வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 13, 2011

தைத் திங்களே வருக

பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
சூரியன் மகர ராசியில், அதாவது பூமத்திய ரேகையிலிருந்து வடக்குப் பக்கம் போக ஆரம்பிக்கும் முதல் நாள் நமது பொங்கல் திருநாள். சூரியன் இத்தகைய நிலையிலுள்ள காலத்தை சமஸ்கிருதத்தில் உத்தராயணம் என்பார்கள்.
பொங்கலுடன் புத்தாண்டும் பிறக்கிறது .இரெட்டை கொண்டாட்டம்.
உலகுக்கு உணவளித்த உழவர்
வாழ்வுக்கு வளம் அளித்த
ஆதவன் தாள் பணிவோம்;
கொடையாய்ப் பேயட்டும் மழை
நிரம்பி வழியட்டும் நீர்நிலை
பொன்னாய் விளையட்டும் பூமி
பாலாய் பொங்கட்டும் வாழ்வு
கரும்பாய் இனிக்கட்டும் மனது.
பசிக்கு உணவளிக்கும் உத்தமர்
உயர்வாய் வாழ தோள் கொடுப்போம்.
இந்த புத்தாண்டு எல்லோருக்கும், அமைதியையும், நல்ல நினைவுகளையும், செல்வத்தையும் தரும் குறைவில்லா ஆண்டாக அமைய எனது மனமார்ந்த
வாழ்த்துக்கள்.

வெள்ளி, டிசம்பர் 31, 2010

புத்தாண்டே வருக!!!

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
கடந்த வருடம் நடந்தவை நடந்து முடிந்தவை;
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என நினைப்போம்;
கடந்தகால தவறுகளை படிப்பினையாகக் கொள்வோம்;
நிகழ்கால செயல்களை முறைப் படுத்துவோம்;
நல்லவைகளையே நினைப்போம்;
அல்லாதவைகளை விலக்குவோம்;
சலனங்களையும், சஞ்சலங்களையும் தூக்கிப் போடுவோம்;
உறுதிகொண்ட நெஞ்சினராய் உலாவுவோம்;
பகுத்தறியும் அறிவினைப் பெறுவோம்;
நல்லதொறு இலக்கினை நோக்கிப் பயணிப்போம்;
வாழ்வின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்;
அன்பும், அறிவும், பாசமும், நேசமும், பண்பும், பணிவும், கருணையும் உடைய ஒரு மனிதனாய் வாழ உறுதி கொள்வோம்.