிதுனம், மகரம், கும்பம்.
பரிகார ராசிகள்-
கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மீனம்.
ஏழரை சனி -
கன்னி- கடைசி இரண்டரை ஆண்டுகள்
பாதச் சனி, வாக்குச் சனி
துலாம்- இரண்டாம் கட்டம் ஜென்மச் சனி
விருச்சிகம்- ஏழரை சனி ஆரம்பம், விரயச் சனி
அஷ்டமச் சனி -
மீனம்- இது ஏழரை சனிக்கு நிகராகவோ,
அதற்கு அதிகமாகவோ கஷ்டம் தரும் என்பர்.
சனிப்பெயர்ச்சி பலன்கள்---
மேஷம்-
கண்ட சனி வருகிறது.
பலன்- 55 /100
பரிகாரம்- சிவபெருமான் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசுவண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே!
ரிஷபம்-
ஜமாயுங்கள்
பலன்- 90 /100
பரிகாரம்- ராமபிரான் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
நாடிய பொருள் கைகூடும்; ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாக்கும்; வேரியம் கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டு அழிய, வாகை
சூடிய சிலை இராமன் தோள்வலி கூறுவோர்க்கே!
மிதுனம்-
புண்ணியம் செய்திருந்தால் தப்பிக்கலாம்.
பலன்- 60 /100
பரிகாரம்-லட்சுமி வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
திருமகளே!திருப்பாற் கடலூடு அன்று தேவர் தொழ
வருமகளே! உலகெலாம் என்றென்றும் வாழ வைக்கும்
ஒருமகளே! நெடுமால் உரத்தே உற்று, வரம் பெரிது
தருமகளே! தமியேன் தலைமீது நின்தாள் வையே!
கடகம்-
அர்த்தாஷ்டம சனி வருகிறது
பலன்- 50 /100
பரிகாரம்- முருகபெருமான் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனும் நீ அலையோ
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய் முருகா! சுர பூபதியே.
சிம்மம்-
ஏழரை சனி முடிகிறது.
பலன்- 80 /100
பரிகாரம்- வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி
அல்லது
நவக்கிரக சந்நிதியில் குரு வழிபாடு
குரு
பாட வேண்டிய பாடல்-மறைமிகு கலைநூல் வல்லோன்
வானவர்க்கு அரசன் மந்த்ரி
நறைசொரி கற்பகப் பொன்நாட்டினுக்கு
அதிபனாகி நிறைதனம் சிவிகை மன்றல்
நீடு போகத்தை நல்கும்
இறைவன் குரு வியாழன்
இணையடி போற்றி போற்றி!
கன்னி-
ஏழரை சனியின் கடுமை குறையும்.
பலன்- 55 /100
பரிகாரம்- சாஸ்தா வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
புவிகாக்கும் இருவர் வயிற்றில்
பூலோகம் காக்கப் பிறந்தவரே!
மலைக்கு வரும் பக்தர்
மனதில் சரணமாய் ஒலிப்பவரே!
சங்கடம் நீக்கி அருள் புரியும்
சம்சாரக் கடல் கடந்தவரே!
பிரம்மச்சர்ய குலவிளக்கே!
பிரம்மனின் கெடுவிதியை மாற்றுவீரே!
துலாம்-
ஏழரை சனியின் உச்சம்.
பலன்- 50 /100
பரிகாரம்- சக்கரத்தாழ்வார் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
ஆயிரம் பெயர் கொண்டவனின்
அழகுக் கையில் சுழல்பவரே!
அன்புவழி நடப்போர் சங்கடம்
அழிக்க துள்ளியோடி விரைபவரே!
கஜேந்திரனின் காலைப் பிடித்த
கடுமுதலை முதுகை அறுத்தவரே!
பாவத்தை வேரறுக்கும்
பரம்பொருளே!காத்தருள்வாய்.
விருச்சிகம்-
ஏழரை சனி வருகிறது
பலன்- 55 /100
பரிகாரம்- லட்சுமி நரசிம்மர் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
ஆடிப்பாடி அகம் கரைந்து இசை
பாடிப்பாடி கண்ணீர் மல்கி, எங்கும்
நாடிநாடி நரசிங்கா என்று
வாடி வாடும் இவ்வாள் நுதலே!
தனுசு-
வசந்தம் வருகிறது
பலன்- 85 /100
பரிகாரம்- செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆகி கியாதியுடையாள் சரணம் அரண் நமக்கே!
மகரம்-
வேலையில் கவனம்
பலன்- 60 /100
பரிகாரம்- பெருமாள் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே வேங்கடவா நின்கோயில் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே!
கும்பம்-
கஷ்ட காலம் போகுது.
பலன்- 65 /100
பரிகாரம்- ஆஞ்சநேயர் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக
ஆருயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்.
மீனம்-
அஷ்டமத்து சனி வருகிறது.
பலன்- 50 /100
பரிகாரம்- பைரவர் வழிபாடு
பாட வேண்டிய பாடல்-
கயிரவ நாணமலர்க் கவின் கணார் மயற்
செயிரவ நாடொறும் இயற்றியே திரி
யுயிரவ நானென வொறாது காத்தருள்
வயிரவ நாதனை வணங்கி வாழ்த்துவாம்.